அமிலமாய் தகித்தது
அது ஜே சேனல் நெட்வொர்க்கின் பெரிய அரங்கம் போன்ற ஓர் அறை. (Conference hall)
அந்த அறையில் மத்தியில் இருந்த நீளவட்ட மேஜை சுற்றி அந்த சேனலின் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் சிலர் அமர்ந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்க, அவர்களில் மகிழும் இருந்தான்.
அவர்களின் விவாதமோ நட்சத்திரங்களை வைத்து நடத்தப் போகும் பிரமாண்டமான கலைவிழாவை பற்றியது.
ஆனால் மகிழின் நினைப்பெல்லாம் வேறெங்கோ இருந்தது. அவன் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல், ஆர்வமின்மையோடே அமர்ந்திருந்தான். அதை யாரும் கவனித்ததாகவும் தெரியவில்லை.
மகிழின் நினைப்பு முழுக்க மாயாவை பற்றிதான். அவள் நடந்து கொள்ளும் முறையை வைத்து பார்த்தால் அவள் தன்னை காதலிக்கிறாள் என்பது புரிய, மனம் ஏனோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
சாக்ஷியை தவிர்த்து வேறொரு பெண்ணை நினைத்துப் பார்க்க முடியுமா? !
அது ஒரு புறமெனில் மாயாவை மனைவியாய் பார்க்க முடியுமா என்ற கேள்வி?
எது எப்படியானாலும் அவளும் தன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவள். தன் துயர் துடைத்தவள்.
அப்படி இருக்க அவளின் ஆசையை நிராகரிப்பது நியாயமாகுமா ? ஆனால் காதல் என்பது நியாயம் அநியாயம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்ப்பட்டது.
நன்றிக்கடனுக்காக காதல் செய்ய முடியுமா?!
அவனின் மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டிருக்க, “மகிழ் என்னாச்சு… ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க…?” என்று ஒருவர் கேட்க,
அந்த கணம் இயல்பு நிலைக்கு திரும்பியவன், “நத்திங்… நேத்து நைட் முழுக்க ஷுட்ல இருந்ததால… டிரவுஸினஸ்ஸா இருக்கு” என்றான்.
“மீடியால வொர்க் பண்றவனுக்கு நைட் & டே ஏதுப்பா ? ஷுட்டிங் லைட்லயே இருந்து… பகலும் இரவும் வித்தியாசமே இல்லமா போயிடுச்சு” என்று ஒருவர் சொல்ல, எல்லோரும் சிரித்து அவர் சொன்னதை சரியென்று ஆமோதித்தனர்.
மகிழும் அவர்களோடு புன்னகையித்தாலும், அவன் மனநிலை அவர்களோடு ஒன்றிப் போகவில்லை.
அங்கே தலைமையாய் இருந்த ஒருவர் மகிழை பார்த்து, “இப்பவே இப்படி சோர்ந்து போனா எப்படி? நீங்கதானே இந்த ப்ரோக்ரமுக்கு காம்பையிர்ங் பண்ண போறீங்க… இன்னும் நிறைய நிறைய வொர்க் இருக்கு மகிழ்” என்க, அவன் ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தான்.
எல்லோருமே அவர் சொன்னதை கேட்டு மகிழின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அவனோ தெளிவற்ற நிலையில் இருந்தான்.
இத்தனை பெரிய கலைவிழாவில் தான் தொகுப்பாளரா?
குறுகிய காலத்தில் அமைந்த பெரிய வாய்ப்பு.
அவனால் முழுமையாக சந்தோஷம் கொள்ள முடியவில்லை. ஒருவித நம்பிக்கையமின்மை அவனை ஆட்கொண்டது. மனம் நிம்மதியற்ற நிலையில் இத்தகைய பெரிய பொறுப்பை ஏற்று முழு முனைப்போடு செய்ய முடியுமா என்ற சந்தேகம்தான் அவனுக்கு.
இங்கே விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அந்த அலுவலகத்தின் பிரமாண்டமான முகப்பில் ஜென்னி நுழைந்தாள்.
அவளின் உடலுக்கு கச்சிதமான நீளமான ஆரஞ்ச் ஸ்கர்ட் அணிந்து உயரமான காலணியோடு வந்தவள் ரிசப்ஷ்னிஸ்ட்டிடம்,
“ஐம் ஜென்னித்தா… உங்க எம்.டி யை மீட் பண்ணனும்” என்றாள்.
“ஸார் இப்பதான் கால் பண்ணாரு… நீங்க மேல டென்த் ப்ளோர் போங்க மேடம்” என்று அந்த ரிசப்ஷன்ஸிட் ஜென்னி செல்வதற்கான வழியை காட்டினார்.
ஜென்னி பத்தாவது மாடியில் இருந்த டேவிட் தாமஸ் எம்.டி என்ற கதவில் இருந்த தங்கநிறத்து பலகையை பார்த்துவிட்டு அனுமதி கேட்டு அறைக்குள் நுழைந்தார்.
டேவிடிற்கு அவளை பார்த்ததும் முகம் பிரகாசிக்க, ஜென்னியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அதனை அவன் பார்வை குறித்து கொண்டாலும் கவனியாதவன் போல், “என்ன ஜென்னி ? ஆபிஸுக்கு வந்திருக்க, அதுவும் என்ட்ரன்ஸ்ல வந்துட்டு கால் பண்ற… பார்க்கனுன்னு சொல்லி இருந்தா நானே வந்திருப்பேன் இல்ல” என்றான்.
அவள் பதில் பேசாமல் அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.
அவன் புரியாத பார்வையோடு, “என்னாச்சு ஜென்னி?” என்றவன் “சரி முதல்ல உட்காரு பேசுவோம்” என்றபடி தான் புரட்டிக் கொண்டிருந்த பைஃலை ஓரம் வைத்தான்.
அவள் அமர்ந்து கொள்ளாமல் கூர்மையான பார்வையோடு “நைட் வீட்டுக்கு வந்தீங்களா டேவிட்?” என்று கேட்டாள்.
இந்த கேள்விக்கு டேவிட் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தான்.
காலையில் அவள் மயக்கத்திலிருக்கும் போதே வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தவன், ரூபாவிடம் இரவு நடந்தவற்றை பற்றி பேச வேண்டாம் என்று அதிகாரமாய்
சொல்லியிருந்தான்.
ஜென்னி அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி “ஏன் டேவிட் ? ! நான் நைட் ரொம்ப அரகென்ட்டா நடந்துக்கிட்டேனா? !” என்று கேட்டாள்.
“அப்படியெல்லாம் இல்ல ஜென்னி” என்று அவன் மறுக்க,
“பொய் சொல்லாதீங்க” என்றவள் கோபமாய் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவள் முன் வந்தவன் “இதெல்லாம் உனக்கு யார் சொன்னது ?” என்று வினவ,
“ஏன்? எனக்கு சுயமா புத்தி இல்லயா ?! எல்லா எனக்கே தெரியும்”
“ப்ச்… அதை பத்தி விடு ஜென்னி… நீ மும்பைக்கு எப்போ கிளம்பிற ?!” என்று அவன் பேச்சை மாற்ற
“நான் ஏன் மும்பைக்கு கிளம்பனும்?!” என்று கேட்டு கோபமாய் பார்த்தாள்.
“சொல் பேச்சு கேளு ஜென்னி… இங்க இருக்கிறதினால உனக்கு தேவையில்லாத டென்ஷன்தான்… அதுவும் இல்லாம நீங்க இங்க இருக்க வேண்டிய அவசியமென்ன? இங்க உனக்கு என்ன கமிட்மென்ட் இருக்கு” என்றான்.
“இருக்கு டேவிட்… நான் மிஸ்டர். சையத்தோட படத்தில கமிட்டாகலாம்னு இருக்கேன்”
அதிர்ந்து பார்த்தவன், “ஜென்னி… ஆர் யூ ஸ்ரீய்ஸ்” என்று கேட்டு சந்தேகமாய் பார்க்க
“யா ஐம்” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.
“என்ன திடீர்னு ?”
“தெரியல… பண்ணலாம்னு தோணுச்சு”
“…..” அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவள் இருக்கும் மனநிலையில் இது சரியாய் வருமா என்ற கவலை.
யோசனை குறியோடு நின்றிருந்தவனிடம் “என்ன யோசிக்கிறீங்க டேவிட்? இருக்கிற பிரச்சனையில இவளுக்கு இதெல்லாம் தேவையான்னு யோசிக்கிறீங்களா?”
அவள் சொன்னதை கேட்டு திகைத்தவன் “இல்ல ஜென்னி” என்று மறுப்பாய் தலையசைக்க,
“அப்புறம்… நான் சரியா ஆக்ட் பண்ணுவேனான்னா?!” என்று கேட்டாள்.
“ஜென்னி… இது உன் லைஃப்… இது உன் டெசிஷன் … இதுல நான் சொல்ல என்ன இருக்கு… உன் விருப்பம் என்னவோ அதை செய்” என்க,
“என் விருப்பமா ? ஹ்ம்ம்… என் விருப்பப்படி என் வாழ்க்கையில இதுவரைக்கும் என்ன நடந்திருக்கு டேவிட் ?!… அதெல்லாம் இல்ல… இது டைரக்ட்ர் சையத்தோட விருப்பம்… நேத்து வந்திருந்த போது இதை பத்தி அவர் என் கிட்ட பேசினாரு… அவர் கேட்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது… ஸோ அந்த படம் பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள்.
“நேத்து… ஆக்டர் ராகவும் வந்தாரா?!” என்று கேட்டுவிட்டு அவளை ஆராய்ந்து பார்த்தான்.
அவள் தலையை மட்டும் அசைத்து ஆமோதிக்கும் போது , முகம் முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு மாறியது.
எத்தகைய உணர்வுகளை அவள் காட்டுகிறாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.
அவனே மேலும் தயக்கத்தோடு “நீ டென்ஷனாகமாட்டேன்னா… நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா ?!” என்று கேள்வியாய் பார்த்தவனிடம்,
அவளே அவனிடம் “நேத்து எதனால அப்படி நடந்துக்கிட்டனுதானே கேட்கனும்?” என்க
‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.
“சிகரெட் ஸ்மெல்… உங்களுக்குதான் தெரியுமே ?! எனக்கு சிகரெட் ஆல்காஹாலிக் ஸ்மெல் எல்லாம் அலர்ஜின்னு”
“யாரு? அந்த ராகவ்… ஸ்மோக் பண்ணனா ?!” என்று கோபமாய் கேட்டான்
“ஹ்ம்ம்” என்று யோசனையோடு நின்றவளிடம்
“நீ அந்த ராகவ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே” என்று சொல்லியபடி சீற்றமானான்.
“சொன்னேன் டேவிட்… அந்த இடியட் ராகவ் கேட்கல?!” என்றவளின் விழிகளும் உக்கிரமாய் மாறியது.
“நீ எதுக்கு அவனை வீட்டுக்கு இன்வையிட் பண்ண ஜென்னி… எனக்கு தெரிஞ்சு உன் மேலதான் தப்பு… அவனுக்கு எல்லாம் மரியாதையே தெரியாது… சினி இன்டிஸ்ட்ரீல தான்தான் எல்லாம்னு…. திமிரு தலைகணம்” என்று அவன் அதீத கோபத்தோடு பேச, ஜென்னி வியப்பாய் பார்த்தாள்.
இதை சொன்னதற்கே இவன் இத்தனை கோபம் கொண்டால், அவன் நடந்து கொண்ட விதத்தை அறிந்தால் என்ன செய்வான் ?
இவ்வாறு அவள் யோசித்திருக்கும் போதே டேவிட் அவளிடம் “ஸ்மோக் மட்டூம்தான் பண்ணானா இல்ல… வேறெதாவது அதை தாண்டி நடந்துச்சா?” என்ற கேட்டதும்,
அவள் உடனடியாக மறுப்பாய் தலையசைத்து “அதெல்லாம் இல்ல டேவிட்” என்றாள்.
அவன் மனம் அவள் சொல்வது உண்மையா என சந்தேகித்தாலும் அவளிடம் வற்புறுத்தி கேட்டு அவளுக்கு மேலும் மனஅழுத்தம் கொடுக்க அவன் விருப்பப்படவில்லை.
ஜென்னி அந்த நொடி வந்த வேலையை முடிந்ததென “ஒகே டேவிட்… நான் கிளம்பிறேன்… உங்களை பார்த்து பேசிட்டு போனோம்னு தோணுச்சு.. நேத்து நான் அவ்வளவு கலட்டா பண்ணிருக்கேன்… நீங்கதான் என்னை சமாளிச்சு கூட இருந்து பார்த்துக்கிட்டீங்கன்னு ரூப்ஸ் சொன்னா… நீங்க செய்ற உதவிக்கெல்லாம் நான் என்ன செய்ய போறேன்… இல்ல என்னைதான் செய்ய முடியும்” என்றவளின் விழிகள் நீரினை தேக்கி நிற்க, அதை தன் விரல்களால் துடைத்துக் கொண்டாள்.
“நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்… குடிச்சிட்டு வந்து உன்னை ஆக்ஸிடென்ட் பண்ணி என் சுயநலத்திற்காக உனக்கு நடந்த எதுவும் தெரியாம மறைச்சிருக்கேன்… உனக்கு நடந்த அநியாயத்துக்கு கூட கேள்வி கேட்க முடியாம பண்ணிட்டேன்…” என்றவன் குற்றவுணர்வோடு பார்க்க,
“யாருன்னு தெரியாம யாரை கேள்வி கேட்க முடியும்?” என்றாள் விரக்தியோடு !
“நீ நினைச்சா முடியும்…” என்று திடமாய் உரைத்தவனிடம் அவள் பதில்பேசாமல் அழுத்தமான மௌனத்தோடு நிற்க, அவளுக்கு அந்த விஷயத்தை பற்றி விவாதிக்க கூட விருப்பமில்லை என்பதை உணர்ந்தான்.
சட்டென்று பேச்சு மாற்றியபடி “உனக்கு இன்னைக்கு வேறெதாச்சும் கமிட்மென்ட் இருக்கா ?” என்று ஜென்னியை நோக்கி கேள்விஎழுப்பினான்.
“ஏன் கேட்கிறீங்க ?”
“வெளியே போவோமா ? ரெஸ்ட்ரன்ட் பீச்… இப்படி எங்கயாச்சும் ?”
“இப்பவா ?!” என்று ஆச்சர்யமாய் அவள் கேட்க “ஹ்ம்ம்ம்” என்பது போல் தலையசைத்தான்.
நேற்றிலிருந்து அவள் மனநிலை சரியில்லை என்பதை உணர்ந்தே அவளை வெளியே அழைத்துப் போக கேட்டான்.
ஜென்னி சில விநாடிகள் யோசிக்க “ஹீரோயினி மேடம் அப்புறம் ஷுட்டிங் அது இதுன்னு பிஸியாகிடுவீங்க… இப்பவே போனாதா உண்டு” என்க,