mu-22

கற்பனை பிம்பம்

அரண்மனை போன்ற அந்த வீட்டின் முகப்பறையின் நடுவில்… அவந்திகாவும் சுந்தரும் வேலை விஷயமாக மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும்  நோக்கி கம்பீரமாய் நடந்து வந்த ஈஷ்வர் நேராய் வந்து சுந்தரைப் பார்த்து புன்னகை புரிய, இருவரும் மரியாதை நிமித்தமாக கை குலுக்கிக்கொண்டனர்.

ஹவ் ஆர் யூ அங்கிள்?” என்று ஈஷ்வர் உற்சாகமாய் வினவ,

சுந்தர் ஈஷ்வரின் கம்பீரத்திற்கு முன் கொஞ்சம் பவ்வியமாய், “நல்லா இருக்கேன் தம்பி… நீங்க எப்படி இருக்கீங்க… உங்களைப் பார்த்தே ரொம்ப நாளாயிடுச்சே” என்றார்.

ஐம் குட்… யா நாம மீட் பண்ணி இயர்ஸ் கான்… என்ன பண்றது… லாட்ஸ் ஆஃப் வொர்க்” என்று சொல்லியபடி சோபாவில் அமர்ந்து அவரையும் அமரச் சொன்னான்.

சுந்தர் பார்க்க சற்று வயதான மரியாதைக்குரிய தோற்றத்தோடு இருக்கஅவரின் முறுக்கியிருந்த மீசை ஒரு மிரட்டல் தோரணையைக் கொடுத்தது.

ஈஷ்வர் அவரை அங்கிள் என்று உரிமையாய் விளித்தாலும் அவர் அத்தகைய உரிமையை எடுத்துக் கொள்ளாமல் மரியாதையாகவும் ரொம்ப பவ்யாமகவும் அமர்ந்தபடி, “உங்க வேலைப்பத்தி எனக்கு நல்லா தெரியும்… ஆனா மும்பையிலிருக்கிற நம்ம மெயின் பிரேஞ்சிற்கு நீங்க அப்பப்போ வந்து விசிட் பண்ணிட்டுப் போகலாம் இல்லையா?!” என்று கேட்டார்.

அவந்திகாவும் அந்தக் கருத்தை ஆமோதித்து, “சுந்தர் சொல்றது கரெக்ட்தான் தேவ்” என்றார்.

ஈஷ்வர் புன்னகையோடு, “நீங்க கேட்கறது கரெக்ட்… பட் எனக்கு அவசியம்னு படல… பிகாஸ் நீங்களும் மாமும்தான் கம்பெனியை சூப்பரா ரன் பண்ணிட்டிருக்கீங்க… அதுவும் இல்லாம உங்க டாட்டர்  சூர்யா வேற வெரி ப்ரில்லியன்ட்… மாம்முக்கு செம சப்போர்டட்டிவ்… ஸோ என் விசிட்… நாட் நீடட் அங்கிள்” என்றான்.

சுந்தர் தன் மகளைப் பற்றி முதல்முறையாய் ஈஷ்வர் சொன்ன புகழுரையைக் கேட்டுப் பூரித்துப் போயிருக்கஅவந்திகாவின் மனம் சட்டென்று வேறு எண்ணத்தை தலைதூக்கச் செய்தது. சூர்யாவின் புத்திசாலித்தனத்தை அறிந்து ஈஷ்வர் வியக்கவும் ரசிக்கவும் செய்கிறான் எனில் நிச்சயம் அவளை நேரில் கண்டு பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் அவளை அவனுக்குப் பிடித்து போகும் என்று தன் கற்பனைக் குதிரையை வேகமாக ஓட விட அருகிலிருந்த ஈஷ்வர் தன் தாயின் தோள்களில் கைவைத்தான்.

மாம்… என்னாச்சு?! நான் இவ்வளவு நேரமா உங்ககிட்டதான் பேசிட்டிருக்கேன்… என்னை கவனிக்காம நீங்க என்ன தனியா யோசிச்சிட்டிருக்கீங்க?” என்று கேட்க,

அவந்திகா தன் மனதிற்குள் உண்மையிலேயே தான் நினைத்தது நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சூர்யாவைப் பற்றி தான் சொல்லாமல் அவனாகவே உணர்ந்து கொள்ள வேண்டுமே என்று எண்ணினாள்.

மீண்டும் ஈஷ்வர் சலிப்போடு, “மாம்… அகெய்ன்… வாட்ஸ் இன் யுவர் மைன்ட்… என்கிட்ட அதையாச்சும் சொல்லுங்க” என்றான்.

அவந்திகா தன் எண்ணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெற்றுப் புன்னகையோடு, “நத்திங் தேவ்… நீ என்ன சொல்லிட்டிருந்த?” என்றார்.

நான் தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு இருக்கிறேன்… அங்கே இருக்கிற சென்னை அண்ட் கோவை பிரேஞ்ச் ஆபிஸை  விசிட் பண்ணிட்டு… அப்படியே ஒரு நல்ல லொகேஷன் சூஸ் பண்ணி தமிழ்நாட்டில ஒரு  ரிசர்ச் சென்டர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா… வாட் டூ யூ சே?” என்றான்.

அவந்திகா ஆர்வமாய் தலையசைத்து, “குட் ஐடியா… பண்ணலாமே… நீங்க என்ன சொல்றீங்க சுந்தர்?” என்று அவர் பார்வை சுந்தரை நோக்கித் திரும்பியது.

எனக்கும் நல்ல யோசனைன்னுதான் தோணுது… பட் இதுக்குன்னு நீங்க தமிழ்நாட்டுக்குப் போகணுமா?” என்று சுந்தர் இழுத்தார்.

அவந்திகா இப்போது சுந்தரை நோக்கி, “போயிட்டு வரட்டும் சுந்தர்… எல்லா பிரேஞ்ச் ஆபிஸ்ஸையும் ஈஷ்வர் விசிட் பண்ணிருக்கான்… என்ன காரணத்தினாலோ சென்னைக்கு மட்டும் அவனுக்குப் போகிற சான்ஸ் கிடைக்கவேயில்லை… ஸோ போயிட்டு வரட்டும்” என்றார்.

ஈஷ்வரும் புன்னகையோடு, “எனக்குமே தமிழ்நாட்டை விசிட் பண்ணனும் லாங் டைம் டிஸையர்… அதுவும் இல்லாம எங்க  அப்பாவோட பர்த் பிளேஸ் வேற” என்று உரைத்தாலும் அவன் மனதில் உள்ள திட்டமே வேறு.

சுந்தரும் புன்முறுவலோடு, “அதுவும் சரிதான் தம்பி… நீங்க கண்டிப்பா ஒரு தடவையாவது நிச்சயம் தமிழ்நாட்டுக்குப் போயிட்டு வரணும்… அது உங்க முன்னோர்கள் அரசாண்ட ஊர்” என்று உரைத்தார். சுந்தருக்கு அவர்களின் குடும்ப வரலாறும் பெருமையும் நன்கு தெரிந்திருந்தது.

ஈஷ்வர் தெரிந்தோ தெரியாமலோ தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்லப் போகிறான்.

அப்போது ஈஷ்வர் மீண்டும் அவந்திகாவை நோக்கி, “மாம்… நான் அங்க இருக்கிற வரைக்கும் என் கூட யாராச்சும் அசிஸ்ட் பண்ணணும்… பிகாஸ் மதி அவங்க சொந்த ஊருக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கான்… நானும் ஒகே சொல்லிட்டேன்” என்றான்.

நோ பிராப்ளம்… தேவ்… இப்ப சூர்யா அங்கதானே இருக்கா… உன் விசிட் முடியற வரைக்கும் அவளை ஹெல்புக்கு வைச்சுக்கோ” என்று அவந்திகா உரைக்க அவனின் திட்டம் நன்றாகவே வேலை செய்தது.

ஆனால் சுந்தர் இப்போது அவசரமாக, “வேண்டாம் மேடம்… தம்பி வேற யாரையாச்சும் கூட வைச்சுக்கிட்டா பெட்டர்… சூர்யா சரியா வரமாட்டா” என்று மறுத்துப் பேச ஈஷ்வர் இதை எதிர்பாராமல் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தான்.

நீங்க ஏன் அப்படி சொல்றீங்கன்னு புரியுது சுந்தர்?” என்று அவந்திகா சொன்ன மறுநொடி, எதனால அங்கிள் சூர்யா வேணாங்கறார்?” என்று குழப்பமாய் கேட்டான் ஈஷ்வர்.

நத்திங்… சூர்யாகிட்ட எவ்வளவு புத்திசாலிதனம் இருக்கோ… அவ்வளவு கர்வமும் இருக்கு… அவகிட்ட ஆர்டர் போட்டெல்லாம் நீ எதையும் சாதிக்க முடியாது… நீ அவளைக் கொஞ்சம் பொறுமையா ஹேன்டில் பண்ணணும்” என்று அவந்திகா சொன்னதும் ஈஷ்வருக்கு உள்ளூர கோபம் மூண்டது.

நமக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு இடம் கொடுத்ததன் விளைவுதான் அவள் தன்னையே உளவறிந்தாள் என்று எண்ணியவன் தன்னிடம் அவளின் கர்வமும் திமிரும் ஒருபோதும் எடுபடாது என்றும் எண்ணிக்கொண்டான். 

மொத்தத்தில் ஈஷ்வரின் திட்டம் இதுவரை சரியாகவே வேலை செய்தது. முக்கியமாய் மதியை தன் ரிசர்ச் டீமுக்கான ஏற்பாடுகளைச் செய்ய சொல்லி அனுப்பிவிட்டு அதற்கும் ஒரு பொய்யான காரணத்தை அழகாக தயார் செய்துவிட்டான்.

ஆனால் சுந்தரை வேறொரு கவலை பீடித்திருந்தது. சூர்யா ஈஷ்வருக்காக பணி புரிவது சரி வருமா? அதற்கு முதலில் அவள் சம்மதம் சொல்வாளா? ஏனெனில்  ஈஷ்வரின் கர்வமும் சூர்யாவின் திமிரும் நேரெதிராய் சந்தித்துக் கொள்வது ஆபத்து என்று தோன்றிற்று. ஆதலால் அவர்கள் இருவரும் ஒத்து வேலை செய்வது சிரமம் என்றும் அதை விட முக்கியமான காரணம் சூர்யாவுக்கு எந்த காரணத்தினாலோ ஈஷ்வரைப் பிடிக்காது போயிருந்தது என்பதையும் அவர் நன்கறிவர்.

அதுமட்டுமின்றி சூர்யா யார் என்னவென்றுப் பார்க்காமல் எடுத்தெறிந்துப் பேசிவிடுவாள். இதனால் அவர்களுக்கும் மகாதேவன் குடும்பத்துக்கும் காலங்கள் தாண்டி பிணைக்கப்பட்டிருந்த நம்பகமான உறவை அவளின் திமிரால் ஒரே நொடியில் தகர்த்துவிடுவாளோ என்ற அச்சம் வேறு அவருக்கு மலைப் போல் வளர்ந்து நிற்க, சென்னையிலிருக்கும் தன் மகளிற்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்தார்.

சூர்யா தன் தந்தையின் எண்ணை பார்த்ததும் ஆச்சர்யமான முகப்பாவத்தோடு அழைப்பை ஏற்று, “என்ன மிஸ்டர். சுந்தர்… திடீர்னு அதிசயமா பொண்ணு ஞாபகமெல்லாம்” என்று கேலியாய் கேட்டாள்.

அவளின் ஆரம்ப வாக்கியத்தைக் கேட்டதுமே கோபம் தலைக்கேறிய போதும் தான் பொறுமையாய் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு, ” எனக்கு  உன் ஞாபகம் எல்லாம் இருக்கு… நீதான் யாரைப் பத்தியும் கவலை இல்லாம ஊரை சுத்தி வந்திட்டிருக்க” என்று உரைக்க,

இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு… நான் அம்மா வீட்டுல தங்குறதா ?” என்று கேட்டாள்.

நான் அதைப்பத்தி எல்லாம் பேச வரல… நான் சொல்றதை மட்டும் பொறுமையா கேளு” என்றார்.

என்னைக்குப்பா… நீங்க சொல்றதை நான் கேட்டிருக்கேன்” என்றவள் கேலித் தொனியில் கேட்க, 

இவளுக்கு எப்படி நிலைமையைப் புரிய வைப்பது என்று தெரியாமல், “தலையெழுத்து…  பூர்வ ஜென்மத்தில நான் செஞ்ச பாவம்… நீ வந்து எனக்கு மகளா வாச்சிருக்க” என்று சுந்தர் புலம்ப சூர்யா சத்தமாய் சிரித்தாள்.

அதென்னபா பூர்வ ஜென்மத்துல?  இந்த ஜென்மத்துல மட்டும் நீங்க என்னவோ  புண்ணியமா செஞ்சிட்டிருக்க மாதிரி” என்று சொல்ல அதற்கு மேல் சுந்தருக்கு இவளிடம் என்ன பேசுவதென்றே புரியாமல் மௌனமாகிவிட்டார்.

சூர்யா சிறுவயதில் தன் அம்மாவிடம் இருந்து சுந்தர் பிரித்து அழைத்து வந்ததும்பின்னர் தன்னை கவனித்துக் கொள்ளவேயில்லை என்ற கோபத்தையும்  நேரம் கிட்டும் போதெல்லாம் அவள் காட்டிப் பழித்தீர்த்துக் கொள்வது  வழக்கமான ஒன்றுதான். இம்முறையும் அவ்வாறே அவள் நடந்து கொள்ள சட்டென்று எதிர்புறத்தில் மௌனம் கலைந்து, “சூர்யா” என்றழைத்தாள் அவந்திகா.  

சூர்யாவைக் கையாளும் திறமை அவந்திகாவுக்கு மட்டுமே உரியது என்று எண்ணிய சுந்தர் அந்தப்பொறுப்பை அவரிடமே விடுத்தார். இதை எதிர்பாராத சூர்யாவின் குரலிலிருந்த கிண்டல் கேலி எல்லாம் மறைந்து “எஸ் மேடம்” என்றாள்.

நாளைக்கு ஈஷ்வர்  சென்னைக்கு வரப்போறான்… நீதான் எல்லா அரேஞ்மன்ட்ஸையும் கவனிச்சுக்கணும் … மோரோவர் மதி அவனோட நேட்டிவ் பிளேஸ் போயிருக்கான்… ஸோ நீ ஈஷ்வருக்குக் கூட இருந்து எல்லா வொர்க்லயும் அசிஸ்ட் பண்ணனும்” என்று  அவர் கம்பீரமாய் அதிகாரத் தொனியில் சொல்லி முடிக்க,

சூர்யாவிற்கு எண்ணிலடங்கா எரிச்சல் தோன்றியது. முதல் முறையாய் அவந்திகாவின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டி இருக்கிறது என்று அவள் தயங்கினாள்.

சூர்யாவின் அமைதியை வைத்து அவள் மனதிலிருப்பதை யூகித்தபடி,

என்ன சூர்யா பிராப்ளம்? தேவோட வேகத்துக்கும் புத்திசாலித்தனத்திற்கும் எப்படி நம்மால ஈடுகொடுக்க முடியும்னு யோசிக்கிறியா… உன்னால முடியாதுன்னா சொல்லிடு” என்று அவந்திகா சொன்னதும் இயல்பாகவே சூர்யாவிற்கு அவளின் கர்வம் தூண்டப்படமுடியாது என்று சொன்னால் தன்னைத் தானே குறைத்து கொண்டதாகிவிடும் என்று எண்ணியபடி,

இல்ல மேடம்… ஐ வில் டூ இட்…” என்று  சம்மதித்தாள்.

இவர்கள் இருவரையும் சந்திக்க வைப்பதன் மூலமாக சூர்யாவை ஈஷ்வருக்குப் பிடித்துப் போக வாய்ப்பிருக்கிறது என சிறு ஆசை எதிர்பார்ப்பாய் துளிர்விட்டிருந்தது அவிந்திகாவிற்கு !

அதேநேரம் அவந்திகாவிடம் சூர்யா சம்மதம் தெரிவித்து விட்டாளே ஒழிய அந்த ஈஷ்வரை நேரில் எதிர்கொள்ளவதை எண்ணினாலே வெறுப்பு தொற்றிக் கொண்டது. அவனைத் தன்னால் ஒரு நாள் கூட சகித்துக் கொள்வது சாத்தியமில்லை என்று எண்ணியவள் நாளை இந்த சந்திப்பை நடக்கவிடாமல் செய்துவிட முடியுமா என மூளையைக் கசக்கி யோசித்து யோசித்து அவள் இரவு உறக்கத்தைத் தொலைத்ததே மிச்சம்.

ஈஷ்வர் அன்று மாலை சென்னையில் உள்ள மகாபலிபுரம் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தடைவான் என்ற செய்தி கிடைத்தது. தான் அவனுக்கு முன்னாடியே அங்கே சென்றடைய வேண்டும். ஈஷ்வர் வந்துவிட்டால் பிறகு தான் வேலையில் மும்முரமாக இறங்கிவிடலாம் என்று எண்ணியவள் வேறொரு வேலையை முடித்துவிட அரங்கநாதன் மருத்துவமனைக்கு சென்றடைந்தாள்.

அரங்கநாதன் மருத்துவமனை. இந்த பெயர் அபிமன்யுவை நினைவுப்படுத்த சட்டென்று கரிசன் சோழாவிற்கும் சென்னையிலிருக்கும் மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது என்று அந்த நினைவைத் தவிர்த்தாள்.

பின்னர் நர்ஸிடம் அர்ஜுனை சந்திக்கும் நேரத்தைக் கேட்டறிந்தாள். பத்து மணி வாக்கில் எப்போதுமே கூட்டமாய் இருக்கும் மருத்துவமனை இப்போதும் கூட்டமாகவே இருந்தது. ஆனால்அந்த கிழமையில் அர்ஜுன் வெளி நோயாளிகளைப் பார்ப்பதில்லை என்பதால் காத்திருப்பின்றி சந்தித்துவிடலாம் என்று  நினைத்தாள்.

அர்ஜுனிடம் ரம்யாவின் காதலைப் புரிய வைத்துவிடவே அவள் எண்ணி அங்கே வந்தாள். அர்ஜுனைப் பார்க்க அவள் வெகு நேரம் காத்திருக்க, ரம்யாவின் கண்ணில் சிக்கிக் கொண்டால் தான் எண்ணியதை செய்ய முடியாமல் அவள் தவிர்த்துவிடுவாள் என்று தோன்றியது.

அர்ஜுனுக்காகக் காத்திருந்து காத்திருந்து கோபத்தில் நர்ஸிடம் சண்டை போட ஆரம்பித்தாள். பின்னர் சூர்யாவை அந்த நர்ஸ் அர்ஜுன் அறையிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு இன்னும் சில நிமடங்களில் வந்துவிடுவான் என உரைத்துவிட, அந்த நீண்ட காத்திருப்பு சூர்யாவுக்குள் அலுப்பை உண்டாக்கியது.

சில மணித்துளிகள் கழித்துக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு ஆர்வமாய் இருக்கையில் இருந்து எழுந்து நின்றவள் திரும்பி நோக்கிய போது அவளின் விழிகள் அபிமன்யுவைக் கண்டு திகைப்புற்றது. 

அவனைக் கண்டதும் அவளுக்குள் ஏற்பட்டது சந்தோஷமா புல்லரிப்பா என்ற உணர முடியாதபடிக்கு சந்தோஷம் உண்டானாலும் அவன் ஏற்படுத்திய அவமானம் மேலோட்டமாய் எல்லா உணர்வையும் கீழ்தள்ளிவிட்டு கோப உணர்வே ஆளுமை செய்தது.

அபிமன்யுவை கரிசன் சோழாவில் வேட்டி சட்டையிலேயே பார்த்து இன்று முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் பேண்ட் ஷர்ட் அணிந்து கொண்டு நிற்க ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்ருந்தவளை அவனுமே விழிகள் அகலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கே நின்று கொண்டிருந்தது சந்தேகமின்றி அபிமன்யுதான். கரிசன் சோழாவில் இருந்த அபிமன்யு இங்கே எப்படி?

கரிசன் சோழாவில் அபிமன்யுவிற்கு குரங்கைப் பார்த்தாலும் அவள் நினைவு வரகுளத்தில் குளிக்கச் சென்றாலும் அவள் எண்ணம் எழஏன் கடவுளை வணங்கும் போதும் அவளே அவனைத் தொந்தரவு செய்தாள். கண்களை மூடி தியானம் செய்தாலும் அவள் முகமே முன் தோன்ற அந்த எண்ணத்திலிருந்து மீளவே அவன் சென்னை வந்து சேர்ந்தான். 

அங்கே வந்தடைந்ததும் சகோதரனைப் பார்க்கும் ஆர்வத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் அர்ஜுன் அறைக்குள் நுழைய அவன் மனதை முழுதாய் ஆட்கொண்ட முகம் இப்போது அவன் எதிரே நிற்க வேறென்ன எண்ணிக் கொள்வான்.

 அவள் தன் கற்பனையின் பிம்பம் என்றே தோன்றியது. அதற்கு இன்னொரு காரணம் அவள் முதல்முறையாய் அவன் பார்த்த அதே மஞ்சள் நிற சேலையில் பளிங்கு சிலையென நின்றுகொண்டிருக்கஅவளின் ஒயாமல் பேசும் இதழ்கள் இப்போது ஊமையாகி அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது அவன் எண்ணத்திற்கு சாதகமாய் அமைந்தது.

அவன் கற்பனை என்று எண்ணிய அழகிய பிம்பத்தை நோக்கியபடி அபிமன்யு முன்னேறி வரசூர்யா இப்போது திகைப்பிலிருந்து மீண்டாள். அவனின் பார்வையில் கோபம் இல்லையே என்று குழம்பியவள் அது ஒருவிதமான ஏக்கம் என்பதையும் உணர்ந்தாள்.

என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று சூர்யா எண்ணி மௌனமாய் நின்றிருக்க அபிமன்யு காதலோடு அவளை நின்று பொறுமையாய் ரசிக்கத் தொடங்கினான்.

என்னதான் இவன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று  யூகிக்க முடியாமல் அவள் குழப்பமுற, அவனோ காதல் உணர்வோடு அவளின் அருகாமையில் நெருங்கி வர அவளுக்குப் படபடப்பானது.

அவன் அந்த சமயம் அருகிலிருந்தவளை பிம்பம் என்றெண்ணித் தன் கரத்தால் அவள் கன்னத்தைத் தீண்ட எத்தனிக்கவும்,

இதை எதிர்பாரதவள் பட்டென பின்னோக்கி நகர்ந்தபடி “மிஸ்டர். அபி நான் ஒண்ணும் உங்க இலூஷன் இல்ல… ஐம் ரியல்” என்று சொல்லி அவனை மீட்டெடுத்தாள்.

அபிமன்யுவும் தன் தவற்றை எண்ணி ஒரு அடி பின் வைத்து அதிர்ச்சியுற அந்த நொடி அவள் நிஜமாய் நிற்கிறாள் என எண்ணி ஏமாற்றம் கொள்வதா அல்லது இன்பம் கொள்வதா என புரியாமல் திகைத்தான். மேலும் தான் இப்படி அவளின் நினைப்பில் ஏங்குவதைக் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்று அவன் தன்னைத் தானே கடிந்து கொள்ள, அந்த முகப்பாவனை அவன் தன்னை நினைத்து ஏங்கித்தவிக்கிறான் என்பதை அவளுக்கும் உணர்த்தியது. 

அந்த எண்ணம் அவளை உள்ளூர ரசித்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “உங்க மைன்ட் பவருக்கு… நிஜம் எது… கற்பனை எதுன்னு… கூடவா தெரியல மிஸ்டர். அபி” என்று அவள் எள்ளிநகையாட,

அவனுக்குக் கோபம் கனலாய் ஏறியது. “என்ன? இங்கயும் உன் ஸ்பை வேலையைப் பார்க்க வந்தியா ?” என்று பதில் கேள்வி கேட்டு முறைத்துக் கொண்டு நின்றான். 

 ஸ்பை வேலை பார்க்க வந்தேன்னா… எனக்கென்ன வேற வேலையே இல்லன்னு நினைச்சீங்களா ?” என்று அவள் கடுப்பாய் கேட்க,

“அப்புறம் எதுக்கு… நீ இங்க வந்த?” என்றவன் அவளை ஏளனமாய் பார்வை பார்த்தான்.

அதை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும்?” என்று அவள் பதலடி கொடுக்க அவன் சினத்தோடு,

என் கண்முன்னாடி வராதன்னு உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல… திரும்பியும் என் முன்னாடி வந்து நின்னு எதுக்கு என்னை இரிடேட் பண்ணிட்டிருக்க” என்றான்.

இதப்பாருங்க மிஸ்டர்… உங்க கண்முன்னாடி வரணுங்கிறதெல்லாம் என் மோட்டிவ் இல்ல… நான் வேறொரு வேலையா வந்தேன்… எதிர்பாராம நாம மீட் பண்ண வேண்டியதா போச்சு… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றாள்.

உன் மோட்டிவ் என்ன வேணா இருந்துட்டுப் போகட்டும்… ஐ டோன்ட் கேர்… முதல்ல இங்கிருந்து வெளிய போ” 

அவன் சொன்னதைப் பொருட்படுத்தாதவளாய், “நான் ஏன் இங்கிருந்து வெளிய போகணும்… அத சொல்றதுக்கு நீங்க யாரு மிஸ்டர்… அன் நான் ஒண்ணும் உங்களைப் பார்க்க வரல… டாக்டர் அர்ஜுனைப் பார்க்க வந்திருக்கேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக!

இப்போது அபிமன்யுவிற்கு சூர்யா இன்னும் அர்ஜுனைப் பார்த்ததில்லையா என்ற கேள்வி எழ அவள் எதற்காக இங்கே வந்தாள் என சிந்தனையோடு அவன் சிலநொடிகள் மௌனமாய் நின்றான்.

அந்த அறையில் சூழ்ந்த நிசப்தத்தை கலைத்தபடி, “ஹெலோ மிஸ்டர் அபி” என்று அழைத்து அவன் சிந்தனையை தடைச் செய்ய அவன் அவளை நோக்கினான்.

அவளோ திமிரான பார்வையோடு, “அடிக்கடி இமேஜினேஷனுக்குப் போயிடாதீங்க… கொஞ்சம் ரியாலிட்டிக்கும் வாங்க” என்றாள்.

அபிமன்யுவிற்கு அவள் மீது அதீத எரிச்சல் மூள, “சூர்யா வேண்டாம்… நீ உன் லிமிட்டைத் தாண்டி பேசிட்டிருக்க” என்றான்.

நீங்க மட்டும்… அன்னைக்கு உங்க லிமிட்டைத் தாண்டி என்கிட்ட பேசல”

அப்படி என்ன பேசுனேன்” என்று அவன் அவளை அலட்சியமாய் கேட்க, 

என்ன பேசுனீங்களா? என்னை பார்த்து போயும் போயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து இம்பிரஸ் ஆனேனேன்னு சொல்லி என்னை இன்ஸல்ட் பண்ணல……. போதாக் குறைக்கு உங்க கற்பனையில நம்ம இரண்டு பேருக்கும் கணவன் மனைவி ரிலேஷன்ஷிப் வேற… அதுவும் சரியா கூட அறிமுகம் ஆகாத என்கிட்ட எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடிஞ்சுது அபி… இட்ஸ் ஸோ இடியாட்டிக்!” என்று தன் மனதில் உள்ள கோபத்தை சரியான சமயம் பார்த்துக் காண்பித்துவிட்டு இதற்கு அவனால் என்ன பதில் பேச முடியும் என்று அலட்சியமாய் பார்த்தாள்.

“இடியாட்டிக்… ஆமாம் நான் இடியாட்டிக்தான்… பொய் சொல்லி ஏமாத்தி புத்திசாலின்னு பேர் வாங்குறதை விட… மனசில பட்டதை நேர்மையா பேசி… நான் இடியாட்டிக்காவே இருந்துட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு அவள் விழிகளுக்குள் நுழைந்து இதயத்தை துளைப்பதைப் போல் அவன் பார்க்க, அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இவனைத் தன்னால் சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் தான்தான் தோற்றுப் போகிறோம் என்ற எண்ணம் எழ இவனை எதற்கு சந்தித்துத் தொலைத்தோம் என்ற எண்ணம் உதித்தது. அப்போதுதான், இவன் எப்படி இங்கே?‘ என்று அவளின் மூளைத் தாமதமாய் கேள்வி எழுப்பியது.

மீண்டும் தன் பார்வையை அவனிடம் திருப்பியவள், “ஆமாம்… நீங்களும் டாக்டர். அர்ஜுனைதான் பார்க்க வந்தீங்களா? ” என்று கேட்க

அவன் தன் விழிகளை சுருக்கி, “நீ தெரிஞ்சுதான் கேட்கிறியா இல்ல தெரியாமல் கேட்கிறியா… சத்தியமா எனக்குப் புரியல” என்று அவன் உரைக்க, அந்த பதிலின் அர்த்தமென்ன என ஆழமாய் சிந்திக்க ஆரம்பித்தாள். 

அபிமன்யுவை பார்த்ததிலிருந்து சண்டை போடுவதிலேயெ மும்முரமாய் இருந்துவிட்டதால் மூளை யோசிக்க மறந்தது. இப்போது மீண்டும் அரங்கநாதன் மருத்துவமனை என்ற பெயர் நினைவுக்குவந்தது.

அந்த சமயம் பார்த்து கதவைத் திறந்து அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.

தன் அறைக்குள் நின்றிருந்த அபிமன்யுவைப் பார்த்தவுடன் அர்ஜுன் வியப்போடு கூடிய ஆனந்தத்தில், “டே… அபி… எப்போ வந்த… சொல்லவேயில்ல” என்று அவனை நெருங்க சூர்யா தன் கண்கள் காண்பது உண்மைதானா என அதிர்ச்சியானாள்.

இருவரையும் அவள் மாறி மாறிப் பார்க்க அவர்களின் ஒரே மாதிரியான தோற்றம்… அபிமன்யு ஆரம்பத்திலிருந்து தன்னை சந்தேகமாய் கேள்வி எழுப்பியதன் காரணத்தை அவளுக்கு விளங்க வைத்தது.

அபிமன்யு அர்ஜுனின் கேள்விக்குப் பதிலுரை தராமல் சூர்யாவின் குழப்பமானப் பார்வையை கவனித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அர்ஜுன் சூர்யாவைப் பார்த்து, “யார் அபி இவங்க?” என்று வினவினான்.

சூர்யா அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்றிருக்க அபிமன்யு அந்த சமயத்தை சாதகமாக்கியவனாய் சூர்யாவை நோக்கி கேலிபுன்னகயோடு, “நீ மீட் பண்ணனும் சொன்ன டாக்டர் அர்ஜுன்” என்று உரைத்தான்.

அந்த நிலையில் அவள் என்ன பேசுவதென்றுப் புரியாமல் விக்கித்து நின்றாள்.

அவள் தன் தவறை உணர்ந்தவளாய் மனதிற்குள், அபியும் அர்ஜுனும் பிரதர்ஸா ?இப்போ அபி என்னப்பத்தி தப்பு தப்பா அர்ஜுன்கிட்ட சொல்லிட்டா… அப்புறம் ரம்யாவோட லவ்…‘ என்று நினைத்து தன்னைத் தானே நொந்து கொள்ள அபியின் பார்வை அவளின் தவிப்பை கவனித்தது.

அர்ஜுன் மீண்டும் அபியை நோக்கி, “யாருன்னு சொல்லவேயில்ல… என்ன மேட்டர்?” என்று கேட்க,

 “அவங்களே சொல்லுவாங்க… ஏதாவது புது நேம் யோசிச்சு” என்று சொல்ல சூர்யா அவன் தன்னை குத்திக் காட்டி பேசுகிறான் என்பதை உணர்ந்தாள். இப்போது தன் சூழ்நிலை அவனுக்கு சாதகமாய் போய்விட்டதை எண்ணி பேச வார்த்தையின்றி எப்படித் தன் தவறை சரி செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

அர்ஜுன் அபிமன்யு சொல்ல வருவதின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியாமல், “சரி முதல்ல உட்காருங்க… பேசுவோம்” என்று இருவரை நோக்கியும் உரைத்துவிட்டு தன் இருக்கையை நோக்கி செல்ல

அபிமன்யு மேலும் சூர்யாவிடம்,”என்ன நேம் சொல்லலாம்னு யோசிக்கிறியா… நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று அவளிடம் மெலிதாக உரைத்துப் பரிகசித்தான்.

“ப்ளீஸ் அபி அர்ஜுன்கிட்ட என்னை பத்தி எதுவும் சொல்லாதீங்க?” என்று கெஞ்சலான முகப்பானையோடு கேட்க, அபிமன்யு அவளை வியப்பாய் நோக்கினான்.

அர்ஜுன் தன் இருக்கையில் அமர்ந்துவிட்டு அவர்கள் இன்னும் நின்று கொண்டிருப்பதை பார்த்து அமரச் சொன்னான்.

அபிமன்யுவைப் பார்த்து சூர்யா பார்வையாலேயே கெஞ்சல் தொனியில் சமிக்ஞை செய்தபடியே இருக்கையில் அமர, அதை அர்ஜுனும் கவனித்தான். அபிமன்யுவோ இத்தனை நேரம் திமிரின் உச்சாணிக் கொம்பில் நின்றிருந்தவளா இப்போது தன் கர்வத்தை விட்டு தன்னிடம் இறங்கி வந்து கெஞ்சிகிறாள் என யோசனையோடு அமர்ந்தான்.

அபிமன்யு அவளின் தவிப்பையே கண்கொட்டாமல் பார்க்க அர்ஜுன், “அபி… என்னையும் இங்க கொஞ்சம் பார்க்கலாம்” என்று கிண்டல் செய்ய, இப்போது தன் முன்னிலையில் அர்ஜுன் அமர்ந்திருப்பதை அபி உணர்ந்து பார்வையைத் திருப்ப,

ம்ம்ம்… இப்போ சொல்லு அபி… ” என்ற அர்ஜுன் மீண்டும் கேட்டான்.

சூர்யா அவன் பதிலை எதிர்பார்த்தபடி சொல்ல வேண்டாம் என கண்ணாலயே சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்க அவனும் என்ன காரணத்தினாலோ அவள் சொல்வதைக் கேட்க எண்ணி,”இல்ல அர்ஜுன் எனக்கு இவங்களை யாருன்னு தெரியாது… அவங்க உன்னைதான் பார்க்க வந்திருக்காங்க” என்று உரைத்தான்.

“தெரியாதா ?” என்று அர்ஜுன் அதிர்ச்சியானான். அவர்கள் இருவரும் கண்ணாலயே பேசிக் கொள்வதைதான் அவன் கவனித்தானே. பிறகு ஏன் அபிமன்யு அவளைத் தெரியாதென்கிறான் என யோசித்தபடி அவளை நோக்கினான்.

ஜென்மாந்திர உறவு

அபிமன்யு தன்னிலையைப் புரிந்து கொண்டவரைக்கும் நலம் என்று சூர்யா எண்ணி இப்போதைக்கு தான் பேச நினைத்ததை பேச முடியாதென இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவள், “சாரி டாக்டர்… நான் உங்களை மீட் பண்ணதான் வந்தேன்… பட் டைமாச்சு… எனக்கு ஒரு வொர்க் இருக்கு…நான் நெக்ஸ்ட் டைம் உங்களை வந்து மீட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாய் வெளியேறினாள்.

அர்ஜுனுக்கு நடப்பது என்னவென்று புரிந்து கொள்ள இயலாத நிலையில் அவளின் செயலைப் பற்றி யோசித்திருக்க அபி அவசரமாய் எழுந்து, “அர்ஜுன் நான் அப்புறம் வந்து உன்கிட்ட பேசிறேன்” என்று விறுவிறுவென வெளியேறியவனை, “டே அபி!” என்று ஆர்ஜுன் அழைக்க அவன் அதை பொருட்படுத்தவில்லை.

அபிமன்யு சூர்யாவைப் பிடிக்க வேகமாய் நடக்க அவள் குழப்பத்தோடு முன்னேறி சென்று கொண்டிருந்தாள். அவன் சூர்யா என்றழைக்க அவள் திரும்பிப் பார்க்காமல் செல்ல, அவளை பிடிக்க எண்ணி நெருங்கி வந்த அதே  சமயத்தில் அவன் அழைப்பை தாமதமாய் உணர்ந்து அவளும் திரும்பினாள். அவனின் நெற்றியில் இவள் தலை மோதிக் கொள்ள, வலியால் காயம்பட்ட இடத்தை இருவரும் தேய்த்துக் கொண்டனர்.

சூர்யா வலி தாங்காமல், “என்ன அபி நீங்க” என்று கேட்க,

உன்னை யாரு சடார்னு திரும்ப சொன்னது” என்று அவன் முறைத்தான்.

நீங்கதானே கூப்பிட்டீங்க?”

கூப்பிட்ட உடனே திரும்பல… இவ்வளவு லேட்டா ரியாக்ட் பன்ற” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க அவள் முகம் வலியால் சுருங்கியது.

அவள் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளுக்கு ஏற்பட்ட சிறு காயம் கூட அவனுக்குள் வலியை உணர வைக்க, “ரொம்ப வலிக்குதா… ” என்று அவள் வலியை உணர்ந்தவனாய் பரிவோடு அவன் கேட்க, “இட்ஸ் ஒகே” என்றாள் அவள்.

சிறிது நேரத்திற்கு முன்பு சண்டையிட்டுக் கொண்டவர்களா அவர்கள் என்றளவுக்கு ஒருவரை ஒருவர் விழியால் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்ள சூர்யா சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, “எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?” என்று சொல்லியபடி மருத்துவமனையை விட்டு வெளியேறியவளை, “சூர்யா நில்லு… நான் பேசணும்” என்று அழைத்தான்.

எனக்கு வேலை இருக்கு… நான் கிளம்பணும்” என்று கவனிக்காமல் சென்றவளின் கரத்தைப் பற்றி நிறுத்தினான்.

அவள் அதிர்ச்சியோடு அவன் முகத்தை நோக்க, “நீ எதுக்குஅர்ஜுனைப் பார்க்க வந்த… ஏன் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியான… இப்போ காரணமில்லாம தப்பிச்சு ஓடுற… அப்படி என்ன உன் பாஸ் உனக்கு ஆர்டர் கொடுத்தார்?” என்று அவன் கேள்வியை வரிசையாய் அடுக்கிவிட்டு அவள் கரத்தை விடுத்தான்.

“புரிஞ்சிக்கோங்க அபி… நான் இங்க என்னோட பெர்ஸ்னல் வொர்க்காக வந்தேன்” என்றவள் சலிப்போடு சொல்ல,

பெர்ஸனல் வொர்க்கா… அது என்ன?” என்று கேட்டு அவளை ஆராய்ந்து பார்த்தான். 

“நான் அப்புறமா சொல்றேன்… இப்ப என்னை போக விடுங்களேன்” என்றவளுக்கு எங்கே தான் தன் சகோதரியின் பார்வையில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம்.

அவள் தேடலைக் கவனித்தபடி, “இந்த தப்பிக்கிற வேலை எல்லாம் வேண்டாம்… இப்பவே சொல்லு” என்று பிடிவாதமாய் நின்றான்.

இப்ப முடியாது… லேட்டர்… இது என் கார்ட்… அப்புறம் கால் பண்ணுங்க” என்று சொல்லி அவள் கார்டை அவனிடம் நீட்ட அவன் அதை பார்க்காமலே வீசியெறிந்து விட்டு, “இது உண்மைன்னு எப்படி நம்பறது… அன்னைக்கு காண்பிச்ச போலி ஐடி கார்ட் மாதிரி இதுவும் போலியா இருந்தா?” என்றான்.

சூர்யா கீழே விழுந்த தன் கார்டைக் கையில் எடுத்து, “இது என்னோட ஒர்ஜினல் கார்ட்” என்றாள்.

நான் உன்னை நம்ப தயாராயில்லை… நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு எங்கே வேணா போ” என்றான் தீர்க்கமாக!

அவள் தவிப்போடு,”சரி சொல்றேன்… ஆனா இங்க வேண்டாம் என் சிஸ்டர் என்னை பார்த்திருவா… நாம வேறு எங்கயாவது போய் பேசுவோம்” என்றாள்.

யாரு உன் சிஸ்டர்?” என்று அவன் கேள்வி எழுப்ப,

எல்லாத்தையும் சொல்லித் தொலைக்கிறேன்… ஆனா இங்கிருந்து முதல்ல கிளம்புவோம்” என்று அவனைப் பார்க்காமல் மருத்துவமனைக்குள் நோட்டமிட,

அபி புரிந்து கொள்ள முடியாமல், “சரி இங்கயே வெயிட் பண்ணு” என்று செல்ல அவன் எங்கே போகிறான் என திரும்பிப் பார்த்தாள்.

அவன் தன் பைக்கை ஓட்டியபடி வந்து, “சரி போலாம்” என்று அழைத்தான்.

 “நான் உங்க கூட பைக்ல வர்றதா… நோ வே” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

சரி வர வேண்டாம்… உள்ளே போய் அர்ஜுனை மீட் பண்ணி நீ செஞ்ச சீட்டிங் வேலை எல்லாம் சொல்றேன்… அப்புறம் உன் சிஸ்டர்… யாரு?” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் பைக்கில் ஏறி அமர்ந்தபடி, “போய் தொலைங்க” என்றாள்.

அபிமன்யு புன்னகையோடு அவளை அழைத்து வெளியேறிவிட அர்ஜுன் தன் அறையின் ஜன்னல் வழியே நடப்பவற்றைப் பார்த்து புரியாமல் திகைத்தான்.

தெரியாதுன்னு சொல்லிட்டு பைக்ல கூட்டிட்டு போயிட்டிருக்கான்‘ என்று நினைத்துகொண்டிருக்க அப்போது ரம்யா கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கேட்டாள்.

கம்மின்” என்று சொல்ல ரம்யா உள்ளே நுழைந்து,”நீங்க கேட்ட… ரிப்போர்ட்ஸ்” என்று சொல்லி ஒரு பைஃலை மேஜை மீது வைத்துவிட்டு வெளியேறப் போனவளை, “ரம்யா” என்று அழைத்தான்.

இயந்திரத்தனமாய் அவன் முகத்தைக் கூட கவனிக்காமல், “சொல்லுங்க டாக்டர்” என்றாள்.

சில நாட்களாகவே அவள் அவ்விதம்தான் நடந்து கொள்கிறாள் என அர்ஜுன் கவனிக்காமல் இல்லை. ஆனால் அதன் காரணியை மனதில் சரியாக யூகிக்க முடியாமல் குழப்பமாய் இருந்தான். ஆனால் இப்போது அவன் அதை குறித்துப் பேசாமல், “என் தம்பி அபிமன்யு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தான்… நீ பார்த்தியா ரம்யா?” என்று அவன் கேட்க

அந்த நொடி அவனை ஆவலோடு நோக்கி, “நான் பார்க்கலயே… எங்கே?” என்று வினவினாள்.

இல்ல நான் ரூம்குள்ள வரும் போது இருந்தான்… கூட ஒரு பொண்ணு வேற இருந்தா… யார் அது அபின்னு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டான்… அந்த பொண்ணும் என்னைதான் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு எதுவும் பேசாம வேலை இருக்குன்னு கிளம்பிட்டா… இப்ப பார்த்தா என் தம்பியும் அந்த பொண்ணும் பைக்கில ஒண்ணா போறாங்க… என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியல… ஐம் கன்புஃயூஸ்ட்” என்றுரைக்க ரம்யா யோசனையோடு, “உங்க தம்பி லவ் பண்ற பொண்ணொ என்னவோ… இன்ட்ரோ கொடுக்க கூட்டிட்டு வந்திருப்பாரு போல” என்றாள்.

நோ நோ… அபி அப்படி எல்லாம் சான்ஸே இல்ல… அதுவும் என்கிட்ட சொல்லாம” என்று அர்ஜுன் உரைக்க,

ரம்யாவிற்கு இப்போது கோபம் எழுந்தது.  “ஏன் சான்ஸ் இல்ல… உங்களை மாதிரியே உங்க தம்பியும் இருக்கணுமா என்ன?” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக காத்திராமல் வெளியேறினாள்.

இப்போது அர்ஜுனிற்கு அபியின் குழப்பம் மறைந்து ரம்யாவா தன்னை இப்படி எடுத்தெறிந்து பேசுகிறாள் என்று உள்ளூர வலிக்க செய்தது. அவள் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்க தானும் அவளை புரிந்து கொள்ளாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறோமோ என்று குற்றவுணர்வு கொண்டான்.

*****

ரொம்பவும் வேகமும் இல்லாமல் நிதனாமகவும் இல்லாமல் சீராக சென்ற அபிமன்யுவின் பைக் ஒரு சிவாலயத்தின் வாசலில் நிற்க சூர்யா இறங்கிவிட்டு, “பேசலாம்னு சொல்லிட்டு… கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று கேட்டாள்.

ஏன் கோவிலில் பேச கூடாதா… நான் எப்பவும் இங்கதான் வருவேன்” என்று சொல்லிவிட்டு அபிமன்யு காலணியை கழட்டிவிட்டு உள்ளே நுழைந்துவிட சூர்யா பின்னோடு போனபடி, “அபி ஸ்டாப்… எனக்கு கோவிலுக்கு எல்லாம் போற்தில இன்டிரஸ்ட் இல்ல” என்று உரைத்தாள்.

ஏன்?” என்று நடந்து சென்றபடியே கேட்டான்.

ஏன்னு கேட்டா… எனக்கு பிடிக்காது” என்றவளை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்து, “எனக்கு இங்க வர்றதுதான் பிடிக்கும்” என்றான்.

அவள் வேறுவழியில்லாமல் முன்னேறி உள்ளே சென்றவனிடம், “நீங்க ஏன் இவ்வளவு பக்தி மானா இருக்கீங்க… எப்ப பார் சாமி தெய்வம்னு… சாமியாராக போறீங்களா!” என்று கேட்டாள்.

அவன் அவள் மீது தன் பார்வையை வீசி “சாமி கும்பிட்டா சாமியார் ஆக போறாங்கன்னு அர்த்தமா… கோவிலுக்கு வந்தா மனசுக்கு தெளிவு அமைதி அப்புறம் ஒருவித பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு கர்ப்பகிரகத்தில் நுழைய சூர்யா அவனை பின்தொடராமல் “அபி எனக்கு டைம் ஆகுது… ஐ ஹேவ் டூ கோ” என்றாள்.

அவன் அவளை திரும்பி கூட நோக்காமல், “வெயிட் பண்ணு… சாமி கும்பிடிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவள் அங்கே இருந்து தூணில் சாய்ந்து நின்றபடி,

 மை பேட் டைம்… இதுதான் சேன்ஸ்னு நல்லா பழித் தீர்த்துக்கிறான்… அந்த ஈஷ்வர் வேற வந்து தொலைச்சிட்டா… அது வேற பிரச்சனை‘ என்று புலம்பிக் கொண்டிருந்தவள் அங்கே இருந்த கடவுள் சிலையை பார்த்து,

 நான் கோவிலுக்கு வந்துட்டேங்கிறதுக்காகஉன்னை கும்பிடுவேன்னு மட்டும் எதிர்பார்க்காதே… நெவர்… நான் உன்கிட்ட எதுவும் கேட்கமாட்டேன்… நீயும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்‘ என மனதளவில் கடவுளை காரணமில்லாமல் நிந்தித்து கொண்டிருந்தாள். 

தான் ஏன் கடவுளை வெறுக்கிறோம் என அவளுக்கு காரணம் தெரியாமல் போனாலும் அவளின் வாழ்க்கையை இப்படி குழப்பமாய் வடிவமைத்த அந்த இறைவனுக்கு தெரிந்திராமல் இராது. அவளுக்கு சரியானதையே அவர் செய்த போதும் அவளுக்கான சிக்கலை அவளே ஏற்படுத்திக் கொள்கிறாள்.

சூர்யாவின் அருகில் ஒரு சிறுமி வந்து நின்று அவளிடம், “ஆன்ட்டி… எங்கம்மா உங்களை கூப்பிடுறாங்க” என்றாள்.

யாரு உங்கம்மா… எதுக்கு என்னை கூப்பிடிறாங்க?” என்று கேட்டபடி அந்த சிறுமி வழிகாட்டுதலில் சென்ற இடத்தில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றபடி ,

“இந்தாம்மா… ஒருத்தர் குறைஞ்சிட்டாங்களேன்னு பார்த்தேன்” என்று ஒரு துணி பூ மஞ்சள் குங்குமம் அத்தோடு மஞ்சளால் பிணைக்கப்பட்ட கயிறை கொடுக்க அவள் குழப்பமாய் யோசிக்க அந்த பெண், “ஏன்மா யோசிக்கிற… வாங்கிக்கம்மா” என்று சொல்லி அதனை நீட்ட அவள் என்னவென்று புரியாமல் கையில் வாங்கி கொண்டாள்.

அந்த சமயத்தில் அபிமன்யு பின்னோடு வந்து நின்று, “உன்னை எங்கெல்லாம் தேடுறது சூர்யா” என்று கேட்டான்.

“இல்ல… நான்” என்று பதில் சொல்லாமல் நின்றவளின் கைகளில் உள்ளதை பார்த்தவன், “இதெல்லாம் சுமங்கலி பூஜை பண்ணி கல்யாணமான பெண்களுக்குதானே கொடுப்பாங்க… நீ ஏன் வாங்கின?” என்று கேட்டான்.

ஓ அப்படியா… ஐ டோன்ட் நோ” என்று திரும்பி அதை கொடுத்த பெண்மணியை தேடினாள்.

அந்த லேடியை காணோமே” என்று விழிகளால் அந்த இடத்தை அலசியவளை, சரி விடு… அவங்களும் தெரியாம கொடுத்திட்டாங்க நீயும் வாங்கிட்ட… இப்ப ஒண்ணும் பண்ண முடியாது” என்றான்.

என்ன விளையாடிறீங்களா… என்னை பார்த்தா கல்யாண ஆன மாதிரி தெரியுதா?!” என்று கொஞ்சம் கோபமாய் கேட்டாள்.

ம்ம்ம்… அதானே” என்று சொல்லி சிரித்தவன் அப்போதுதான் அவளை முகத்தை உற்று கவனித்தான். சூர்யா புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க,

 “ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு” என்று சொல்லியபடி மருத்துவமனையில் அவள் தன் நெற்றியில் இடித்து கொண்டதால் தன் நெற்றி திலகம் அவள் வகுட்டில் ஒட்டிக் கொண்டிருந்ததை கவனித்தான்.

அபி செய்கையாலேயே அவள் நெற்றியில் ஒட்டியிருந்த குங்குமத்தை சுட்டி காட்ட அவள் தன் பர்ஸிலிருந்த கண்ணாடியை பார்த்துவிட்டு அபிமன்யுவை முறைக்க அவனோ, “இதுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை… இட்ஸ் ஜஸ்ட் ஹேன் ஆக்ஸிடென்ட்” என்று உரைத்தான்.

அந்த குங்குமத்தை அழுத்தமாய் அவள் துடைத்து எடுத்தாள். சில காரியங்களின் வீரியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கே சூர்யா அப்படி ஒரு தவறை இழைத்தாள் என்றே சொல்ல வேண்டும்.

“சரி… நான் கேட்டதற்கான பதிலை மேடம் இப்பையாச்சும் சொல்றிங்களா?” அபி கேட்க,

சூர்யா எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தபடி நிற்க அபியே மீண்டும், “உன் பாஸ் ஈஷ்வர்தானே அர்ஜுனை பார்க்க உன்னை அனுப்பினது” என்று கேட்டான்.

“நீங்க நினைக்கிற மாதிரி ஈஷ்வர் என் பாஸ் இல்ல… முதல்ல அதை புரிஞ்சிக்கோங்க” என்றாள்.

அபிமன்யு வியப்போடு, “அப்படின்னா?” என்று குழம்ப,

சூர்யா அழுத்தமாய், “அப்படின்னா ஈஷ்வருக்காக நான் வேலை செய்யல… நான் வேலை செய்றது அவந்திகா மேடம் கிட்டதான்… அவங்க சொல்லிதான் உங்களை தேடி வந்தேன்” என்று சொல்ல

யார் அவந்திகா மேடம்?” என்றான்.

அவங்க ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட எம்.டி… ஈஷ்வரோட அம்மா” என்றாள்.

அபிமன்யு முறைத்தபடி, “என்னை பார்த்தா இளிச்சிவாய்னு நெத்தில எழுதி ஒட்டிருக்கா… நீ சொன்ன மாதிரி அவந்திகா மேடம் கிட்ட வேலை பார்க்கிறன்னா… அப்போ ஈஷ்வரும் உன் பாஸ்தானே” என்று கேட்டான்

முதல்ல நான் சொல்றதை முழுசா கேளுங்க” என்று சொல்லி சூர்யா அவனை தேடிவந்த காரணத்தை முழுவதுமாய் விவரித்தாள்.

அபி யோசித்தபடி நின்றவன் பின் சூர்யாவை நோக்கி, “நீ சொல்றதை பார்த்தா… கொங்ககிரில நடந்த விஷயத்துக்கும்” என்று இழுக்க,

கொங்ககிரில அப்படி என்னதான் நடந்துச்சு… உங்களுக்கு எப்படி ஈஷ்வரை தெரியும்” என்று கேட்க அவன் மௌனம் காத்தான்.

சூர்யா அவன் பதிலை எதிர்நோக்க அவன் விடையளிக்காமல் அவளை நோக்கி, “சரி நீ அர்ஜுனை ஏன் பார்க்க வந்த” கேட்டான்.

அத… நான் என் சிஸ்டர் ரம்யாவுக்காகதான் வந்தேன்… அவ உங்க பிரதர் அர்ஜுனை லவ் பன்றா… அதுவும் ஒரு வருஷத்திற்கு மேலா… ஆனா அர்ஜுன் சாரும் என் சிஸ்டரை புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல… ரம்யாவும் தான் மனசில இருக்கிறதை சொல்லி தொலையற மாதிரி தெரியல… அதான் நானே அர்ஜுன் சார்கிட்ட சொல்லலான்னு… கடைசியில நான் நினைச்சது ஒண்ணும் நடக்கல” என்று  வருத்தமுற்றாள்.

அவள் சொன்னதை புன்னகை ததும்ப கேட்டு கொண்டிருந்தவன்,”ஓ! இதான் மேட்டரா… ம்ம்ம்… எனக்கு டாக்டர் ரம்யாவை நல்லா தெரியுமே… ரொம்ப அமைதியானவங்க… அதுவும் இல்லாம அர்ஜுனே அவங்களை பத்தி நிறைய சொல்லிருக்கான் ” என்றான்.

அப்போது சூர்யாவின் கைப்பேசி ஒலிக்க அவள் எண்ணை கூட சரியாக பாராமல் அதனை அணைத்து ஸைலன்டில் போட்டாள்.

மீண்டும் சூர்யா அபியை நோக்கி, “நாளைக்கு எல்லாம் எனக்கு நிறைய வொர்க் இருக்கும்… நான் திரும்பியும் அர்ஜுன் சாரை மீட் பண்ணி எப்படி இதை பத்தி பேசுறது” என்று அவள் இயலாமையோடு உரைக்க,

அந்த விஷயத்தை என்கிட்ட விட்டிரு… நான் அர்ஜுன்கிட்ட பேசுறேன்” என்றான்.

சூர்யா முகம் மலர, “நிஜமாவா?” என்று கேட்க அவன் தலையசைத்து ஆமோதித்தான். அவள் உணர்வுபூர்வமாய் “தேங்க்யூ” என்றாள்.

சூர்யா ஒருவழியாய் பிரச்சனையெல்லாம் முடிந்துவிட்ட நிம்மதி உண்டாக மறுபுறம் அபிமன்யுவின் புரிதல் நெகழ்ச்சியாய் இருந்தது.

சட்டென்று ஈஷ்வரை சந்திக்க வேண்டிய நினைவு வர, “அபி ஐ ஹேவ் டூ கோ” என்று பதட்டமானாள்.

நான் டிராப் பண்ணட்டுமா?”

இல்ல பரவாயில்ல… கொஞ்சம் லாங்க் டிஸ்டன்ஸ்… நானே போயிக்கிறேன்… நீங்க இந்த திங்ஸை எடுத்துட்டு போயிடுங்க” என்று அந்த பெண் கொடுத்த தாலி மஞ்சள் குங்குமம் போன்றவற்றை அவன் கையில் திணித்துவிட்டு,

 “பை… மறக்காம அர்ஜுன்கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணுங்க… தென்” என்று அவள் பர்ஸில் இருந்த அவள் கார்டை எடுத்து அவனிடம் தந்தாள்.

 “திஸ் இஸ் மை கார்ட்… திரும்பியும் தூக்கி போட்டுராதீங்க” என்று அவள் அவசரமாய் உரைத்துவிட்டு கண்இமைக்கும் நேரத்தில் வெளியேறினாள். அவனும் அவள் தந்து விட்டு போனதை எல்லாம் கைகளில் வாங்கி கொண்டு அவள் அவசரத்தின் காரணம் புரியாமல் விழித்தான்.

அவள் கொடுத்த பொருளையெல்லாம்  பார்த்து, என்னை பார்த்தா இவளுக்கு எப்படி தெரியுது‘ என்று யோசித்தபடி அபிமன்யு அவளை சந்தித்தது முதல் நடந்தவற்றை அனைத்தையும் நினைவுகூர்ந்தவன் அவர்களுக்குள் விதியின் வசத்தால் ஏற்பட்ட பந்தத்தை எண்ணி வியந்தான்.

நிச்சயமாக அவளுக்கும் தனக்கும் ஏதோ ஜென்மாந்திர உறவு இருக்கிறது என்பதை அன்று நடந்த நிகழ்வுகளும் அவனை அழுத்தமாய் நம்ப வைத்தது.

இன்று  இறைவன் சன்னிதியில் மீண்டும் தீர்மானிக்கப்பட்ட இந்த அழகிய பந்தத்தை சூர்யாவும் அபிமன்யுவும்  நிலைநிறுத்திக் கொள்ள கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றை விலையாய் கொடுக்க போகிறார்கள். அந்த பேரிழப்பு அவர்களின் காதல் விருட்சத்தையே தகர்க்கவும் கூடும்.

கோவிலில் இருந்து  அவசரமாய் புறப்பட்ட சூர்யா ஈஷ்வரை சந்திக்க விருப்பமன்றி அவள் பயணத்தை மேற்கொண்டாள். அதுவல்லாது அந்த சமயத்தில் அவள் அலைபேசி மௌனமாய் ஈஷ்வரின் அழைப்பை எடுத்துரைத்து கொண்டிருந்தது.

ஓயாமல் அவன் அழைக்க அவள் அதை கவனிக்க தவறினாள்.  ஈஷ்வருக்கோ அவள் தன் அழைப்பை ஏற்க மறுக்கிறாள் என்று எண்ணும் போதே அவள் மீதான வெறுப்பும் கோபமும் பன்மடங்கு பெருகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே அவள் திமிர் பிடித்தவள் கர்வம் பிடித்தவள் என்ற எண்ணம் ஆழ அவன் மனதில் பதிந்திருந்த நிலையில் அவளின் கவனக்குறைவை அவளின் அலட்சியப் போக்காகவும் கர்வமாகவுமே அவன் தீர்மானித்து கொண்டான்.

அந்த நொடி  ஈஷ்வர்  முன்னிலையில் சூர்யா தோன்றினால் அவளை எரித்து விடும் அளவிற்கு அவள் மீது கோபத்தை தேக்கி வைத்து காத்திருந்தான்.