பெண்ணியம் பேசாதடி – 1
காகிதமும் எழுதுகோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்!
நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்!
வா சோதனை செய்வோம்!
கண்ணாடி முன் நின்று தனது தலையை வாரி கொண்டு இருந்தார் வாமணன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதாலே அவர் அழகன். வயது என்று பார்த்தால் சுமார் நாற்பத்தி நான்கு இருக்கும்.
மனைவியைப் பறி கொடுத்த இளம் விதவை அவர் . பதினொரு மாததிற்கு முன் புற்று நோய்யால் சிகிச்சை பலன்றி இறந்துவிட்டார்.ஆசை மனைவியின் பிரிவு நெஞ்சின் ஓரம் சிறு வலி தான் இல்லை என்பதிற்கில்லை,இருந்தாலும் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே,தன்னை நம்பி இருபத்தி ஒரு வயது நிரம்பிய மகன் வளவன் இருக்கின்றானே.
வண்டி உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதலாளி வாமணன் இது வயிற்று பிழைப்பிற்கு மட்டுமே.இதயம் பிழைக்க வேண்டுமானால் அவருக்குக் கவிதையும்,காதலும் வேண்டும்.ஆம் அவர் ஒர் எழுத்தாளர்,கவிஞர்,கவிதை சித்தன்,தமிழ் பித்தன் என்று கூடச் சொல்லலாம்.
இன்று முக்கியமான தொழில் கூட்டம் உள்ளது, அதற்கு அவர் கிளம்பி கொண்டு இருந்தார்.அவர் வெளி வரவும்,அவர் எதிர் அறையில் இருந்து அவரது மகன் வெளிவரவும் சரியாக இருந்தது.விரிந்த புன்னைகையுடன் “குட் மார்னிங் ப்பா”
“காலை வணக்கம் கண்ணா போலாமா”
“போலாம்ப்பா”
இருவரும் காலை உணவை தவிர்த்து அலுவலகத்தை நோக்கி சென்றனர்.அங்கு வளவனின் உரிமை தோழன் ரமேஷ் அவர்களை வரவேற்றுக் கூட்டம் நடை பெரும் அறைக்கு அழைத்துச் சென்றான்.
கல்லூரி தோழன் தான் என்றாலும் நேர்மை குணம் கொண்ட ரமேஷிடம் தனி மரியாதையும் நிரம்ப உரிமையும் உண்டு ,அதனால் தொழிலும் அவனை இணைத்துக் கொண்டான் தந்தையின் சம்மதத்துடன்.
அறைக்குள் சென்றவர்களுக்கு வெளி உலகமே மறந்து போனது.கூட்டத்தை வெற்றிகரமாக முடித்த கொண்டு வெளியில் வந்தர்வர்கள் கை குலுக்கி மரியாதை செய்து அனுப்பி வைத்தது தான் தாமதம். “டேய் வளவன் பார்த்துகொடா நான் லேட்டாதான் வீட்டுக்கு வருவேன்,நேரத்துக்குச் சாப்டுட்டு தூங்கணும்”
“சரிப்பா,யூ எஞ்ஜோய் ப்பா! உங்க ரசிகைய கேட்டதா சொல்லுங்க,இன்னக்காவது அவுங்கள கண்டுபுடிங்கப்பா ப்ளீஸ்”
“அட போடா கழுவுற மீனுல அவ நழுவுற மீனு பார்ப்போம்” சொல்லிவிட்டு ஒரு துள்ளல் நடையுடன் புத்தகக் கண்காட்சி மற்றும் கருதரகத்திற்குச் சென்றார்.
அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்த வளவனின் தோளில் கையைப் போட்ட ரமேஷ் “அந்தப் பையன் எங்கடா துள்ளிக்கிட்டு போறார்”
சின்னச் சிரிப்புடன் “அவர் ஒரு புத்தகத் திருவிழா போறார்”
“பொறாமையா இருக்குடா எப்புடியும் நாற்பது வயசுக்கு மேல இருக்கும்.கொஞ்சமாவது தொந்தி தெரியுதான்னு பாரு.நானும் காலைல நடக்குறேன்,நைட் நடக்குறேன் ஆனா தொப்பை குறைய மாட்டேங்குது”
அவன் சொன்ன தினுசில் சிரித்தவன். “மனசை தெளிவா வச்சுக்கணும் மாப்பிள அப்போதான் உடம்பு சரியா இருக்கும்”. “என்னமோ போ கொடுத்து வச்சவருடா மனுஷன்.இந்த வயசுலயும் பொண்ணுங்க சுத்துறாங்க” ரமேஷின் அனல் மூச்சில்.
அடேய்! கண்ணு வைக்காதடா அப்பாவ என்றவன் வா வேலை தலைக்கு மேல இருக்கு.அவனது புடணியில் கை கொடுத்து அழைத்துச் சென்றான்.
————————————————————————————–
அங்கு விழா ஆரம்பம் ஆனது வாமணின் கண்கள் அந்த அரங்கத்தையே சுற்றி சுற்றி வந்தது.ஒரு பயனுமில்லை ஆயிரம் மனிதர்கள் குழுமி இருக்கும் அரங்கில் எங்குப் போய் அவளைத் தேட.
இன்று அவள் மேல் எல்லையற்ற கோபம். பேரிளம் பெண் முகம் காட்டாமல் வதைக்கிறாள். கருத்தரங்கம் முடிந்து வாமணன் பேசுகையில் அந்த அரங்கமே அதிர்ந்தது.சிறு சிரிப்புடன் வலது கை இரு விரல்களால் மீசையை நீவியவரே பேச.
கண்ணெடுக்காமல் அவரை ரசித்துக் கொண்டு இருந்தாள் பேரிளம் பெண். ஊதா வண்ண பருத்தி புடவையில் கண்ணியமான தோற்றத்துடன் கண் இமைக்காமல் வாமணனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஒருவழியாக நிகழ்ச்சி நிறைவு செய்து அவர் வேக நடையுடன் கூட்டத்தில் இருந்து தப்பி வந்து காரில் அமர்ந்து,குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு காரை கிளப்பும் சமயம் அவரது போன் அழைத்தது.
வெகு அலட்சியமாகப் போனை எடுத்து அமைதியாக இருந்தார். அவருக்குத் தெரியும் விழா முடிந்தவுடன் அவள் தன்னை அழைப்பாள் என்று,ஆனால் எப்படி அழைக்கிறாள் என்பது தான் தெரியாது கள்ளி.
அந்தப் புறம் பேரிளம் பெண் “என்ன எழுத்தாளரே அம்சமா இருக்கீங்க கண்ணாடி புதுசா”
அவளறியா வண்ணம் மெல்லிய சிரிப்பு அவரிடம் “சும்மா சும்மா மீசையைத் தடவாதிங்க எழுத்தாளரே,அப்புடியே அள்ளிக்கணும் போல இருக்கு”
“என்ன பேச்ச காணோம்,சரி விடுங்க பேச வேணாம் ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்”
அந்தரங்க தோழியே!
ஆசை காதலியே!
என் கட்டிலின் வேசியே!
அவர் அர்த்தமில்லாமல் கவி படிக்க பேரிளம் பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது “வாமணன்” பெண் மிரட்ட.
“என்னடி கர்ஜனையாக வந்தது பதில்”
“சரி கோபமா இருக்கீங்க நான் அப்புறம் பேசுறேன்”
ஏய்! ராட்சசி போன் நம்பர் குடு.சற்று இறுக்கம் தளர்ந்த பேரிளம் பெண் எழுத்தாளரே மகனுக்குக் கல்யாணம் பண்ணா அடுத்தப் பத்து மாசத்துல தாத்தா ஆகிடுவீங்க.
அவர் அலட்டிக்கொள்ளாமல் “அதான் பாட்டி தேடுறேன்,ஒத்தையா பேரான வளர்க்க முடியதுமா” இந்தப் பேச்சும் சீண்டலும் இன்று நேற்று வந்தது அல்ல இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடரும் கதை இது.
ஹாஹாஹா …………… சரிதான்,உடம்பப் பார்த்துக்கோங்க வாமணன்.அவரது பதிலை எதிர் பார்க்காமல் போனை அணைத்து,தனது பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் கொடுத்தாள்.
“தேங்க்ஸ்” என்றவளை “ஏன்ம்மா பார்க்க பணக்கார பொண்ணு மாதிரி இருக்க ஒரு போன் இல்லையா”அவரது பதிலுக்கு அழகாகப் புன்னைகைத்து சென்று விட்டாள். அவளும் கொஞ்சமே கொஞ்சம் அழகி தான்.
“டேய்! எரும ஒழுங்கா போய்ச் சாப்புடுற டேபிள்ள உட்காரு அப்போதான் உனக்குத் தோசை தருவேன்” அடுக்கலைக்குள் அமர்ந்து அலம்பல் பண்ணி கொண்டு இருக்கும் வளவனை முறைத்தாள் காஞ்சனை.வளவனின் தாயின் தங்கை ‘சிற்றன்னை’.
“ சித்தி ரொம்பப் பண்ணாத பசிக்குது,அப்பாகும் சேர்த்து சூடு சித்தி”.
“ முடியாது போடா”
“மிஸ்டர். மீசை ஒரு தோசை சுட உங்க பொண்ணு என்ன பேச்சு பேசுது பாருங்க நான் எங்க உட்காந்து சாப்பிட்ட என்ன என்று வளவனும் மல்லுக்கு நின்றான்.இருவரையும் பாவமாகப் பார்த்தார் வளவனின் அம்மாவை பெற்றவர்.
“ஏன்டா அந்த ஆளுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.அக்காக்கு இரண்டு நாளுல தேவசம், ஒன்னுமே கண்டுக்காம இருக்காரு.இவர நம்பி உன்னைய விட்டுட்டுப் போய்ட்டா பாரு அவள………”
“அதுக்குத்தான் சித்தி சொல்றேன் நீ அப்பாவ கல்யாணம் பண்ணிக்க”
“அடப்பாவி உங்க அப்பனுக்குப் பொண்ணு பார்க்கிறியாடா நீ.அந்த ஆள கட்டிக்கிட்டு கவிதை காதலுனு உருப்படாத வேலை பார்க்கவா வேலைய பாருடா ராசா இந்த விளையாட்டுக்கு நான் வரல”
உனக்கும் அம்மாக்கும் டேஸ்டே இல்ல போ.அப்பா ரசனைக்கும் அம்மா ரசனைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது அவருக்குத் தலை எழுத்து.சொல்லிவிட்டு முகம் பார்க்க அங்குக் கோபமாக நின்று இருந்தாள் காஞ்சனை.
அவள் கோவத்தை அலட்சியம் செய்தவன் உண்மையாவே நீ அந்தத் தொப்பையாதான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா சித்தி.
“டேய் அவர் எப்டி இருந்தாலும் தேவலை அவர் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டு ஆறு மாசம் பொறுத்து இந்தியா வரேன் கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லிட்டாரு உங்க அப்பா நண்பன் தானடா”
“ஆமா என்னமோ போ எனக்குப் பிடிக்கல” இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே எதிர் வீட்டு வாண்டு வந்தது.
ஹாய்! காஞ்சனை உங்க வீட்டுல ஒரே சத்தமா இருந்துச்சு அதான் பார்க்க வந்தேன்.
ஹாய்! டாலி வேற யாரு எங்க வீட்டுல சத்தம் போடுவா வளவன் தான்.
பச்சை கலர் நாட் வைத்து பிரேக் அணிந்து கொண்டு பிங் பொம்மையாக இருந்தது அந்த நான்கு வயது சிறுமி கஞ்சனையின் உயிர் தோழி. “அப்பவே நெனச்சேன் காஞ்சனை” பெரிய பெண்ணாக அது பாவத்தோடு பேச.
ஏய்!அப்புடி தாண்டி கத்துவேன் என்ன பண்ணுவ எகிறினான் வளவன்.
காஞ்சனை ஒழுங்கா பேச சொல்லு,எனக்கு ரவுதி மாதிரி பேசுனா பிதிக்காது என்று முகத்தை திருப்பிக் கொண்டது வாண்டு.கஞ்சனைக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. வளவனும் அந்தக் குட்டி வாண்டும் போடும் சண்டை வழமை தான். அந்த சண்டை கூட அத்தனை அழகு.
அடியேய்! முதல ரா,க,தா இதெல்லாம் ஒழுங்கா சொல்லு அப்புறம் நீ பேசுடி.பேச்சு முளைக்காத குட்டி பிசாசு பேச வந்துட்டா.
காஞ்சனை நீ இவன் போன உட ….னே என்ன கூப்புது வரேன்.
ஓகே டி தங்கம் இந்தப் பேட் பாய் கிட்ட நீ பேசவேணாம் இவன் போகட்டும் நம்பப் பேசலாம்.
இவர்கள் பேசுவதில் எரிச்சல் ஆனவன்.அவள கெடுக்குறதே நீ தான் நல்ல தோழி உனக்கு.தெரியாம தான் கேக்குறேன் வயசுக்கு தகுந்த மாதிரி பழக மாட்டியா.
ஏன் என் பழக்கத்துக்கு என்ன குறைச்சல் என் தோழியைப் பத்தி பேசாத சொல்லிட்டேன்.
கோபமாக அவளை முறைத்தவன்.ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்ன கதற விடல நான் வாமணன் மகன் இல்லை.
“அடப்போடா”
மிஸ்டர் மீசை உங்க பொண்ணு என்ன ரொம்ப அவமானம் படுத்துறாங்க இனி நான் வர மாட்டேன்.
அம்மாடி!…. பேரனுக்குப் பரிந்து கொண்டு வந்தவரை தடுத்தவள் “அப்பா கொழுப்பெடுத்த கழுதை சும்மா இருங்க.அவுங்க அப்பாக்கு பொண்ணு பார்க்க போறானாம், சரியான அப்பா கொன்டு, வாமணன் மகனாம் அப்போ எங்க அக்கா யாரு?
“விடும்மா உனக்கும் எனக்கும் ஆறுதலே அவன் தான் சும்மா புள்ளைய தீட்டாத நீ வாடா கண்ணா”
ஒன்னும் வேணாம் தாத்தா நான் போறேன் கோபமாக விடை பெற்றான் வளவன்.போகும் அவனைக் கோபம் போல் முறைத்து பார்த்தாரள் காஞ்சனை.
வாமணன் அவருக்குச் சொந்த அத்தை மகன்,தனது அக்காளை மணமுடித்த நாளில் இருந்து அவருடன் சற்று தள்ளி நின்று தான் பழகு வாள்,அதற்கு முன்பு அத்தை மகன் என்றளவில் நன்றாகத் தான் பேசி வந்தாள்.என்று தனது அக்கா சென்றாலோ அன்றில் இருந்து இன்னும் இடைவெளி தான்.
கஞ்சனைக்கு ஏனோ திருமணத்தில் நாட்டமில்லை.ராகு கேது என்று பருவத்தில் தட்டி போன திருமணம் இன்று வரை தேடலாக உள்ளது.
வளவனின் தாத்தா மூர்த்திக்கு காஞ்சனையை வாமணனுக்குக் குடுக்கலாம் என்ற எண்ணம் தான்,அதை வாமணனிடம் சொன்ன பொது மறுத்துவிட்டார். வளவன் ஒன்றும் கை குழந்தை இல்லை அவருக்குத் திருமணம் செய்ய என்று காஞ்சனை சண்டைக்கு நிற்க பேச்சை முடித்துக் கொண்டார் மூர்த்திச் சின்னப் பெண்ணிடம் அவருக்குப் பயம் உண்டு.
ஒரு பெருமூச்சுடன்” சாப்பாடு எடுத்து வைம்மா சாப்பிடலாம்,உன் மகன் நாளைக்கி வந்துடுவான்.
அவனது கோபத்தை அறிந்த காஞ்சனை சிரித்துக் கொண்டே சென்றார்,அவருக்கும் தெரியும் வளவனைப் பற்றி அவன் கோபம் பற்றி.
எழுதுகோல் மிரட்ட இங்கு காகிதம் அடி பணிந்தது!…………..