Mangalyam thanthu naane 5
Mangalyam thanthu naane 5
தாரு போனை எடுத்தவுடன் “எனக்கும் உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாதே…நீயே உன்னை பத்தி சொல்லு” என்றவன் பாவமாக கேட்க “அதெல்லாம் முடியாது.நீங்க எனக்கு சொன்னது தான் உங்களுக்கும்” என்று சிறுபிள்ளைத் தனமாக சொல்ல சிரித்தவன்
“சரி..எனக்கு உன்னோட புல் நேம் தாரிகான்னு தெரியும்.அதனால நீ என்கிட்ட உன்ன பத்தி சொல்லலாம்.நீயும் என் புல் நேம் கண்டுபிடிச்சு என்கிட்ட சொல்லு நானும் என்ன பத்தி சொல்லற.பட் என் நேம் யார்கிட்டையும் கேட்கக்கூடாது” என்று ஒப்பந்தம் போட
“அதெல்லாம் முடியாது.அ டீல் இஸ் அ டீல்” என்றாள்.
”ஒய் லூசு உங்க வீட்ல தான் உங்கிட்ட என்ன பத்தி யாரும் சொல்லல.பட் என்கிட்ட உன்ன பத்தி எல்லாம் சொன்னாங்க” என்க “அப்ப எல்லாம் தெரிஞ்சுட்டு தான் என்ன ஒட்டுனிங்களா?” என்று கோபமாக கேட்க
“பரவாயில்லையே..செம்ம பாஸ்ட்டா கண்டு பிடிச்சிட்ட”என்று அதற்கும் வார “போங்க… போங்க…என்கிட்ட பேசாதிங்க” என்று கோபித்துக்கொண்டாள்.
“நீ சுப்ரியா கூட விளையாடும்போது கூட சின்ன குழந்தை அதனால அவளுக்கு தகுந்த மாதிரி விளையாடுறன்னு நினைச்ச…பட் இப்ப தான தெரியுது நீ உண்மையாவே பாப்பான்னு” என்று கலாய்க்க
“நான் ஒன்னும் பாப்பா இல்லை” என்றவள் சொல்ல “இப்படி கிண்டல் பண்ணறதுக்கு எல்லாம் கோவுச்சுகிட்டா பாப்பான்னு சொல்லாம வேற என்ன சொல்லறது?” என்று கேட்க
“நான் ஒன்னும் கோவுசுக்கல..சும்மா நடிச்ச” என்றவள் நாக்கைக் கடித்துக்கொண்டு சொல்ல “ம்ம்ம்.. ம்ம்ம்…நம்பிட்ட…நம்பிட்ட” என்றவன் மீண்டும் ஓட்ட “ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்” என்றவள் கெஞ்ச “சரி.. சரி…பொழச்சுப் போ” என்றுவிட்டான்.
என்ன பேசினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.ஆனால் விடியக்காலை மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.தாருவுடன் பேசியதில் அவளின் சிறுபிள்ளைத் தனத்தையும் பக்குவப்படாத மனதையும் பற்றி ப்ரியன் நன்றாகப் புரிந்துகொண்டான்.
“மணி மூணு ஆச்சு…தூங்கலாமா?” என்று ப்ரியன் கேட்க அரைமனதாக சம்மதித்தவள் “குட் நைட்” என்று கூறி போனை வைத்தாள்.போனை வைத்ததும் கூட தூங்காமல் ப்ரியனின் முழுப்பெயரைக் கண்டுபிடிப்பதற்காக முகநூலில் நுழைந்தவள் ப்ரியன் என்று டைப் செய்து வந்த எல்லா ப்ரோபைல்களையும் பார்த்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்பு ப்ரியனின் முகம் இருந்த அக்கௌன்ட் அவள் கைகளுக்கு சிக்கியது.அதில் ‘கவிப்ரியன் முத்துசுவாமி’ என்ற பெயர் இருக்க ‘ஒ நம்ம ஆள் பேரு கவிப்ரியனா?நல்லா தான் இருக்கு.டேய் கவி நாளைக்கே உங்கிட்ட பேர சொல்லி அசத்துற பார்’ என்று நினைத்தவள் அவனின் அக்கௌன்ட்டுக்குள் நுழைய ஒரு போட்டோவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
‘பொண்ணு நானே எதையும் பிரைவசி போட்டு வைக்கல.பையன் இவன் ஏன் இப்படி இருக்கான்.நாளைக்கு இதை பத்தியும் கேக்கணும்’ என்று நினைத்தவள் பின்பு அவனுடன் பேசிய தருணங்களை அசைப்போட்டுக் கொண்டு அப்படியே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை எழும் பொழுதே உற்சாகமா எழுந்தவள் நேரத்தைப் பார்க்க அது பத்து எனக் காட்டியது.’என்னது மணி பத்து ஆச்சா?இவ்வளவு நேரம் இந்தப் பாட்டி நம்மளை எப்படி தூங்கவிட்டுச்சு?இன்னைக்கு நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறோம்” என்று நினைத்தவள் பல் துலக்கிவிட்டு கீழே செல்ல
சௌந்தரம் பாட்டி திட்டாமல் “இப்ப தான் எழுந்தியா தாரு?கல்யாணம் பண்ணிப் போறதுக்குள்ள எல்லா வேலையும் கத்துக்கணும் சரியா?” என்று கேட்க அவளும் சரி என்று தலையை ஆடினாள்.
சமையலறைக்குள் சென்றவள் தன் அன்னையிடம் பால் கேட்க முறைத்தவர் “ஏன் டி இன்னும் நாலு மாசத்துல கல்யாணத்த வெச்சுக்கிட்டு பத்து மணி வரைக்கும் யாராச்சும் தூங்குவாங்களா?” என்க “அட விடு விசா…நம்ம கூட இருக்க வரைக்கும் அவள் இஷ்டப்படி இருக்கட்டும்.பொறுப்பு வந்தா தானா மாறிருவா…” என்று ருக்குமணி அவளுக்கு பரிந்து பேசினார்.
உள்ளே இவர்களின் வாக்குவாதம் கேட்டு சமையலறைக்குள் நுழைந்த பரந்தாமனைப் பார்த்ததும் “குட் மோர்னிங் ப்பா” என்று தாரு சொல்ல “குட் மோர்னிங் தங்கம்” என்றவர் மனைவியிடம் திரும்பி “இங்க என்ன சத்தம்?” என்று கேட்க
“ஆமா பொண்ண ஒன்னு சொல்லிறக் கூடாதே…உடனே வந்துருவாரு” என்று அவருக்கு கேட்குமாறு முனுமுனுக்க “ஏன் மா…அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணறத பாத்து பொறாமை படற?வேணும்னா உன் அப்பாவை போய் கூப்ட்டிட்டு வந்து உனக்கு சப்போர்ட் பண்ண சொல்லு” என்று தாயை வம்புக்கிளுதாள்.
இப்படி பேசியபடியே காலை உணவினை உண்டு முடித்தவள் தன் ரூமிற்குச் சென்றாள்.ப்ரியனுக்கு அழைக்கலாமா?வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தியவள் பின்பு அம்முடிவை கைவிட்டவளாய் வாட்ஸ் ஆப்பைத் திறந்தாள்.
அதில் அவனிடமிருந்து ஏற்கனவே “குட் மோர்னிங்” என்ற மெசேஜ் வந்திருக்க தாருவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.பதிலுக்கு “குட் மோர்னிங்”என்ற மெசேஜ் அனுப்பியவள் அரை மணி நேரம் ஆகியும் அவன் பார்க்காததால் அவனுக்கு அழைத்தாள்.
அந்த அழைப்பு எடுக்கப்படாமல் போகவே மீண்டும் அழைப்போமா என்ற யோசனையை கைவிட்டவள் அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.
விசாலாட்சி “மணி மூணு ஆச்சு டி.நேரத்துக்கு சாப்பிட்டா தான ஒடம்பு நல்லா இருக்கும்?” என்று எழுப்ப எழுந்தவள் “நீ போ ம்மா..நான் வர்ற” என்றுவிட்டு போனை எடுத்தாள்.”எப்பப் பார்த்தாலும் அந்த போன நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது.அப்படி அதுல என்ன தான் இருக்கோ தெரியலை” என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.
போனை எடுத்துப் பார்க்க அதில் ப்ரியனிடம் இருந்து “கொஞ்சம் வேலை.ப்ரீ ஆகிட்டு கூப்பட்ற” என்ற பதில் வந்திருந்தது.அவனிடமிருந்து பேச்சுக்களை எதிர்பார்தவளின் மனம் இந்த பதிலில் கொஞ்சம் சோர்வடைந்தது.மூளை அவனுக்கு வேலை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சாப்பிடச் சென்றவள் ஏதோ கொறித்துவிட்டு மீண்டும் வந்து படுக்கை அறையில் முடங்கினாள்.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவனிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றும் வரவில்லை.
.ஆறு மணி வரை அவனிடம் இருந்து மெசேஜ் வராததினால் ‘காலைல இருந்து என்கிட்ட பேச இவங்களுக்கு பத்து நிமிஷம் கூட டைம் இல்லையா?வேலை இருந்தா கூட அப்படியே எனக்கு மெசேஜ் பண்ணிட்டே பார்க்க வேண்டியது தான?’என்ற எண்ணம் அவள் மனதில் வந்தது.
ஹாலில் பரந்தாமன் ராஜு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.ஆனால் மனம் மட்டும் ப்ரியனையே நினைத்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்தவள் பின்பு மீண்டும் அறைக்குள் நுழைந்து போனைப் பார்த்தாள்.அவனிடமிருந்து எந்தவொரு மெசேஜ்ஜும் வரவில்லை.பின்பு தன் நண்பர்களிடம் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்தவள் அவர்களுக்கு போன் செய்து பேசினாள்.
போனை வைத்தவுடன் கார்த்திக் அவள் ரூமிற்குள் நுழைந்தான்.”ஏன் தாரு பேஸ் டல் அடிக்குது?” என்று முகத்தைப் பார்த்துக் கேட்க “இல்லையே நல்லா தான் இருக்க” என்று சமாளித்தவள் முகத்தை நன்றாக வைத்துக் கொண்டாள்.
“நேத்து என்கிட்ட மச்சான் பத்தி டிடைல்ஸ் கேட்ட.பட் அப்பா கிட்ட வேற விஷயம் பேசிட்டு இருந்ததுனால உங்கிட்ட சொல்ல முடில” என்று சொல்ல “என்னது மச்சான்னா?” என்று கேட்டவளிடம்
“ஆமா மச்சான் தான்.தங்கச்சி மாப்பிள்ளை எனக்கு மச்சான் தான?” என்றான்.
“பட் நீ அவங்கள மச்சான்னு கூபிட்டா எனக்கு கேட்க செம்ம காமெடியா இருக்கும்” என்றவள் அவன் குரலிலேயே “ப்ரியன் மச்சான்…ப்ரியன் மச்சான்” என்று பேசிக் காண்பிக்க அவள் தலையில் ஒன்று போட்டவன் “இந்த வாய் இருக்கே வாயி…இது இல்லனா உன்னை எல்லாம் நாய் கூட மதிக்காது” என்று சிரிக்க அவனுடன் அவளும் இணைந்து கொண்டாள்.
இன்று ருக்மணி இருவரையும் சாப்பிட அழைக்க “சாப்டுட்டு வந்து பேசலாம்” என்றவன் டைனிங் டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மீண்டும் போனை எடுத்துப் பார்த்தவள் ஒரு பெரு மூச்சுடன் சாப்பிடச் சென்றாள்.
சாப்பிட்டு முடித்தவுடன் “உறுதி வார்த்தைக்கு போய் சேரி நாளைக்கு எடுத்துட்டு வந்தறலாம்.அப்போ தான் ப்ளோவுஸ் எல்லாம் தைக்க கொடுத்து வாங்க முடியும்” என்று ருக்குமணி சொல்ல தலையாட்டியவள் தன் தந்தையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக்கிற்கு தன் நண்பன் அழைத்திருக்க போனில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.பத்து நிமிடம் வரை பொறுத்துப் பார்த்தவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
சரியாக பத்து மணிக்கு “கால் பண்ணட்டா?” என்ற மெசேஜ் ப்ரியனிடம் இருந்து வர “ஹ்ம்ம்” என்று தான் கோபமாக இருப்பதைக் காட்ட அனுப்பினாள்.
“ஹலோ” என்றவன் சொல்ல சிறிது நேரம் தாரு ஒன்றும் பேசவில்லை.அவன் “ஹலோ… ஹலோ… “என்று அதற்குள் மூன்று முறை சொல்லிவிட “ஹலோ” என்றாள்.
“என்ன தூக்கமா?வாய்ஸ் ஒரு மாறி இருக்கு” என்று கேட்க கோபத்தில் “ஆமா நல்லா தூங்கிட்டு இருந்த” என்று கடுப்பாகக் கூற “என்ன ஆச்சு கோபமா?” என்றான்.
அவள் ஒன்றும் பேசாமல் இருக்க “சொல்லு …கோபமா?நீ சொன்னாதான எனக்குத் தெரியும்” என்று கேட்க “காலைல இருந்து ஒரு பை மினுட்ஸ் கூட என்கிட்ட பேச உங்களுக்கு டைம் கிடைக்கலையா?” என்றதற்கு
“ஓ…அதுக்குத் தான் மேடமுக்கு கோபமா?” என்றுவிட்டு சிரித்தவன் “ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்ட?” என்று கேட்க ‘என்ன சமாதானம் பண்ணாம இவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்க’ என்று நினைத்தவள் “ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.
“நம்ம சிறு தானியம் எல்லாம் இங்க இருந்து பாரின்க்கு எக்ஸ்போர்ட் பண்ணறோம்.பட் ஜெர்மனிக்கு எக்ஸ்போர்ட் பண்ணறதுல மட்டும் இவ்வளவு நாள் கொஞ்சம் ப்ரோப்ளம் இருந்துச்சு.இன்னைக்கு அது சால்வ் ஆகிடுச்சு.எல்லாம் நீ வீட்டுக்கு வரப் போற நல்ல நேரம் தான்னு அம்மா சொன்னாங்க” என்றவன் சொல்ல தன் கோபத்தை மறந்தவள்
“அத்தை செம்ம ஸ்வீட்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் உண்மையாக.”அவங்க பையன பிடிச்சிருக்கா?” என்றவன் குறும்பாகக் கேட்க “ம்ம்ம்…” என்று சிறிது நேரம் யோசனை செய்தவள் சிரித்துக்கொண்டே “இல்லை” என்றாள்.
“அடிப்பாவி” என்றவன் சொல்ல “எனக்கு இன்னும் உங்க மேல இருக்க கோபம் போல” என்று சொல்ல “உண்மையாவே நீ பாப்பா தான் டி.உன்ன எல்லாம் வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்” என்றவன் பெருமூச்சுவிட
“ஓ…அப்படியா?அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் என்கூட பேச வேண்டாம்” என்றவள் உடனே போனை வைத்துவிட்டாள்.ப்ரியன் விளையாட்டுக்கு சொன்னதை இவள் மிக சீரியஸ்சாக எடுத்துக் கொண்டாள்.கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது.
போனைத் தூக்கிப் போட்டவள் ‘காலைல இருந்து எப்ப பேசுவான்…எப்ப பேசுவான்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.ஆனா இவன் என்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம் சொல்லறான்’ என்று நினைத்தவள் குப்புறப்படுத்து விட்டாள்.