ID5

ID5

12

வீழ்வேனென்று நினைத்தாயோ!

விந்தியாவும் சித்ராவும் பதறிக் கொண்டு வெளியே வந்தனர். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போக, சிவா உடனே செயல்பட்டான். மாதவி படிக்கட்டுகளில் இருந்து விழுந்து காயமுற்றிருந்தாள்.

சிவா உடனே தூக்கி சென்று வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தான். வனிதா மருத்துவமனை என்றும் பாராமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். வருண் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான். விந்தியா கலையாத அலங்காரத்தோடு நின்றிருந்தாள்.

அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்க்கஅவள் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. கண்ணீர் தன்னைப் பலவீனமாக்கிவிடுமோ என நம்பிக்கையைச் சுமந்தபடி சிலை எனவே நின்றிருந்தாள். சில மணி நேரங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார். அவர் சொன்ன விஷயம் அங்கிருந்த எல்லோரையும் கலங்கடித்தது.

பி. பி அதிகமானதினால் மயக்கம் வந்திருக்கு. மாடியிலிருந்து விழுந்த அதிர்ச்சியால் கழுத்துக்குக் கீழ் உள்ள பாகங்கள் செயல்படவில்லை… இன்னும் தெளிவான ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பின்புதான் இந்தப் பாதிப்பு பற்றிய விவரம் தெரியும்

என்ன சொல்றீங்க டாக்டர்கண்டிப்பா அப்படி எல்லாம் இருக்காது. என்னோட கல்யாணத்தை எப்படி எல்லாம் நடத்த கனவோடு இருக்காங்க. இல்ல டாக்டர்… அப்படி எல்லாம் இருக்காது” என்று விந்தியா உணர்ச்சிவசப்படசரோஜா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

அவளை மீறிக் கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் விந்தியா எத்தனை மணி நேரம் அழுதிருப்பாளோ?எல்லாச் சரியாகிவிடும் என்று பெயருக்குச் சமாதானம் சொல்லிவிட்டு கிருஷ்ணகுமாரும் அவர்களுடைய குடும்பத்தினரும் முதலில் புறப்பட பிறகு உறவினர்நண்பர்கள் என ஒவ்வொருவராய் வெளியேறினர்.

இரண்டு நாட்களில் எல்லா ரிப்போர்ட்டுகளும் வந்துவிட மாதவியைக் குணப்படுத்துவது அசாத்தியம் என கை விரித்து விட்டனர். விந்தியா கலங்காமல் மாதவியைச் சரி செய்வதற்காக அவளுடைய ரிப்போர்ட்டுகளை மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனைகளில் விசாரித்த போது ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருப்பதாகச் சொன்ன சாக்ஷி மருத்துவனையில் சேர்ப்பித்தாள்.

ஆரம்ப நிலை சிகிச்சைக்கே பணமெல்லாம் செலவானது. வருண் நிலைமையைச் சமாளிப்பது பற்றி விந்தியாவிடம் கேட்டான்.

நகைகள் இருக்குல்ல… அதை வித்திடு வருண்

அம்மா உன்னோட கல்யாணத்திற்காகச் சேர்த்தது

என் கல்யாணத்தில் நான் கழுத்து நிறைய நகை போடணுமா இல்ல அம்மா என் பக்கத்தில் இருக்கணுமா?” என்று விந்தியா சிக்கலான கேள்வி எழுப்ப அந்தக் கேள்விக்கு வருணிடம் பதில் இல்லை.

நான் சொல்வதைச் செய்” என்றாள் அதிகாரமாய்.

வருண் சென்ற பின்பு மாதவி விந்தியாவிடம் அவள் நிலைமை குறித்துக் கண்ணீர் வடித்தாள். பின்னர் விந்தியா அவளைத் தேற்றி உறங்க வைத்தாள். விந்தியாவும் லேசாகக் கண்ணயர்ந்துவிடஅவள் விழித்துப் பார்க்கையில் அங்கே இருந்த மாதவி ரிப்போர்ட்களைப் படித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ண குமார்.

சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் கிருஷ்ண குமார் விந்தியாவை நோக்கி!

இட்ஸ் ஓகே… அம்மா இப்பதான் தூங்குறாங்க… வெளியே போகலாம்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே அழைத்து வந்தாள் விந்தியா.

டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?”என்று கேட்டான் கிருஷ்ண குமார்.

எங்களால் ஆன முயற்சி செய்றோம்னு சொல்றாங்க

நடக்காத ஒரு விஷயத்திற்காக நீங்க ரொம்ப மெனக்கெடுறீங்க

புரியல

உங்க அம்மா எழுந்து நடக்கிறது இம்பாஸிபில் விந்தியா” என்று அவன் சொன்ன வார்த்தை அவளின் நம்பிக்கையைத் தகர்த்து எறிவது போல் இருந்தது.

ஒரு டாக்டரா சொல்றேன்… காசு மட்டுமே செலவாகும்… ஆனால் குணமாகாது

அவன் பேசி கொண்டிருக்கும் போதே கைகளைக் காட்டி நிறுத்தினாள்.

வேண்டாம் ப்ளீஸ்… நெகடிவா எதுவும் சொல்லாதீங்க” என்றாள்.

நெகடிவா பேசல… ரியாலிட்டியை சொல்றேன்

அதுதான் வேண்டாமே” என்றாள் விந்தியா கோபத்தோடு.

வேற சாய்ஸ் இல்ல… உங்களால் இந்த டீரிட்மெண்டுக்கு ஆகிற செலவை மேனஜ் பண்ண முடியாது

உங்க கரிசனத்துக்கு ரொம்பத் தேங்க்ஸ்… ஆனா நிச்சயம் உங்ககிட்ட பணம் கேட்கமாட்டேன்

நீங்க அவசரப்படுறீங்க விந்தியா. நான் உங்க அம்மாவை அப்படியே விட்டுடணும்னு சொல்லலியே... ஒரு நர்ஸ் வைச்சுப் பாத்துக்கலாம்… அதுக்காக ஆகிற செலவை ஏத்துக்கலாம்

அவன் பேசிய வார்த்தைகள் விந்தியாவைப் பெரிதும் கோபப்படுத்தின.

எங்க அம்மாவை வாழ்க்கை முழுக்க முடமாகவே வைச்சிருக்கணும்னு சொல்றீங்க

அப்படி இல்ல…

பின்ன வேறெப்படி மிஸ்டர்… முகமூடி போட்டு அடிக்கிற கொள்ளையை விட வெள்ளை கோட் போட்டு நீங்க அடிக்கிற கொள்ளைதான் அதிகம்… இல்லயா?”

என்ன பேசிட்டிருக்க” என்று மிரட்டலாய் கேட்டான் கிருஷ்ண குமார்.

உள்ளதைத்தான் சொல்றேன்… என்ன குத்துதா?”

வேண்டாம் விந்தியா

நானும் அதையேதான் சொல்றேன். நமக்குள் எந்த உறவும் வேண்டாம். உன்ன மாதிரி ஒருவனோட என் லைஃபை ஷேர் பண்ண நான் தயாராக இல்ல” என்று சொல்லிவிட்டுக் கையில் இருந்த மோதிரத்தை கழட்டஅது அவள் விரலை விட்டு வர மறுத்தது.

நீ நடந்துக்கிறது சரியில்ல” என்று கிருஷ்ண குமார் சொல்லும் போது விந்தியா மோதிரத்தை தூக்கி வீசினாள்.

எவ்வளவு திமிரு” என்று சொல்லியபடி கிருஷ்ண குமார் விந்தியாவின் மீது கைகளை ஓங்கினான்.

சரியான சமயத்தில் சிவா அவன் ஓங்கிய கைகளைப் பிடித்துத் தள்ளினான்.

கையை உடைச்சிடுவேன்” என்று சிவா மிரட்ட அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கிருஷ்ண குமார் மறுகணமே அங்கிருந்து புறப்பட்டான்.

அந்த நேரத்தில் வனிதாவும் சிவாவோடு வந்திருந்தாள். அவள் கண்ட காட்சி அவளைச் சந்தேகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நடந்தது என்ன என்பதை வனிதா தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் மாதவி இருந்த அறைக்குள் சென்றுவிட்டாள். சிவா விந்தியாவிடம் நடந்தவற்றை விளக்கமாகக் கேட்டறிந்தான்.

அதற்குள் வருண் கிருஷ்ணகுமார் சொன்ன கதைகளைக் கேட்டு விந்தியாவிடம் சண்டையிட்டான். சிவா அவனிடம் புரிய வைக்க முயற்சி செய்யவனிதா வருணோடு சேர்ந்து கொண்டாள்.

போதும் உங்க டிராமாவை நிறுத்துங்க. உன் கல்யாணம் நின்னு போச்சுனு தெரிஞ்சா அம்மா எப்படிக் குணமாவாங்க?அம்மாவுக்கு அதிர்ச்சயாகதான் இருக்கும். நீ அம்மாவை பத்தி கவலைபடல. உன் சுயநலம்தான் உனக்கு பெரிசா இருக்கு… இல்ல?”என்று வனிதா விந்தியாவை வார்த்தைகளால் காயப்படுத்தினாள்.

வனிதா!” என்று அதட்டினான் சிவா. ஆனால் வனிதா நிறுத்தாமல் மேலும்,

அம்மாவுக்கு உனக்கு நல்ல வாழ்கையை அமைச்சு கொடுக்கணும் என்பதுதான் ஒரே கவலை. இன்னும் நீ பழசை மறக்கல… அதான் நீ இப்படி நடந்துக்கிற. சரி போகட்டும்… உனக்கு என்னோட வாழ்க்கையைத்தான் பங்கு போட்டுக்ணும்னா… சரிஅம்மாவுக்காக அதுக்கும் நான் தயாராத்தான் இருக்கேன்” என்று வனிதா ரொம்பவும் கடுமையாகப் பேசினாள்.

வனிதாவை நோக்கி சிவா கோபத்தோடு அருகில் வர விந்தியா அவள் முகத்தில் பளீரென அறைந்தாள்.

விந்தியா அப்படி நடந்து கொண்டதினால் வருணும் வனிதாவும் கோபத்தோடு எதுவும் பேசாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். விந்தியா தலை மீது கை வைத்தபடி அமர்ந்து கொள்ள சிவா என்ன பேசுவதென்று புரியாமல் அவளின் தோள்களைத் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு அவளின் வேதனையான முகத்தைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து அகன்றான்.

அடுத்த நாள் மாதவியைப் பார்க்க கூட இருவரும் வராத நிலையில் விந்தியா துவண்டு போய் மாதவியின் அருகில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது சிவா தன் தாய் சரோஜாவுடன் அங்கு வந்திருந்தான். சரோஜா அவளை வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்படி அனுப்பி வைத்தாள்.

விந்தியாவிற்கும் மாதவியின் முன்னிலையில் எந்தப் பிரச்சனையையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் நடிப்பது ரொம்பவும் சிரமமாய் இருந்தது. அதனால் சரோஜாவை அங்கே மாதவிக்குத் துணையாக விட்டுவிட்டு விந்தியா புறப்பட்டாள்.

அவள் செல்வதற்கு முன் சிவா விந்தியாவின் கைகளில் ஒரு போட்டோ ஒன்றை வைத்தான்.

என்னது சிவா?” என்று புரியாமல் கேட்டாள்.

பாரு” என்றான் சிவா.

அந்த போட்டோவை பார்த்ததும் விந்தியாவிற்குச் சிரிப்பு வந்தது. அது அவர்கள் இருவரும் கல்லூரியில் மாறுவேடம் அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம். அதில் சிவா சுபாஷ் சந்திர போஸாகவும்விந்தியா பாரதியாராகவும் நின்றிருந்தனர்.

அப்போ நீ பேசின பாரதியோட கவிதை… கேட்ட எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இப்போ ஞாபகம் இருக்கா இல்ல மறந்திட்டியா?”

எப்படி மறப்பேன்?

தேடிச் சோறு நிதம் தின்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்

வாடி துன்பம் மிக உழன்று பிறர்

வாட பல செயல்கள் புரிந்து நரை

கூடி கிழப் பருவமெய்தி கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ!

என்று பாரதியின் அதே கம்பீர பிரதிபலிப்போடு பாடி முடித்தாள்.

இந்த மனோபலம் எங்கடி போச்சு உன்கிட்ட? எதையுமே தைரியமா சமாளிப்ப… அழுதா வீக்காயிடுவோம்னு சொல்லுவ… அந்த தன்னம்பிக்கை எங்க போச்சு? விந்தியா இப்படிச் சோர்ந்து போக மாட்டா…

அத்தையை குணப்படுத்தணும்னா அந்த ஸ்டிராங் விந்தியாவாலதான் முடியும்… ஷீ கேன் டு எனிதிங். ஆனா உன்னால முடியும்னு எனக்குத் தோணல” என்றான் சிவா அவளை இளக்காரமாய்ப் பார்த்தபடி!

விந்தியா அவனைப் பார்த்து சிரித்தபடி, பார்க்கலாம் சிவா… என்னால எப்படி முடியாம போகுதுனு… நான் கூடிய சீக்கிரம் அம்மாவை குணப்படுத்திக் காட்டுறேன்” என்றாள்.

திஸ் இஸ் வாட் விந்தியா இஸ்” என்று சிவா தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

சிவா மீண்டும் அவளுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தான். ஆயரமாயிரம் உறவுகள் இருந்தாலும் சிவா போன்ற ஒரு நண்பனுக்கு ஈடாகாது.

விந்தியா அவள் வாழ்வின் மோசமான அத்தியாயங்களை தன்னம்பிக்கையோடு கடந்து வந்தாள். யாராலுமே நம்ப முடியாத அதிசயமாய் மாதவி புத்துயிர் பெற்றவளாய் நடமாடத் தொடங்கினாள். விந்தியா தான் நினைத்ததை நிறைவேற்றினாள்.

ஆறு மாதங்கள் துயர் துன்பங்களை விலக்கி அவளின் நம்பிக்கையின் துணை கொண்டு கடந்து வந்தாள். கசந்து போயிருந்த உறவுகளையெல்லாம் இணைக்கும் விதமாய் விந்தியாவின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.

குணம்பணம் என எந்தவொரு விஷயத்திலும் ஒத்து போகாத ஒருவனோடு விந்தியா கை கோர்க்க போகிறாள். இனி அவள் வாழ்கையின் பாதை தடம் மாறப் போகிறது.
 

13

யாரடி நீ?

விடிந்தும் விடியாமல் வானம் செந்நிற துகள்களைத் தூவ ஆதவன் மெல்ல அந்தக் கரும் போர்வையில் இருந்து வெளியே எட்டி பார்த்தான்.

அந்த அழகிய விடியலை ரசிக்க நேரமின்றி எல்லோரும் அந்தப் பிரமாண்டமான திருமண மண்டபத்தில் தங்களின் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மணமேடையோ பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும் விதமாய் வண்ணமயமான பூ மாலைகளால் அலங்கரிக்கபட்டு வாசம் வீசியபடி இருந்தது. இரு திருமணங்கள் ஒரே மேடையில் அரங்கேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேடையின் ஒரு புறம் மாதவி அவளுக்கென்ற இருக்கையில் அமர்ந்திருக்க வனிதா ஏற்பாடு செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றி அம்மாவிடம் ஆலோசனை கேட்டு கொண்டிருந்தாள். சந்திரகாந்த் ஒரு வெள்ளை ஷர்வானியில் அவருக்கே உரிய பாணியில் கை கூப்பி வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

மேடையின் ஒரு புறத்தில் வருண் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருக்கமறு புறத்தில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு அகன்ற தோள்களோடு கம்பீரமாய் அமர்ந்து கொண்டு நடைபெறும் திருமணத்திற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் காதில் போனை வைத்து பேசிக் கொண்டிருந்தான் நம் கதை நாயகன் ஆதித்தியா.

போனில் மறுபுறம் சமுத்திரன் பேசிக் கொண்டிருந்தான்.

வெரி சாரி ஆதி… திடீர்னு உனக்குக் கல்யாணம்னு சொல்லிட்டாரு… நான் ஒரு கேஸ் விஷயமா கொல்கத்தாவில் மாட்டிக்கிட்டேன்டா… வர முடியல

எனக்கே திடீர்னுதான் சொன்னாரு… நீ அங்கயே இரு… வந்து ஒண்ணும் கழட்ட வேண்டாம்

அப்போ கல்யாணம் கன்ஃபார்மா

அதான் என் கழுத்தில் மாலையை மாட்டி பலியாடா உட்கார வைச்சிட்டாரே… அருவா ஒண்ணுதான் மிஸ்ஸிங்” என்று ஆதி சொல்ல சமுத்திரன் சிரித்து விட்டு

பொண்ணு யாருடா?” என்று கேட்டான்.

அப்படி எந்த ஊர் இளவரசியைப் பாத்து வைச்சிருக்காருன்னு தெரியலையே

என்னடா சொல்றபொண்ண நீ பார்க்கலையா?”

பெயர்தான் தெரியும்… அதுவும் இன்விட்டேஷன்லதான் பார்த்தேன்

இது ரொம்ப ஓவர்டா… ஆனா நீ எப்படி ஒத்துக்கிட்டேன்னுதான் எனக்குப் புரியல ஆதி

நான் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண பணம் கேட்டதுக்கு என்னை நம்பி கொடுக்க மாட்டேன்னு சொன்னாரு… பட் நவ் நான் எவ்வளவு டிமான்ட் பண்ணாலும் கொடுக்கிறேன்னு மிஸ்டர். சந்திரகாந்த் ஒத்துக்கிட்டாரு. ஆன் ஒன் கண்டிஷன்… இந்த மேரெஜுக்கு நான் சம்மதிக்கணும்

நிஜமாவா? ஷாக்கிங்கா இருக்கே?”

எனக்கும்தான் சமுத்திரா… இத்தனை நாள் கேட்டதைக் கொடுக்காம அந்த விந்தியாவை கல்யாணம் செய்தா கொடுப்பாருன்னா… அப்படி என்ன மிஸ். விந்தியாகிட்ட ஸ்பெஷல்?”

மொத்ததில் நீ நினைச்சது நடக்குது… கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க உனக்கு ரொம்ப அதிர்ஷ்டமானவங்க

நாட் அட் ஆல்… அவள் எப்பேர்ப்பட்டவளா இருந்தாலும் மிஸ்டர். சந்திரகாந்த் செலக்ட் பண்ண பெண்ணை நான் ஏத்துக்கவே மாட்டேன்… அவ எனக்கு வேலைக்காரிதான்

கடைசியில் சமுத்திரன் ஆதிக்கு விருப்பமில்லாத போதும் வாழ்த்து சொல்லி விட்டுப் போனை கட் செய்தான்.

ஆதிக்கு விந்தியாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அவன் அவள் வரும் வழி நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தான்.

மணமகள் அறையில் விந்தியா மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள். அந்த அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மஞ்சள் நிற பட்டுபுடவை உடுத்தி கொண்டு பிரகாசிக்கும் சூரியனை போலவே மின்னிக் கொண்டிருந்தாள்.

தலையில் நீட்டமாய்ப் பின்னப்பட்டிருந்த ஜடையும்அவற்றின் மீது சூட்டப்பட்ட பூக்களும் ஓர் கிரீடம் போல் அமைந்துவிட்டன. கண்ணாடியில் தெரிந்து கொண்டிருக்கும் விந்தியாவின் பிம்பம்அவள் எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பது போல் புலப்பட்டது.

விந்தியாவின் யோசனை எல்லாம் ஆதித்தியா பற்றி அவள் குடும்பத்தினரிடம் உறைத்த பொய்கள்தான். திருமணத்திற்குப் பின் அந்தப் பொய்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடுமோ என்ற கவலைதான்.

மாதவி சாக்ஷி மருத்துவனையில் இருந்த போது விந்தியா ரொம்பவும் பணம் ஏற்பாடு செய்யச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில்தான் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் அவளின் நிலைமையைப் புரிந்து கொண்டு சில செலவுகளை மருத்துவனை ஏற்றுக் கொண்டு உதவி செய்வதாகச் சொன்னார்.

 சிகச்சைகளை எல்லாம் துரிதப்படுத்த மாதவி வேகமாய் முன்னேற்றம் அடைந்து கொண்டு வந்தாள்.

மாதவி குணமடைந்து வீட்டிற்குப் போகும் போதுதான் தலைமை மருத்துவர் மோகன், “என்னுடைய நண்பன் சந்திரகாந்த்தான் இந்த உதவியை உனக்காகச் செய்யச் சொல்லி பணித்தார். பணம் கொடுத்து உதவியதும் அவர்தான் என்று கூறினார்.

சந்திரகாந்த் தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் பிரச்சனையையும் புரிந்து கொண்டு உதவக் கூடியவர். அப்படிதான் மருத்துவமனைக்கு வரும் போது விந்தியாவைக் கவனித்து விட்டு அவள் பிரச்சனையை விசாரித்து அவரே தானாக முன் வந்து உதவி செய்ய முடிவு செய்திருக்கிறார். அப்பொழுதுதான் விந்தியாவைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார்.

இளம் வயதில் அவள் தன் தந்தையை இழந்து தன் குடும்பப் பொறுப்புகளைத் தானே சுமந்து கடமைகளை நிறைவேற்றிய விதம் சந்திரகாந்த்தை பிரமிக்க வைத்தது. அதுதான் ஆதியின் மனைவியாய் விந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

அந்த எண்ணத்தை தான் நன்றி சொல்ல வந்த விந்தியாவிடம் வெளிப்படுத்தினார். ஆதியின் குணத்தைப் பற்றியும் விந்தியாவிடம் மறைக்காமல் உண்மையைக் கூறினார்.

நீ ஆதியை மணந்து கொள்ளச் சம்மதித்தால் நீ எனக்கு மருமகளாய் இருப்ப… இதற்கு உனக்கு விருப்பமில்லை என்றால் நீ எனக்கு மகள்… அவ்வளவுதான். இதில் உனக்கு எந்த வித கட்டாயமும் இல்லை” என்றார்.

அந்த நேர்மையான கேள்வி விந்தியாவை அந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தது.

ஏன்… நான் உங்க மகனை கல்யாணம் செஞ்சா உங்கள் மகளாய் இருக்கக் கூடாதா என்ன… அம்மாகிட்ட பேசுங்க சார்… அவங்க முடிவும் முக்கியம் “ என்றாள்.

மாதவிக்குக் கிருஷ்ண குமாரின் விஷயம் தெரிய வந்து அவளை அதிர்ச்சி அடைய வைத்தாலும் சந்திரகாந்த் சம்பந்தம் பேச அந்த வருத்தமும் மறைந்தது.

அதே நேரத்தில் வருண் காதலித்த நந்தினியை திருமணம் செய்விக்க அம்மாவிடம் சம்மதம் வாங்கினாள்.

ஆதியை பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது போட்டோவை மட்டும் காண்பித்து அவன் வெளிநாட்டில் இருப்பதாகப் பொய்யுரைத்து சமாளித்தாள். அதுமட்டுமின்றி அவனிடம் தான் பேசி இருப்பதாகவும் அடுக்கடுக்கான பொய்களைக் கூறினாள்.

விந்தியா தன்னுடைய கடைசி கடமையான தம்பியின் திருமணத்தையும் முடித்துவிட வருணுக்கும் அதே மேடையில் திருமணம் நடைபெற சந்திரகாந்த்திடம் வேண்டுதல் விடுத்தாள்.

விந்தியாவிற்கும் சந்திரகாந்த்திற்கும் உள்ள புரிதல் இருபக்கமும் ஏதேதோ பொய்களைச் சொல்லி மேடைவரை இந்த இரண்டு திருமணத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் சிவாவை மட்டும் அவளால் ஏமாற்ற முடியவில்லை.

அவன் ஆதித்தியா பற்றிய முழு விவரங்களை விசாரித்துவிட்டான். அவன் இந்தத் திருமணத்தை நிறுத்தியே தீர வேண்டும் என விந்தியாவிடம் சொல்ல அவர்கள் இடையில் மோதல் பெரிதானது.

உனக்கு விருப்பமில்லைனா திருமணத்திற்கு வராதே” எனக் கோபத்தோடு உரைத்துவிட்டாள் விந்தியா.

இத்தனை சோதனைக்குப் பிறகு இந்தத் திருமணம் கடைசிப் பரபரப்பை எட்டியுள்ளது. வருண் மாப்பிள்ளை கோலத்தில் அமைதியோடு சொல்லும் மந்திரங்களையும் உச்சரித்துச் சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருக்க ஆதி அவன் அருகில் அமர்ந்திருந்த ஐயரை பாடாய்ப்படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் சொல்லும் மந்திரத்தை திருப்பிச் சொல்லுங்கோ

அதை எல்லாம் நீங்களே சொல்லுங்கோ… முதலில் பொண்ணை வரச் சொல்லுங்கோ

அதுக்கு நாழி இருக்கு தம்பி

என்னை மட்டும் காலையில எழுப்பிக் குளிக்கச் சொல்லி புகை போட்டு தள்ளிண்டிருக்கேள்

அதுதான் ப்ரொசீஜர்…

நல்ல ப்ரொசீஜர்… அட்லீஸ்ட் நான் இருக்கிறது தெரியாதபடிக்கு புகை இன்னும் கொஞ்சம் அதிகமா போடுங்கோ… நான் போய்ப் பொண்ணைப் பாத்துட்டு வந்துடுறேன்

அது அபச்சாரம்

நீங்க எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேங்கறேள்

நீங்க என்னைக் கொஞ்சம் தொந்தரவு செய்யாம இருந்தா நான் சடங்குகளை சீக்கிரம் செஞ்சிடுவேன்

ஆதித்தியா சலித்துக் கொண்டு கேரி ஆன்” என்று ஐயரிடம் சொல்லிவிட்டு விந்தியாவைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். யாரடி நீ?’

அவன் எதிர்பார்த்த சமயம் வந்தது. மணமகளை அழைத்துக் கொண்டு வரச் சொல்ல விந்தியாவின் அறைக்கு வனிதா சென்றாள். அவள் நெற்றியில் விலகி இருந்த சுட்டியை சரி செய்து மாலையை லாவகமாய் ஜடையில் சிக்காமல் மாட்டிவிட்டாள்.

அக்கா என் முகத்தைப் பாருக்கா… இப்பையாவது பேசுக்கா” என்றாள் வனிதா.

ஆனால் விந்தியா பதில் எதுவும் பேசாமல் அவளைக் கவனியாமல் நின்றிருந்தாள். அவள் மாலையும் கழுத்துமாய் அம்மன் சிலைப் போல நடந்து வருவதைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள் மாதவி.

வருண் அருகில் நந்தினி மணக்கோலத்தில் அமர்ந்திருக்க விந்தியா அதை ஆனந்தமாய் ரசித்தாள். ஆனால் அவள் தேடிய முகம் அவள் கண் முன் தோன்றவில்லை. சிவா உண்மையிலேயே திருமணத்திற்கு வரவில்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

சிவா எங்கே சென்றான் என விந்தியாவின் விழிகள் தேட அந்த உண்மையை நம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த கடமை பட்டிருக்கிறோம்.

கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு முன்பு இறந்து போன கேத்ரீன் மரணம் விபத்தல்ல என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,அந்தக் கேஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டராகப் போஸ்டிங் தந்து சிவாவும் சேர்ந்து விசாரிக்கக் கமிஷ்னர் அவர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

தவிர்க்க முடியாத சூழலில் தன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் சிவா அங்கே மாட்டிக் கொண்டான்.

மண்டபத்தில் தலை குனிய வரவேண்டிய மணமகளின் கண்கள் அலைப்பாய்ந்து கொண்டிருந்தன. விந்தியாவைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த நம் கதைநாயகன் புகை மூட்டத்தில் கண்கள் எரிய ஐயரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

error: Content is protected !!