Blog Archive

Ruok-8

நிலா-முகிலன் 8 முகிலன் பாதியாக உடைத்துக் கொடுத்த மாத்திரையில் திருப்திஏற்படாமல் தவித்தவள், மீதத்தையும் அவனிடம் கேட்கவெனஅறையிலிருந்து வரவும், அவன் அவளுடைய அப்பாவிடம்பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது நிலாவிற்கு. அவன் நேரடியாகத் திருமணத்திற்குக் கேட்கவும், அவள் எப்படிஉணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. மனம் கட்டுப்பாடின்றி எதை எதையோ சிந்திக்கத் தொடங்கியது. கண்களை அகற்றாமல் அவளுடைய முகத்தையே முகிலன்பார்த்துக்கொண்டிருப்பது புரியவும், அந்த மாத்திரையைக் கூடமறந்தவளாக அறைக்குள் சென்று கதவை தாளிட்டாள் நிலா. “நிலா! ரூமை லாக் பண்ணாத!” என அவன் கட்டளையாகச் சொல்லவும்,அடுத்த நொடி, ‘க்ளிக்’ என தாழ்பாள் திறக்கப்படும் ஒலி கேட்டது. புன்னகைத்துக்கொண்டான் முகிலன். அனைத்தையும் கவனித்தவராக; அதுவும் அவரது முன்னிலையிலேயேமுகிலன் நிலாவை மிரட்டவும், அவளும் கூட அதற்கு கீழ்ப்படியவும்,கொஞ்சம் திடுக்கிட்டவராக; நிலா தெளிவான மனநிலையில்இருக்கும்போது அவளுடைய சம்மதத்தைக் கேட்கவேண்டும்; மேலும்அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றஎண்ணத்துடன், “வேண்டாம் தம்பி! அவரசரப்படாதிங்க; இப்ப இவஇருக்கற நிலைமையில் எதையும் முடிவு செய்ய முடியாது. முதல்ல அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துடலாம். பிறகு மத்ததை முடிவுபண்ணிக்கலாம்! எல்லாம் ஒத்து வந்தால் உங்க எண்ணத்துக்கு குறுக்க நிக்க மாட்டோம்!புரிஞ்சிக்கோங்க!” என அவர் மென்மையாகவே திருமணத்திற்குமறுக்கவும், அதற்கு ஒப்புக்கொண்டு கொஞ்சம் இறங்கிவந்தான் முகிலன். ஆனால் அவளுக்கான மருத்துவம் சென்னையிலேயேபார்க்கப்படவேண்டும் என்பதில்மட்டும் தீர்மானமாய் இருந்தான். சிவராமன் அங்கே வந்திருப்பதை அறிந்து, கதிரும் ஜீ.கே மாமாவும் அங்கேவர, பரஸ்பரம் அறிமுகப்படுத்திவைத்தான் அவன். சிவராமன் மாமாவிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க, முகிலன்குடும்பம் பற்றி அவர்மூலம் தெரிந்துகொண்ட தகவல்களால்,  அவனைப்பற்றிய அவருடைய தயக்கம் கூட கொஞ்சம் விலகித்தான் போனது. *** முந்தைய இரவில் யார் மீது சத்தியம் செய்தானோ அவருக்கு முன்பாக,அதாவது ஜெய்யின் மாமியாருக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான் முகிலன்தான் வருங்கால மாமனாருடனும் அவருடைய ஒரே மகளுடனும். ஜெய்யின் மாமியார் அகிலா ஸ்ரீதரன், ஒரு பிரபல மனநல மருத்துவர்.சென்னையிலேயே புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றின் மனநலமருத்துவ சிறப்புப் பிரிவில், தினமும் மாலை நேரங்களில் அவர்நோயாளிகளைச் சந்திப்பதால், முன் அனுமதி பெற்று, நிலாவை அங்கேஅழைத்துவந்திருந்தான் அவன்.   ஐம்பது வயது மதிக்கத்தக்கத் தோற்றத்தில்,  பருத்திப் புடவை அணிந்துமிகவும் எளிமையாகவும், மென்மையுடனும், மருத்துவருக்கே உரியக்கம்பீரத்துடன் இருந்தார் அகிலா. அவர்களைப் பார்த்ததும் சிநேகத்துடன் புன்னகைத்தவர், “ஹை! முகிலன்எப்படி இருக்கீங்க?” என சகஜமாக விசாரிக்கவும், […]

View Article

Ruok – 6

நிலா-முகிலன் 6 கதிர் கேள்வியுடன் முகிலனை ஏறிட, “ஜெய்! என்னோட பேட்ச் மேட்!” என உதட்டசைவில் அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, “டேய் மச்சி எங்கடா இருக்க?” என்று கேட்க, “ஆஃபீஸ்லதாண்டா மாப்பிள! […]

View Article

Ruok- 5

நிலா-முகிலன் 5 முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. “நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் எல்லாரும்  நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல. ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ […]

View Article
error: Content is protected !!