Un Kannil Inbangal Kanbein – 10
Un Kannil Inbangal Kanbein – 10
10
சந்த்ருவின் கைகளுக்குள் இருக்கும் அரசியை தன்பக்கம் இழுத்து கொண்டவள், “இன்னொரு டைம் என் பேபி பின்னாடி உன்னைப் பார்த்தேன் தூக்கிட்டு போய் லாடம் கட்டிருவேன்..ஜாக்கிரதை..” வார்த்தைகளைக் கடித்து துப்பியவள், அரசியுடன் அவ்விடம் விட்டு சென்றுவிட்டாள்..
கடுப்புடன் வீட்டுக்குள் நுழையும் கனியையும், அவளுக்கு அருகே மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு வரும் அரசியையும் கண்டவள்,
“என்ன அதுக்குள்ள வந்தாச்சு..?” தனது மேடிட்ட வயிற்றில் ஒற்றைக் கையை வைத்து கொண்டு வந்து கேட்டாள் தேவி.
“அத்த..எனக்கு ஜூஸ் வேணும்..” தன்னுடைய சூவை ஓரமாய் கழற்றி வைத்துவிட்டு வந்து கேட்கும் அரசியிடம்,
“இந்த டைம்ல ஜூஸ் குடிக்க கூடாது பேபி..” கனி கண்டிப்பாய் சொன்னாள்..
“அத்த..நான் உங்க கிட்ட தான் பேசுவேன்..” கோபமாய் பதிலுரைத்த சின்னவளும் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.
கோபமாய் போகும் அரசியைத் திரும்பி பார்த்தபடி நிற்கும் தேவியிடம், “அவன் யாரு..?” எனத் திடுமென வினவ,
யாரிடம் கேட்கிறாள் எனப் பேந்த பேந்த விழித்தாள் தேவி..
அவளது முழியைப் புரிந்து கொண்டு, “உன்னைத் தான் கேட்கிறேன் அவன் யாரு..?” என்க
“எவன் யாரு..?” என்றவளிடம்,
“அதான் ஹைட்டா நல்ல கலரா, முடியைக் கூட ஏத்தி சீவி, கண்ணை உருட்டி உருட்டி முழிக்கிறானே அவன் தான்..அவன் யாரு..?” என்ற கனியின் விழி போன திசையில் ஹிருத்திக் ரோஷனின் புகைப்படத்தை தேவி ஒட்டி வைத்திருக்க,
“ஓஹ் அவரைக் கேட்குறீங்களா..?” என்ற தேவியிடம்
“அது என்ன அவர்..அவனுக்கெல்லாம் அவ்ளோ மரியாதை தேவையா..?”
“என்ன இப்படி சொல்லீட்டிங்க அவர் எவ்ளோ பெரிய ஆளு..?” என்றவளின் பார்வையும் தனது ஹிருத்திக்கை தொட்டு மீண்டது..
“என்ன பெரிய ஆளு..?சில்லறைத் தனமா பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனெல்லாம் பெரிய ஆளா..?” எனக் கேட்க,
‘இவங்க என்ன இவ்ளோ சீரியஸா பேசுறாங்க’ என மனம் இடித்த போதும்,
“ச்சீ..அவர் அப்படிலாம் கிடையாதே..” எனவும்
“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றீயா..?” கோபத்துடன் கேட்டவள் தொடர்ந்து,
“ஆமா அவனை எதுக்கு பேபி டாடின்னு கூப்பிடுறா..?” என்க
“இல்லையே டாடி சொல்ல மாட்டாளே மாமான்னுலா சொல்ல சொல்லிருக்கேன்..” என்ற தேவியிடம்..
“ம்..குட்…டாடின்னு கூப்பிட கூடாதுன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிடு பேபி கிட்ட..ஆமா அவனை எப்படி பேபிக்கு தெரியும்..?” என கனி சந்த்ருவை மனதில் வைத்து கேட்க,
“நான் தான் சின்ன புள்ளையில இருந்தே காமிச்சிருக்கேனே..” என்றவளிடம்
“வாட்..” என கனி அதிர, சரியாய் அவளது மொபைலும் சினுங்கியது..
முக்கியமான அழைப்பு என்பதால் தேவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கனி நகர, தனது வயிற்றைத் தள்ளிக் கொண்டு அரசியின் அறைக்குள் சென்றவள் அங்கே நோட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த அரசியிடம்,
“ஏன் தங்கம் ஹிருத்திக் ரோஷனை டாடின்னு சொன்ன..?” ஆத்திரமாய் கேட்கும் அத்தையிடம்
“நான் எப்போ அவரை டாடின்னு சொன்னேன்..?” எனச் சின்னவள் கேள்வி கேட்க,
“அப்போ கனி சொல்றாங்க நீ இன்னைக்கு டாடின்னு சொன்னதா..?” தேவியின் பதிலில் தலையில் அடித்து கொண்ட சின்னவள்,
“லூசு அத்த..மம்மி மாமாவ கேட்கல அவங்க சந்த்ரு டாடியை பத்தி கேட்குறாங்க..” எனச் சொன்னவள் மறுபடியும் நோட்டில் கிறுக்கத் தொடங்கிவிட்டாள்..
எப்போதும் அரசி லூசு எனச் சொன்னாள் அடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் தேவி, இன்று, ‘ஙே’ என விழிக்க, அறையின் வாயிலில் நின்ற பரத் சத்தமாய் சிரித்தான்..
பரத்தின் சத்தத்தில் திரும்பிய இருவரில், “மாமா, பைக்ல ஒரு ரவுன்ட்..” என அரசி எழுந்து நிற்க,
‘போயும் போயும் இவன் முன்னாடி அசிங்கப்பட்டுட்டோமே’ என முரண்டிய மனதை அடக்கியவள்,
“ஹி ஹி..வாங்க..டி..டிபன் டிபன் எடுத்து வைக்கிறேன்” என அவ்விடம் விட்டு ஓடியே விட்டாள்..
தனது முகத்தை ஆவலாய் பார்த்து நிற்கும், அரசியிடம் கை நீட்டி வா என்றழைக்க ஓரே எட்டில் தாவி அவனது கழுத்தை பிடித்து தொங்கினாள்..
சின்னவளை அழைத்து கொண்டு பைக்கில் பரத் சென்றதும் உள்ளே நுழைந்த கனி, சமையல் அறையில் இருக்கும் தேவியிடம்,
“அவன் யாரு..?” என்க
“அவங்க பேரு சந்த்ரு..”
“உனக்கு எப்படி அவன தெரியும்..?”
“அது வந்து பேபி ஒரு நாள் பார்க்ல ரோட் க்ராஸ் பண்றேன்னு ஓடி கீழே விழப் போனா அப்போ தான் அவங்க வந்து தூக்கி பேபி கிட்ட பேச ஆரம்பிச்சாரு..”
“ம்ம்..அவன எதுக்கு பேபி டாடின்னு கூப்பிடுறா..?”என்க
“அது அவரு அனுஷ் அண்ணா மாதிரியே பேபிய கொஞ்சுனதுன் பேபி அப்பான்னு சொன்னா உடனே நான் அப்பா கூப்பிட கூடாதுன்னு சொன்னேன்..இவா ஒரே அடம் அதான் அவரு டாடி சொல்லுன்னு சொன்னாரு..அதுல இருந்து..”
“அவனை எத்தனை நாளா தெரியும்..?”
“ஒரு ஆறு மாசமா..” எனவும்
“இப்படி தான் தெரியாதவங்க கிட்ட பேபிய பழகவிடுறதா தேவி..” என அதட்ட
“சாரி..” எனத் தலை குனிந்த தேவியிடம்
“இனி பேபிய பார்க் கூட்டி போக வேணாம்..எனக்கோ பரத்துக்கோ எதிரிங்க ஜாஸ்தி..யாரச்சும் பேபிய கடத்துனா சேஃப் இல்ல..காட் இட்..” என்றவள் அவ்வளவு தான் என்பது போல திரும்பி,
“அவன் கிட்ட இனி பேபிய பேச விடாத எனக்குப் பிடிக்கல..” என்றவள் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்..
மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது தேவிக்கு, எப்படி திருடன கேட்குற மாதிரி கேள்வி கேட்குறாங்க, நெஞ்சு கூடு விம்மி தனிய, அரசியை அறையில் விட்டுவிட்டு சமையல் அறைக்கு வந்தவன் தனது மனைவியின் நிலையறிந்து அவளை நெருங்கினான்..
பரத் கிட்டே வந்ததும், “ஏதும் வேணுமாங்க..” எனக் கேட்க,
“என்ன ஆச்சு..?” என்றான் அவளின் விலகலைப் பொருட்படுத்தாமல்..
“ஒண்ணுமில்லங்க..” என்றவளிடம் முழங்கைத் தொட்டுத் தன்னைப் பார்க்கத் திருப்பியவன்…
“பேபி சேஃப்க்காக அக்கா பேசுனாங்க..நீ வொர்ரி பண்ணாத..” எனவும்..
“ம்ம்..” எனத் தலையசைத்தவள் அமைதியாகிவிட,
“என்ன ஆச்சு..” எனவும்
“கனி என்னைக் கொன்னு போட்டாக் கூட நான் கவலைப்பட மாட்டேன்..” எனச் சிரித்தாள் தேவி..
தேவியின் தலையை மிருதுவாய் வருடியவன், அவளது விலகலை மனதில் வைத்து தனதறைக்குச் சென்றுவிட்டான்..
தேவி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைக்கு காரணமே கனி தானே!
வித்யாவை வைத்து பரத்தும் கனியும் போட்ட ஸ்தமதியின் கேஸ் சிபிஐ’க்கு மாற்றப்பட வேண்டும் என்ற கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது..
இரண்டு நாளில் தனது மனதை திசைத்திருப்பி, அந்தக் கேஸில் இருந்து முழுமையாய் வெளி வந்தவள் இப்போது சென்னையின் மற்றொரு பகுதிக்கு மாற்றலாகியிருந்தாள்..
இருந்தாலும் மனதின் ஓரம் ஸ்தமதியின் நினைவு எழுந்து கொண்டேயிருக்க, அன்று தனது எவிடென்ஸ் ஃபைலை பரத்திடம் தனிப்பட்ட முறையில் கொடுத்து ஜெசிஎன்’னிடம் அதை ஒப்படைத்து அதற்கு ஒரு வழி செய்து தருமாறு கேட்கச் சொன்னாள்..
****
கனி, தன்னை மரியாதையில்லாமல் பேசிச் சென்றதில் இருந்தே அவளை எப்படியாவது அடக்க வேண்டுமென்ற எண்ணம் துளிர்த்து நின்றது சந்த்ருவிடம்..
ஆனாலும் வேறு சில வேலைகள் அவனை உள்ளிழுத்து கொள்ள, அறையில் வந்து அமர்ந்தவனின் கதவு படபடவெனத் தட்டப்பட்டது..
“வெயிட்..” அதட்டலாய் கத்தியவன், மேஜை மேலிருந்த இரு போன்களையும் ட்ராவின் எடுத்து வைத்து, ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவன் இப்போது அறையைத் திறந்தான்..
வெளியே சஞ்சீவ் வாசல் நிலையில் கை வைத்து நிற்க, கதவைத் திறந்த சந்த்ரு அவனைவிட கொஞ்சம் உயரமாய் இருந்தான்..
“என்ன..?” வாயால் கேட்காமல் புருவத்தை ஏற்றி இறக்கும் அண்ணனை முறைக்க முடியாமல்,
“எனக்கு இந்த சொத்து எதுவும் வேண்டாம்..” எனத் திடுமெனச் சொல்ல,
‘எனக்குத் தெரியும்’ என்பதைப் போல பார்வை பார்த்த சந்த்ரு, “வேற என்ன வேணும்..” என வாயைத் திறந்து கேட்க,
“எங்களுக்கு இந்த சொத்து வேணாம்..” என மறுபடியும் சொல்பவனிடம் மேலே சொல் என்பது போல கையசைக்க,
“நாங்க இந்தக் குடும்பத்தை சேர்ந்தவங்கன்னு அங்கீகாரம் தான் வேணும்..” எனத் தனது கோரிக்கையை முன்வைக்க, அசராமல் பார்த்து நின்ற சந்த்ரு ஒற்றைப்புருவத்தை ஏற்றி இறக்கினான்..
இப்போது வாயைத் திறக்காமல் விழிகளால் பேசும் அண்ணனை வெளிப்படையாக முறைத்தவன், “நம்ம தங்கச்சியோட வாழ்க்கை இதுல தான் இருக்கு..அவளோட கல்யாணம் முடியனும்…இப்போ இருக்கிற நிலையில நான் சொல்றது புரியுதா..?” எனக் கேட்கும் சின்னவனை ஏனோ சந்த்ருவிற்கு பிடித்திருந்தது..
கதவை வெறிக்கத் திறந்தவன், “உள்ள வா..” எனச் சொல்லி அவன் மெத்தையில் அமர, உள்ளே வந்தவனை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்..
“மிஸ்டர்.சஞ்சீவ்” அண்ணனின் அழைப்பிற்கு,
“சஞ்சீவ்னே கூப்பிடுங்க..” எனச் சொல்ல,
மறுப்பாய் தலையசைத்தவன், “நீ சின்ன பையன்..உனக்கு என்னோட மனநிலை புரிய சான்ஸ் இல்ல..இருந்தாலும் என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியல..கொஞ்சம் டைம் கொடு..இன்னும் அவங்களுக்கு கல்யாண பண்ண வருஷம் இருக்கே..” என்றவன் கீழே குனிந்து புருவத்தை நீவி விட,
“நான் உங்க கிட்ட இப்படி கேட்குறதே தப்பு தான்..இருந்தும் என்னோட நிலமை..”
“ம்…லீவ் இட்..” என்ற சந்த்ரு அமைதியாகி விட,
“நான் நாளைக்கு ஜாயின் பண்ணனும்..இங்க எனக்கு யாரையும் தெரியாது எங்க தங்கிக்க..?” எனக் கேட்கும் சஞ்சீவிடம் ‘என் கண் முன்னே இருக்காதே’ எனக் கத்த துணியும் மனதை அடக்கியவன்..
“நீ அவுட் ஹவுஸில் தங்கிக்க..எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..” என நிறுத்த
“சொல்லுங்க அண்ணா..” என்ற சஞ்சீவின் வார்த்தையில் வெளிப்படையாக சலித்தவன்,
“சஞ்சீவ்…எனக்கு இதெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் டைம் கொடுங்க..நானா உங்களை கூப்பிடுற வரைக்கும் இஃப் யூ டோட் மைன்ட் என் முன்னாடி வர வேணாம்..” சந்த்ருவின் தன்மையான பதிலுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன்,
“சரி அண்ணா..” என அவ்விடம் விட்டு அகன்றான்..
சஞ்சீவ் அங்கிருந்து சென்றதும், தனசேகருக்கு அழைத்தவன்,
“அங்கிள், நான் அவரோட பையனை நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்க சொல்லிருக்கேன்..கொஞ்சம் ரெடி பண்ண சொல்லுங்க..அதே போல சாப்பாடுக்கு வேலைக்கு எல்லாத்துக்கும் அங்கேயே ஆள் ஏற்பாடு பண்ணி தனியா போடுங்க..” என்றவன் அழைப்பை அணைத்துவிட்டான்..
பல மணி நேரங்களாய் யோசனையில் ஆழ்ந்தவன், இரவு உணவு உண்ண எழ, சரியாக முத்துவின் போனிற்கு அழைப்பு வந்தது..
இரு நிமிடம் அழைப்பு வந்த எண்ணில் தனது பார்வையைப் பதித்தவன், டேபிளில் இருக்கும் மைக்கை உயிர்பித்து போனை ஸ்பீக்கரில் போட்டு அருகே வைத்தான்..
இவன் அமைதியாக இருக்க, அந்தப் பக்கத்தில், “முத்து..” என அழைத்தது அக்குரல்..
இது ப்ளாக் கோஸ்ட்டின் குரல் மூளை அவசரமாய் கணக்கிட,
“ஹூ இஸ் திஸ்..?” எனத் தனது கனீர் குரலில் கேட்டு சந்த்ருவின் கணிப்பு சரியென உறுதி செய்தான் அவன்..
“ஹாய் மை லவ்..” சந்த்ருவும் தனது ஆண்மையான குரலில் அழைத்து சிரிக்க,
அந்தபக்கம் பலத்த அமைதி, சில நொடிகள் ஓட,
“உன்னோட சாவு நாள நான் குறிச்சுட்டேன்..” என அவன் சொல்ல,
“மை லவ் நீ ரொம்ப லேட் பிக்கப்..இன்னும் ஒரு மாசத்துல எப்படி ஒரே மாசத்துல நீ..” நிறுத்தியவன் சீட்டியடித்து போனை வைத்தான்..
ஆட்டம் தொடரும்..