அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு ப்ரியனுடன் தாரு தாரிகா கவிப்ரியன்னாக அவர்கள் வீடு செல்லும் நேரம் இது!

பிறந்த வீட்டினர் அனைவரும் கண்கலங்க தாருகாவும் தன் தந்தையை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.என்னதான் அவள் தன் நாயகன் உடன் அவன் வீடு சென்றாலும் அவள் முதல் நாயகன் என்றும் அப்பா தானே!

ப்ரியனிற்கே இச்சூழல் கொஞ்சம் கனமானதாகத் தான் இருந்தது.இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகியும் இருவரும் அழுது கொண்டே இருக்க சௌந்தரம் பாட்டி தான் இருவரையும் சமாதானப்படுத்தி தாருவை ப்ரியனின் கையில் பிடித்துக் கொடுத்தார்.

அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க சந்தியா அவளை தோல் தாங்கினாள்.பரந்தாமனின் முகம் தெளிவில்லாமல் மகளையே பார்த்துக் கொண்டிருக்க மாமனாருடன் தனியாகப் பேசச் சென்றான் மருமகன்!

அவர் கையைப் பிடித்தவன் “உங்களோட அளவுக்கு அவளை என்னால நல்லா பார்த்துக்க முடியுமா தெரியலை.பட் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்” என்று உறுதி கொடுக்க மருமகனை அணைத்துக்கொண்டவர் கண்கள் இப்பொழுது ஆனந்தத்தில் கலங்கின.

இப்பொழுது அவர் முகம் சற்று தெளிவடைந்து இருக்க மகளை சிரித்த முகமாகவே வழி அனுப்பினார்.ஆனால் தாருவின் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.

காரில் ஏறி அமர்ந்ததும் ப்ரியனின் தோளில் சாய்ந்து கண் முடியவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வர அதைத் துடைத்தவன் ஆறுதலாக தலையை தடவிக் கொடுத்தான்.

அப்படியே அவன் தோளில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தவள் வீடு வந்ததும் ப்ரியன் எழுப்பியதும் தான் எழுந்தாள்.தூங்கி எழுந்ததில் மனம் சற்று தெளிவடைந்து இருக்க ப்ரியனைப் பார்த்துச் சிரித்தவள் கிழே இறங்கினாள்.

சந்தியாவும் சர்மிளாவும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.முதலில் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டவள் பின்பு சமையலறையில் உப்பு,புலி,பருப்பு,சர்க்கரை,தண்ணீர் எல்லாம் தொட்டுக் கும்பிட்டாள்.

ப்ரியனின் பாட்டி பால் பழம் கொடுக்க ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டு சாப்பிட்டனர்.தாருவிற்கு பழம் பிடிக்காத காரணத்தினால் தாருவிற்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு முழுவதையும் அவன் சாப்பிட்டுவிட்டான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளவயதினர் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.பின்பு குடத்தில் தண்ணீர் விட்டு மோதிரம் எடுக்கும் விளையாட்டு ஆரம்பமானது.

இருவரும் தண்ணீருக்குள் கை விட ப்ரியன் சிறிது நேரம் தாருவின் கையைப் பிடித்து சீண்ட அவனை எல்லோர் முன்பு முறைக்கவும் முடியாமல் அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து விட தாருவின் கையில் தங்க மோதிரம் வந்துவிட்டது.இப்படியாக பொழுது இனிமையாக கழிந்தது.

முதலிரவு!

படபடக்கும் நெஞ்சோடு தாரு உள்ளே நுழைய ப்ரியனை அவளால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.”ஹலோ மேடம் ஜி!இந்த சீன்ல நீங்க என்னோட கால்ல விழனும்”என்றவன் சொல்ல தாருவிற்குள் இருந்த வெட்கம் இப்பொழுது காணாமல் போயிருந்தது.

அவனை இரண்டடி போட்டவள் “போ டா”என்று சொல்ல அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன் அவள் அதரங்களில் விளையாடத் தொடங்கினான்.

@@@@@@@@@@@@@@@@@@@

நான்கு ஆண்டுகள் கழித்து,

“தாரு!தாரு!”என்ற மழலையின் குரல் வீடு முழுவதும் நிறைந்திருந்தது.”என்ன டா தங்கம்?” என்ற தகப்பனிடம் “தாரு என்னோட சாக்லேட்ட மறைச்சு வெச்சுட்ட.டேபிள் மேல இருந்தத காணோம்” என்றாள் கவிரிகா!கவிப்ரியன் தாரிகாவின் தவப்புதல்வி!மூன்று வயதே ஆன சின்னச்சிட்டு!

ஜாடையில் அப்படியே தந்தையை உரித்து வைத்திருந்தாள்.ஆனால் குணம் அப்படியே தாரிகவைப் போல்.விசாலாட்சியை தாரிகா ஆட்டி வைத்தது போல் இப்பொழுது நம் தாரிகவை ஆட்டி வைக்கிறாள் கவிரிகா!

மகளின் சத்தத்தில் ரூமிற்குள் வந்தவள் “என்ன டி?” என்று கேட்க “என்னோட சாக்லேட் எங்கே?” என்றாள் அவளை முறைத்து இடுப்பில் கைவைத்தவாரு.

“காலைல தான ரெண்டு சாக்லேட் சாப்பிட.நாளைக்கு சாப்பிடலாம்.எல்லாம் உங்க அப்பாவே சொல்லணும்.என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தந்தறது”என்று சொல்ல

“இதை போய் முதல்ல உங்க தாத்தா கிட்ட உங்க அம்மாவ சொல்ல சொல்லு டா செல்லம்”என்று மகளைத் தூக்கிக் கொஞ்சியபடியே ப்ரியன் சொல்ல அவன் முதுகில் ஒன்று போட்டவள் சமையல் அறைக்குச் சென்றாள்.

இப்படியாக நாள் ஒரு மேனியுமாக பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் வாழ்க்கை நன்றாகச் சென்றது.  

இப்பொழுது தாரு ஒரு பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்டாள்!”ரொம்ப நல்ல பொறுப்பான பொண்ணு”என்று எல்லோரும் அவளைப் புகழ்ந்தனர்.

ஆனால் சில நேரங்களில் அந்த சிறுபிள்ளைத் தனம் தழைத்தொங்கும் பொழுது ப்ரியனால் ஒன்றும் சொல்ல முடியாது.அவள் கேட்டதை செய்து கொடுத்துவிடுவான்.

சில நேரங்களில் இவன் அவளுக்கு விட்டுக் கொடுப்பதும் அவள் இவனுக்கு விட்டுக்கொடுப்பதும் என இவர்கள்  வாழ்க்கை மிக நன்றாகச் சென்றது.

முற்றும்.

error: Content is protected !!