Paadal thedal- 15(1)

15

கரிசனம்

கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் வீடு என்னவோ போலிருந்தது.

அன்புவுக்கும் மீனாவுக்கும் விடுமுறை அன்று. ஆனால் மேல் வகுப்புகளுக்கு பள்ளி இருந்ததால் அவன் மட்டும் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பினான்.

மாலை நேரம் வீட்டிற்கு திரும்பிய செழியன் தன் கைபேசியில் உரையாடி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல… இரண்டு நாள் மூணு நாள்னு ஒரெடியா நாளை கடத்திட்டு இருக்கீங்க… நீங்க சாமி எல்லாம் பார்த்தவரைக்கும் போதும் ஒழுங்கா வீடு வந்து சேர்ற வழியை பாருங்க… சொல்லிட்டேன்” என்று கண்டிப்பாக தன் தாயிடம் பேசி கொண்டே உள்ளே வந்தான்.

செழியனின் வருகையை பார்த்து அன்புவும் மீனாவும் உற்சாகமாய் துள்ளி குதித்து கொண்டு, “அப்பா” என்று அவன் காலை கட்டி கொண்டனர்.

வாஞ்சையாக தம் மகள்களை பார்த்து புன்னகை புரிந்தவன் இருவரின் தலையை கோதி கொண்டே, தன் பேசியில் உரையாடலை தொடர்ந்தான்.

“வீட்டுக்கு வந்துட்டேன் ம்மா… உங்க பேத்திங்க கிட்ட பேசுறீங்களா?” என்று கேட்டுவிட்டு,

“இந்தாங்க… பாட்டி தாத்தா கிட்ட பேசுங்க” என்று தன் பேசியை அவர்களிடம் கொடுக்க இருவரும் ஆர்வம் பொங்க அதனை வாங்கி,

நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு பேசினர். அதுவும் இவர்கள் பாட்டுக்கு நடந்த கதையெல்லாம் ஒன்றுவிடாமல் அளந்து கொண்டிருக்க,

செழியன் அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்து கொண்டே தன் அறைக்கு போக ஜானவி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தாள்.

ரேஷ்மாவும் சரவணனும் அவளிடம் சரமாரியாக திட்டு வாங்கி கொண்டிருந்தனர். அதிலும் சரவணனுக்குத்தான் அதிக பட்ச திட்டு!

ஜானவி செழியன் உள்ளே வருவதை பார்த்து, “என்ன செழியன்… இன்னைக்கு ஸ்பெஷல் க்ளேஸா… ரொம்ப நேரம் ஆகிடுச்சு?” என்று கேட்க,

“க்ளேஸ் இல்ல… டீச்சர்ஸ்கெல்லாம் மீட்டிங்” என்றான் அவன் சோர்வோடு!

“உங்க பிரின்சிபால் ரம்பம் போட்டிருப்பாங்களே?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… ஆமா ஹெட் ஹேக் வந்திருச்சு… ஒரு காபி கிடைக்குமா?” என்றான்.

“நீங்க போய் ஃப்ரெஷ் ஆகுங்க… நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி கொண்டே அவள் எழுந்து கொள்ள, ரேஷ்மாவும் சரவணனும் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர்.

“என் மூஞ்சில என்ன இருக்கு… வேலையை பாருங்க” என்று அவள் சொல்ல,

“இல்ல க்கா… சார் வந்ததும் உங்க சீரியஸ் பேஸ் ஸ்மைலிங் பேஸா மாறிடுச்சே… அதான் பார்க்கிறோம்” என்றான்.

சரவணனை பார்த்து முறைத்த ஜானவி, “என்ன… இப்படியெல்லாம் பேசி தப்பிச்சிக்கலாம்னு பார்க்குறியா… அதெல்லாம் என்கிட்ட நடக்காது… ஒழுங்கா வேலையை முடிசிட்டுத்தான் போகணும்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு சமையலறை நோக்கி விரைய,

“இன்னைக்கு மார்க்கெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு இல்ல ரேஷு” என்றான்.

“ஆமா… உன்னை மாதிரியே படு மொக்கை போடுது” என்று அவனிடம் திரும்பி கூட பாராமல் ரேஷ்மா சொல்ல,

“நான் மொக்கையா… இருக்கட்டும் உன்னை அப்புறமா வைச்சுக்கிறேன்” என்றான் சரவணன் கடுப்போடு!

“அக்கா வரட்டும்… நீ பேசிகிட்டே இருக்கேன்னு சொல்றேன்” என்று ரேஷ்மா சொல்ல,

“நர்ஸரி க்ளேஸ் படிக்கிற மாறி… மிஸ் மிஸ் இவன் பேசிக்கிட்டே இருக்கான்னு… சொல்ல போறியாக்கும்” என்று சரவணன் கிண்டலடித்து சிரிக்க ரேஷ்மா தன்னிடத்திலிருந்து கோபமாக எழுந்து கொண்டாள்.

“ஐயோ உட்காரும்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன்” என்று பயபக்தியோடு அவன் படுபவ்யமாக கெஞ்சிய பிறகு போனால் போகிறதென்று அவனை மன்னித்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள் ரேஷ்மா. சரவணனும் முடிந்தும் முடியாமல் தன் வேலையை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அந்தச்சமயம் சமையலறை விட்டு காபி கோப்பையோடு வெளியே வந்த ஜானவி அன்புவும் மீனாவும் பேசியில் இன்னும் விடாமல் உரையாடி கொண்டிருப்பதை பார்த்தாள்.

“இன்னுமாடி ரெண்டு பேரும் ஃபோன் பேசிகிட்டு இருக்கீங்க… போதும் பேசினது… ஒழுங்கா ஃபோனை கொடுங்கடி இங்க” என்று அவர்களை மிரட்டி அந்த பேசியை வாங்கி கொண்டு அறை வாசலில் சென்று நின்றவள், “செழியன்” என்று அழைத்தாள்.

“உள்ளே வாங்க ஜானவி” என்று அவன் அழைக்கவும் அவள் உள்ளே நுழைந்தான்.

ஒன்றாக ஒரே அறையில் தங்கினாலும் அவன் இருக்கும் போது இவளும் இவன் இருக்கும் போது அவளும் அனுமதியின்றி உள்ளே நுழைவதில்லை.

காபி கோப்பையோடு ஜானவி உள்ளே நுழைய செழியன் தன் முகத்தை துண்டால் துடைத்து கொண்டிருந்தான்.

அவள்,”காபியை இங்கே வைக்ககிறேன்” என்று சொல்லி அதனை படுக்கை அருகிலிருந்த மேஜை மீது வைக்க, “ஹம்ம் ஓகே” என்று தலையசைத்து படுக்கையில் அமர்ந்து காபியை எடுத்து பருக தொடங்கியவன் அதிர்ந்தான்.

“ஜானவி” என்ற அழைத்து கொண்டே காபியை மேஜையில் மீண்டும் வைத்துவிட்டு எழுந்திருக்க,

“என்ன செழியன்?” என்று வெளியே போக இருந்தவள் திரும்பி வந்தாள்.

“ஏன் ஜானவி இப்படி பண்ணீங்க?” என்று அவன் அழுத்தமான சீற்றத்தோடு கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன காபில எதாச்சும் கம்மியா இருக்கா? நான் எல்லாம் கரெக்டாதானே போட்டேன்” என்று புரியாமல் கேட்டாள்.

“அது இல்ல… ரஞ்சனி போட்டோஸ் எங்கே? எங்க கழட்டி வைச்சீங்க?” என்று அவன் அவளை முறைத்து கொண்டே கேட்க, அவளும் வெறுமையாக இருந்த சுவற்றை பார்த்து அதிர்ந்து நின்றாள்.

“ஜானவி… உங்களைத்தான் கேட்கிறேன்… போட்டோஸ் எங்கே? என்றவன் மீண்டும் அழுத்தமாக கேட்க அவள் தனக்கு தெரியாது என்று சொல்லி திரும்ப,

அவனோ,”வாட்ஸ் ராங் வித் யு? ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டான்.

அவன் முகத்தில் அந்தளவு டென்ஷனை அவள் அப்போதுதான் பார்க்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவன் நிதானமாக பேசியே பார்த்தவளுக்கு அவன் அப்படி கடுமையாக பேச அவள் அதிர்ச்சியோடும் கலக்கத்தோடும் நின்றாள்.

அதுவும் ரஞ்சனி படங்கள் அங்கே இல்லாமல் போனதற்கு அவள்தான் காரணம் என்று அவன் முடிவு செய்துவிட்டு பேசுவது அவளுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

ஜானவி மெளனமாக நின்று யோசிக்க செழியன் கடுப்பாகி, “ஜானவி உங்ககிட்டதான் நான் கேட்கிறேன்” என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“ப்ளீஸ்…. கொஞ்சம் அமைதியா இருங்க செழியன்” என்று அவனிடம் நிதானமாக சொல்லிவிட்டு,

“ஏ ! அன்பு மீனா” என்று அங்கேயே நின்றபடி சத்தமாக அழைத்தாள்.

செழியன் குழப்பத்தோடு அவளை பார்க்கவும், “என்ன ம்மா… என்ன ஜானும்மா” என்று இருவரும் முந்தியடித்து கொண்டு அவள் அழைப்பிற்கு வந்து நின்றனர்.

அவர்கள் இருவரையும் ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள்,

“எங்க இங்கே இருந்த ரஞ்சு ம்மா போட்டோ?” என்று கேட்க அவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“அன்பு மீனா… உங்ககிட்டதான் கேட்கிறேன்” என்று ஜானவி மிரட்டியதும்,

“மீனாதான் கழட்டினா” என்று அன்பு சொல்ல ஜானவியின் விழிகள் சீற்றமாக மாறி மீனாவை படையெடுத்தது.

மீனா உடனே, “அன்புதான் கழட்ட சொல்லிச்சு” என்று இவள் அவளை போட்டு கொடுத்தாள்.

“அவ கழட்ட சொன்னா நீ உடனே கழட்டிடுவியா… அதுவும் உயரத்தில ஏறி… விழுந்து கிழுந்து வைச்சேனா… உன்னை” என்று ஜானவி மகளிடம் கை ஓங்க,

“ஜானவி வேண்டாம்” என்று செழியன் பின்னிருந்து குரல் கொடுத்தான்.

மௌனமாக தன் கரத்தை இறக்கி கொண்டவள் நிதானமாக அவர்களிடம், “சரி ரஞ்சு ம்மா போட்டோஸ் கழட்டி எங்கே வைச்சீங்க?” என்று கேட்கவும் அன்பு ஓடிச்சென்று அங்கிருந்து கப்போர்ட் ஒன்றை காண்பித்தாள்.

செழியன் அப்போது இறங்கிய குரலில், “சாரி ஜானவி” என்று சொல்லவும்,

அவன் புறம் திரும்பியவள், “தப்பு என் பேர்லதான்… மதியம் ரெண்டு பேரும் உள்ளே விளையாடிட்டு இருந்தாங்க… நான்தான் என்ன செய்றாங்கன்னு கவனிக்காம கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்… சாரி” என்றாள் அவளும் பதிலுக்கு.

செழியன் மனம் வேதனையுற்றது. விசாரிக்காமல் தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று அவன் உள்ளம் வருந்தி நின்றான்.

ஜானவி அப்போது குழந்தைகளிடம்,

“ரெண்டு பேரும் இந்த மாறி வேண்டாத வேலை செய்றது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்… அதுவுமில்லாம மேலே ஏறி விழுந்தா என்ன ஆகுறது… கை கால் அடிப்படாது” என்று கண்டிப்பாக சொல்லி அவர்களை எச்சரிக்கையும் செய்தாள்.

அதோடு அவள் மௌனமாக நின்ற செழியனிடம் திரும்பி, “கையால அடிச்சா கூட தாங்கிக்கலாம் செழியன்… ஆனா வார்த்தையால அடிச்சா அது தாங்கிக்க முடியாது… அது ரொம்ப பெரிய வலி… எனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்கு… ஆனா நீங்க இப்படி யோசிக்காம பேசனதுதான் என்னால தாங்கிக்க முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்ல,

“ஜானவி” என்று செழியன் அவளை குற்றவுணர்வோடு பார்த்தான்.

அவள் மீண்டும் அவன் முகத்தை நேர்கொண்டு பார்த்து,

“கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீங்களா? நான் எதுக்கு செழியன் அவங்க போட்டோவை கழட்டனும்… அதுவும் உங்ககிட்ட கேட்காம” என்று அவள் நிறுத்த செழியனால் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை.

ஜானவி அவனிடம் மேலே எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

ரஞ்சனியின் படங்கள் திடீரென்று இருந்த இடத்தில் இல்லாமல் போனதில் செழியன் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். அந்த சூழ்நிலையில் அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வேகத்தில் அவளிடம் அப்படி கேட்டுவிட்டான்.

ஆனால் இப்போது நிதானமாக யோசிக்கும் போதுதான் அவன் செய்த தவறு அவனுக்கு புரிந்தது.

எத்தனை பொறுமைசாலியாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படும் போது அவர்களின் நிதானமும் யோசிக்கும் திறனும் அடிப்பட்டு போகும். செழியன் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?

செழியன் ஜானவியிடம் அப்படி பேசியதை எண்ணி வருத்தப்பட்டு தலையை பிடித்து கொண்டு படுக்கையில் அமர்ந்திருக்க,

அன்புவும் மீனாவும் மெளனமாக அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் முகத்திலும் வருத்தம் குடிகொண்டிருந்தது.

செழியன் அவர்கள் முகபாவத்தை பார்த்துவிட்டு மெளனமாக தலையசைத்து அருகில் அழைக்க,

அவர்கள் அதே சோக உணர்வோடு அவன் அருகில் வந்தனர்.

“ஏன் நீங்க ரஞ்சும்மா போட்டோவை கழட்டி வைச்சீங்க?” என்று தம் மகள்களிடம் அவன் நிதானமாக கேட்க,

“அன்புதான் ப்பா கழட்ட சொன்னா?” என்றாள் மீனா.

செழியன் பார்வையை அன்புச்செல்வியின் புறம் திருப்பி,

“ஏன் அன்பும்மா?” என்ற கேட்கவும் அவள் அவனை பார்த்து தயக்கத்தோடு,

“இனிமே ஜானும்மாதானே எங்களுக்கு அம்மா… அப்போ அவங்க போட்டோதானே மாட்டனும் இங்கே” என்று குழந்தைத்தனத்தோடு அவள் சொன்ன பதிலில் அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

ஜானும்மாதான் அம்மா என்று அன்புச்செல்வி முழுமனதாக ஏற்று கொண்டதை எண்ணி சந்தோஷம் கொள்வதா இல்லை ரஞ்சனி தன் மகளின் நினைவிலிருந்து அகன்றுவிட்டதை எண்ணி வேதனை கொள்வதா என்று அவனுக்கு புரியவில்லை.

அந்த நொடி செழியன் தம் மகள்கள் இருவரையும் சேர்த்து அணைத்து கொண்டான்.

ஜானவியை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவன் மனம் ஏற்குமா?

அவன் மனம் என்ன சுவரா? சுலபமாக ரஞ்சனியின் படத்தை எடுத்துவிட்டு அங்கே ஜானவியின் படத்தை மாட்ட?

செழியனின் மனம் நடந்த விஷயங்களை எண்ணி கலக்கமுற்றிருந்தது.

இரவு ஜானவி எல்லோருக்கும் உணவு தயார் செய்துவிட்டு செழியனை உணவு உண்ண அழைத்தாள்.

“சரவணனும் ரேஷ்மாவும் போயிட்டாங்களா?” என்று அவள் முகம் பார்த்து அவன் கேட்க அவள் ரொம்பவும் இயல்பாக, “இப்பதான் போனாங்க… சரி நீங்க வாங்க… சாப்பிடலாம்” என்றாள்.

அவளிடம் சற்று முன்பு நடந்த சம்பவத்தின் தாக்கம் என்று எதுவுமே இல்லை. ரொம்பவும் இயல்பாகத்தான் இருந்தாள்.

அவள் பேச்சிலும் பார்வையிலும் எதிலுமே அந்த கோபம் துளி கூட இல்லை. உண்மையில் அதுதான் அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.

இரவு உணவு முடிந்து படுக்கையில் எல்லோரும் எப்போதும் போல் படுத்து கொண்டாலும் செழியனுக்கு உறக்கம் வரவில்லை. மீனாவும் அனபுவும் உறங்கியதும் அவன் எழுந்து பால்கனி கதவை திறந்து வெளியே சென்று நின்று கொண்டான்.

ஜானவி அவன் எழுந்து செல்வதை பார்த்து பின்னோடு வந்து, “இன்னும் அந்த விஷயத்தையே நினைச்சிட்டு இருக்கீங்களாக்கும்” என்றவள் கேட்க அவன் முகத்தில் அழுத்தமான குற்றவுணர்வு!

“விடுங்க செழியன்… நான் அதை அப்பவே மறந்திட்டேன்… வாங்க வந்து படுங்க” என்றாள் ஜானவி!

” என்னை கோபமா இரண்டு வார்த்தையாச்சும் திட்டிடுங்க ஜானவி ப்ளீஸ்… நீங்க எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட பேசறது எனக்கு ரொம்ப ஹர்டிங்கா இருக்கு” என்று வருந்தி சொல்ல,

“திட்டவா? எதுக்கு … அப்படி என்ன நீங்க தப்பு செஞ்சிட்டீங்க” என்று இயல்பாக புன்னகைத்து கேட்டாள்.

“கொஞ்சமும் யோசிக்காம நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்க கூடாது”

“பேசி இருக்க கூடாதுதான்… ஆனா உங்க பாயின்ட் ஆஃப் வியுல இருந்து பார்த்தா உங்க கோபம் ஒன்னும் தப்பில்ல… அந்த நேரம் டென்ஷன்ல யாருக்கா இருந்தாலும் அப்படிதான் கேட்க தோணும்… ஐ அண்டர்ஸ்ட்டேண்ட… விடுங்க செழியன்” என்று சுலபமாக சொல்லி முடித்தாள்.

செழியன் அவளை ஆழ்ந்து பார்த்து, “நம்பமுடியல… நான் முதல் முதல பார்த்த ஜானவியா இது… நம்ம பர்ஸ்ட் மீட்ல நடந்த மாறி இன்னைக்கும் பெருசா எதாச்சும் சண்டை நடக்கும்னு எதிர்பார்த்தேன்” என்று மிதமான புன்னகையோடு சொல்ல,

அவள் சிரித்து விட்டு, “அப்போ செழியன் எப்படின்னு தெரியாது… ஆனா இப்ப தெரியுமே… அப்புறம் எப்படி கோபப்படுறது” என்று சொன்னவளை இமைக்காமல் சில நொடிகள் அப்படியே பார்த்து கொண்டு நின்றான்.

“தேங்க்ஸ் ஜானவி” என்று மனம் நிறைந்து அவன் சொல்ல அவள் அவனை நக்கலாக பார்த்து, “என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க” என்றாள்.

“நான் ஒன்னும் சொல்லல” என்று அவன் உதட்டை கடித்து கொள்ள,

“அது” என்று ஜானவி புன்னகைத்து கொண்டே அவனை எச்சரிக்கை பார்வை பார்த்தாள்.

“சரி வந்து படுங்க செழியன்… லேட்டாயிடுச்சு” என்றவள் சொல்லவும் அவன் உள்ளே வந்து கதவை மூட ஜானவி வெறுமையாக இருந்த சுவற்றை பார்த்து, “நான் நாளைக்கு அந்த போட்டோஸ் எல்லாம் மாட்டி வைச்சிடுறேன்” என்றாள்.

“வேண்டாம் ஜானவி” என்று செழியன் சொல்ல அவனை ஜானவி அதிர்ச்சியாக திரும்பி நோக்கி, “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“இல்ல… ஏதோ ஒரு வகையில அன்புக்குட்டி மனசுல நீங்கதான் அவ அம்மான்னு ஆழமா பதிவாயிட்டீங்க… அது அப்படியே இருக்கட்டும்… ரஞ்சனியோட பிம்பம் எந்த விதத்திலயும் அவ மனசுல இனி பதிவாக வேண்டாம்… அது இன்னைக்கு இல்லனாலும் என்னைகாச்சும் அவ மனசுல குழப்பத்தை உண்டாக்கலாம்” என்று அவன் தீர்க்கமாக யோசித்து பேச, “ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறீங்க… அதெல்லாம் ஆகாது” என்றாள்.

“இல்ல ஜானவி… நான் தெளிவா யோசிச்சுத்தான் சொல்றேன்”

“குழந்தைகளுக்காகன்னா கூட உங்களுக்கு கஷ்டமா இருக்காதா?”

“அந்த போட்டோ அங்க மாட்டி இருந்தாத்தான்… என் ரஞ்சனியோட நினைவு எனக்குள்ள இருக்கும்னு அர்த்தமா என்ன? அவ முகம் எனக்குள்ள எப்பவும் இருக்கும்… அது போதும்” என்றவன் தெளிவோடு சொல்ல ஜானவி வியப்போடு அவனை பார்த்தாள்.

அதன் பின் இருவரும் அமைதியாக அவரவர்கள் இடத்தில் படுத்து கொள்ள ஜானவி அவள் இடத்தில் படுத்து கொண்டாள்.

ஆனால் அவள் மனம் உறங்காமல் செழியன் தன் மனைவி பற்றி பேசியே வார்த்தைகளுக்குள்ளேயே சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

அவளையே அறியாமல் அவள் மனம் அவன் தூய்மையான காதல் மீது காதல் கொண்டது.

******

இருள் மெல்ல மெல்ல விலகி ஆதவன் தலையெடுத்தான். எப்போதும் போல் பொழுது புலர்ந்து அவர்கள் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அன்று மாலை பாண்டியனும் சந்தானலட்சுமியும் வீடு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த சில நொடிகளில் மீனாவும் அன்புவும் பள்ளியில் இருந்து செழியனோடு வந்துவிட,

அவர்களுக்கோ பாட்டி தாத்தாவை பார்த்த மாத்திரத்தில் அத்தனை குதூகலம். அவர்கள் எடுத்து வந்த பையில் கோவில் பிரசாதங்களோடு சேர்ந்து விதவிதமாக விளையாட்டு பொருள்கள். அதனை எடுத்து அன்றே சோதித்து பார்த்தால்தான் அன்புவிற்கும் மீனாவிற்கும் நிம்மதி. ஆதலால் உடனடியாக அந்த விளையாட்டு பொருள்களையும் எடுத்து கொண்டு விளையாட துவங்கிவிட்டனர்.

சந்தானலட்சுமி கோவிலில் வாங்கி வந்த பிரசாதகங்களை மகனுக்கும் மருமகளுக்கும் தந்தவர் ஆசையாக பேத்திகளுக்கும் வைத்துவிட்டார்.

செழியனுக்கு தன் பெற்றோர்களை பார்த்து அளப்பரிய சந்தோஷம். மூன்று நாட்கள் என்பதே அவனுக்கு ரொம்பவும் சிரமமாக இருந்தது.

அவன் அவர்களை விட்டு வெளியூர் வேலை மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா என்றெல்லாம் சென்றிருக்கிறான்தான். ஆனால் அவர்கள் அவனை விட்டு எங்கேயும் இதுவரை சென்றதே இல்லை. அதுதான் அவன் மனதை ரொம்பவும் அழுத்தியது.

அவன் தன் தவிப்பை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவர்கள்

இல்லாத ஒரு வெறுமையை அவன் உணர்ந்தான்.

இன்று அவர்கள் திரும்பி வந்த பின்தான் அவன் மனம் ஒருவாறு அமைதி பெற்றது.

மீனாவும் அன்புவும் அந்த விளையாட்டு பொருள்களோடு மொத்தமாக ஐக்கியமாகிவிட,