Puthu Kavithai 23(2)

Puthu Kavithai 23(2)

“இல்லக்கா… மாமா அவ்வளவு கோபப்படிருக்காங்க. எங்க அம்மா அப்பா அலோ பண்ணப்ப கூட மாமா அப்ஜெக்ட் பண்ணாங்க. அவங்க கிட்ட தப்பு இருக்கறதா சொன்னாங்க. நான் எதையுமே கேக்காம போய் மாட்டிகிட்டேன்…” என்றவள் இன்னுமே கண்ணீர் விட,

“என்ன ஆச்சு? ஒண்ணுமே ஆகல மது…”

“இல்லக்கா… அந்த வீடியோவ பார்த்தப்ப தான் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு புரியுது. அப்ப மட்டும் மாமா வரலைன்னா, அந்த இடத்துல நான் இருந்திருப்பேன்…” என்று அவளாகவே வீடியோவை பற்றி கூற,

“அதுதான் ஒன்னும் ஆகலைல்ல மது…”

“அப்படி ஆகியிருந்தா?”

“அப்படியே ஆகியிருந்தாலும் அது ஜஸ்ட் ஆக்சிடென்ட்ன்னு தான் உன்னோட மாமன் என்கிட்டே சொன்னான். உன்னை சுத்தி இருக்க எல்லாருமே இவ்வளவு உனக்கு சப்போர்ட்டா இருக்கும் போது உனக்கு என்னடா கவலை?” என்று ஆதூரமாக கேட்க,

“அதான் எனக்கு அவ்வளவு குற்ற உணர்வை தருதுக்கா. என்னை ரெண்டு அடி அடிச்சுருந்தா கூட பரவால்ல. நான் பண்ண தப்புக்கு இப்ப மாமா மாட்டிகிட்டாங்க…” என்றவளின் குரலில் அத்தனை கவலை!

“ஏன்? எஸ்பி எங்க மாட்டினாப்ல?”

“இப்ப வேற வழி இல்லாம என்னை மாமா தலைல கட்றாங்கல…” சொல்லும் போதே அவளது குரல் கம்மியது.

“வேற வழி இல்லாமல்லாம் இல்ல மது. வீட்ல இருக்கவங்களுக்கு எஸ்பி பெஸ்ட் சாய்ஸ்… அதுவும் இல்லாம உன்ர மாமன அவ்வளவு ஈசியா ஏமாத்தி, அவன் தலைல கட்டி வைக்க முடியுமா? அப்படி ஏமாற கூடிய ஆளா அவன்?” சிரிப்போடு ஆரம்பித்து நக்கலாக முடித்தாள் பூஜா. அதை கேட்ட மதுவின் முகத்திலும் லேசான தெளிவு! புன்னகை விரிந்தது!

“அதை விட என்னன்னா உன்னோட கான்பிடன்ஸ் லெவலை பார்த்து செமையா இன்ஸ்பையர் ஆனதா எஸ் பி சொல்லி இருக்கானே. அதிலும் அந்த பியுட்டி காண்டஸ்ட்ட வேண்டாம்ன்னு சொல்லி, அவ்வளவு தெளிவா நீ நின்னதை பத்தி அவன் சொல்லாத நாளே கிடையாது மது…”

பூஜா சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால் என்ன? பேச்சுவாக்கில் சிறு நிகழ்வாக கூறிவிட்டு அவன் நகர்ந்ததை எல்லாம் பெரிய விஷயமாக்கி மதுவை தன் வழிக்கு கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

“மாமா இன்ஸ்பயர் ஆகறதா? சான்சே இல்ல. அவரை யாருமே இன்ஸ்பயர் பண்ணமுடியாது க்கா.” உண்மையை கூறினாள் மது.

“எதுக்குமே முதல் முறைன்னு ஒன்னு இருக்குமே மது! உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாகன்னு…” என்று பூஜா சிரிக்க, உடன் மதுவும் சிரித்தாள்.

“சான்ஸே இல்ல. கல்யாணம் பேசின நாள்ல இருந்து உர்ருன்னு இருக்காங்க. அப்படி இன்ஸ்பயர் ஆகியிருந்தா, இப்படியா இருப்பாங்க?”

“உனக்காக என்னவெல்லாம் பண்ணினான்னு உனக்கு தெரியுமா மது?” என்று அவளிடம் பூஜா கேட்க, அவள் கேள்வியாய் பார்த்தாள்.

“உன்னை இந்த கேஸ்ல கொண்டு வர கூடாதுன்னு அவன் தான் அந்த பசங்களோட செல்போனை மீடியாவுக்கு கொடுத்தது. அதனால தான் அந்த வீடியோ ஆதாரம் எல்லாம் வெளிய வந்தது. இப்ப ஒரு பெரிய நெட்வொர்க்கை பிடிக்க முடிஞ்சு இருக்கு. ஆனா உன்கிட்ட பேச அவனுக்கு சில பாட்டில்நெக்ஸ் இருக்கலாம் மது. வேண்ணா நீ பேசி பார்க்கலாம்ல. உன்னோட வுட்பி தானே?” என்றவளின் முகம் யோசனையை தத்தெடுத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவளை மெல்ல தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்து மனம் விட்டு பேச வைத்தாள் பூஜா.

நடந்த சம்பவங்களை சிறு விபத்து என்று உணர வைத்தவள், அதை எளிதாக மறக்க பார்த்திபனை பகடைக் காயாக உபயோகித்தாள்.

பார்த்திபனின் மேல் மது கொண்ட நல்ல அபிப்ராயம் அதற்கு உதவி செய்ய, அவள் நினைத்த காரியம் மெல்ல மெல்ல நிறைவேறியது.

அவளுக்கு சில மருந்துகளையும் எழுதியவள்,

“உன்ர மாமன உள்ள வர சொல்லிட்டு நீ வெய்ட் பண்ணு மது…” என்று பூஜா சிரித்தபடியே கேலியாக கூற, புன்னகையோடு தலையாட்டினாள் மது.

உள்ளே நுழைந்து தன் முன்னே அமர்ந்த பார்த்திபனிடம்,

“எஸ்பி… ஐ நீட் எ டைரக்ட் ஆன்சர்…” என்று இடைவெளி விட்டவள், “நீ இப்ப மதுவ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு பெரியவங்க ப்ரெஷர் மட்டும் தான் காரணமா? இல்லைன்னா உனக்கே அப்படியொரு அபிப்ராயம் இருக்கா?” என்ற பூஜாவை புருவத்தை சுருக்கியபடி யோசனையாக பார்த்தான்.

அதற்கு பதில் கூறினான்.

“இதுவரைக்கும் இல்ல பூஜா. ஆனா இந்த சிச்சுவேஷனை யூஸ் பண்ணிக்கிட்டு அந்த சின்ன பொண்ணோட லைப்ப நான் கெடுக்க கூடாதுன்னு நினைக்கறேன்…”

அதை கேட்ட பூஜாவின் முகம் யோசனையாக சுருங்கியது.

“ஏன் அப்படி நினைக்கற?”

“எனக்கும் அவளுக்கும் இருக்க வயசு வித்தியாசம் அதிகம் பூஜா. பதினோரு வருஷம். அதுவுமில்லாம என் அக்கா பொண்ணு. எப்படி நான் அவளை?” என்று பார்த்திபன் தயங்கியபடி நிறுத்த,

“உன் அக்காவும் அவங்க மாமாவ தான கல்யாணம் பண்ணாங்க? அவங்க சந்தோஷமா இல்லையா எஸ்பி?”

“இருக்கலாம்… அதெல்லாம் அந்த காலம். இப்ப? என்னால இந்த விஷயத்தை டைஜஸ்ட் பண்ணவே முடியல பூஜா…”

“ஓபனா நான் ஒன்னு சொல்லட்டா எஸ்பி?” என்று புருவத்தை உயர்த்தியபடி பூஜா கேட்க,

“ம்ம்ம்… சொல்லு…” என்றான் பார்த்திபன்.

“நீ ஒரு பையன், நல்ல பையன். மது ஒரு பொண்ணு, நல்ல பொண்ணு… ஏன் உன்னால இப்படி பார்க்க முடியல?” என்ற பூஜாவின் கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.

“உன்னால அப்படி பார்க்க முடியனும். ட்ரை பண்ணி பாரு எஸ்பி… அப்படியும் முடியலைன்னா இந்த கல்யாணம் வேண்டாம். அப்படியும் மீறி பண்ணினா உன்னால சரியா வாழ முடியாது. அந்த பொண்ணோட வாழ்க்கை அதோ கதி தான். ஆனா உன்னை அந்த பொண்ணு ஹீரோவா நினைக்கறா. என் மாமா தலைல என்னை கட்றாங்கன்னு ரொம்ப வருத்தப்படறா. இப்ப ரொம்ப பெரிய தாழ்வு மனப்பான்மைல இருக்கா. ஆனா உன் கூட இருந்தா மட்டும் தான் பாதுகாப்பா உணர முடியுதுன்னு சொல்றா. அப்படிப்பட்ட பொண்ணை நீ லூஸ் பண்ணனுமா? நீயே யோசிச்சு முடிவு பண்ணு எஸ்பி…” என்று இவள் முடிக்க,

“சரி, இதை விடு பூஜா… இப்ப மது சரியாக என்ன பண்றது?”

“சரியாகனும்ன்னா ஒரே மருந்து நீ மட்டும் தான்…” என்று ஒரே வார்த்தையில் முடிக்க, குழப்பமாக பார்த்தான்.

“என்னப்பா சொல்ற?”

“ம்ம்ம்… ஆமா… அந்த விஷயத்துக்குள்ளயே தன்னை தொலைக்க பார்க்கறா மது. அந்த கவனத்தை வலுகட்டாயமா இன்னொரு விஷயத்து மேல வைக்கணும். அதை இந்த கல்யாணம் ஈசியா பண்ண முடியும். நீ மனப்பூர்வமா அவளை ஏத்துக்கற பட்சத்துல, அவ உன்னோட சரி பாதின்னு உணர வைக்கணும். ஆனா உன்னால மதுவ மனசார ஏத்துக்க முடியாதுன்னு தோணினா தயவு பண்ணி கல்யாணத்தை நிறுத்திடு. ஏன்னா அவ மனசு இன்னும் டிப்ரஷன்குள்ள போக அதுவே காரணமாகிடும்…” தெளிவாக கூறிய தோழியை ஆழ்ந்து பார்த்தவன், இரு கைகளாலும் முகத்தை அழுத்தமாக தேய்த்து முடியை கோதினான்.

“யோசனை பண்றேன் பூஜா…” என்றவன், மேலும் அவளிடம் மாத்திரைகளை எழுதி வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

மனம் இன்னுமே குழம்பியது.

கையை தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தாள் மது.

‘நான் இவளது வாழ்வை காப்பேனா? இல்லை அழிப்பேனா?’ தனக்கு தானே கேட்டுக் கொண்டான் பார்த்திபன்.

‘நீ மட்டும் தான் அவளோட மருந்து எஸ்பி…’ பூஜா கூறியது காதில் அறைந்தது.

தலைகுனிந்து அமர்ந்திருந்த மதுவுக்கு எல்லாவற்றையும் தாண்டி சில கோபங்கள்.

அந்த வீடியோ பதிவை, வெளிப்படையாக்கியது பார்த்திபன் தான் என்பது அவளுக்கு புதிய செய்தி!

“கிளம்பு மது…” என்று கூறியபடி நடந்த பார்த்திபனை முறைத்துப் பார்த்தாள்.

“ஏன் அந்த அந்த வீடியோவ மீடியாவுக்கு கொடுத்தீங்க?”

“என்ன திடீர்ன்னு?”

“ஏன் கொடுத்தீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க?”

“யார் சொன்னா?”

“யாரோ சொல்றாங்க? பதில் சொல்ல மாட்டீங்களா?” அவனுக்கு முன் வந்து நின்று கொண்டு பிடிவாதமாக கேட்க, பார்த்திபனுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது. இத்தனை நேரம் பேசாமடந்தையாக எதையோ பார்த்து வெறித்தபடி இருந்தவளா இவள்?

“பூஜா தான சொன்னாப்ல?” என்று சிறு புன்னகையோடு கேட்க,

“ஆமா… சொல்லுங்க…” வார்த்தைகளில் அப்படியொரு பிடிவாதம்.

“என்ன சொல்லணும்?”

“ஏன் அந்த வீடியோவ கொடுத்தீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க…”

“ஏன் அவனுங்க மாட்டிகிட்டாங்களேன்னு உனக்கு வருத்தமா இருக்கா?” கிண்டலாக அவன் கேட்க, மது முறைத்தாள்.

“ஏன் இப்படி சொல்றீங்க? என்னை மாதிரிதான மத்த பொண்ணுங்களும்? அந்த நேரத்துல எவ்வளவு கஷ்டமா இருந்துது தெரியுமா? அதை திரும்ப ரிவைண்ட் செஞ்சு பார்க்கனும்ன்னா எவ்வளவு கஷ்டம்? எப்படி உங்களுக்கு மனசு வந்தது?” பாவமாக அவள் கேட்க, பார்த்திபனோ,

“அந்த வீடியோஸ்ல எங்கயாவது ஒரு பொண்ணோட முகமாவது தெரியுதா?” என்று கேட்டான்.

மறுத்து தலையாட்டியவள், “ஆனா குரல் எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்கே?”

“சோ? அதனால என்ன? பாதிக்கப்பட்ட பொண்ணுங்களை காப்பாத்தணும்ன்னு நினைச்சு இதையெல்லாம் மறைச்சு வெச்சுகிட்டே இருந்தா இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் திமிரா தெனாவெட்டாத்தான் சுத்திட்டு இருப்பாங்க. அந்த பொண்ணுங்க முன்னாடியே, அவங்களுக்கு இப்படி அநியாயம் நடந்ததை வெளிய சொல்லியிருந்தா மத்த பொண்ணுங்களை காப்பாத்தி இருக்கலாம்ல? அவங்களுக்கு அவங்களோட சுயநலம் மட்டும் தான் முக்கியம்ன்னு இருந்ததனால தான் இத்தனை பொண்ணுங்க பாதிக்கப்படறாங்க. என்னை பொறுத்தவரைக்கும் அந்த பொண்ணுங்களும் குற்றவாளிங்கதான்…” என்று கடுகடுப்பாக அவன் முடித்தான்.

“அப்படின்னா நானும் குற்றவாளிதான?” என்று மது கேட்க,

“உனக்கு நான் பொறுப்பு… அப்படின்னா நீ குற்றவாளி கிடையாது. நான் தான்…” என்று கூறிவிட்டு வெளியே போக முயல, அவசரமாக அவனுக்கு முன்னே போனவள், அவன் காரில் ஏறும் முன்,

“நீங்க சொல்றது புரியல…” என்று முறைத்தாள்.

“பொண்டாட்டி பாவம் பண்ணினா, அது புருஷன் கணக்குல தான் வருமாம்… அதனால நீ கவலைப்படாத…” என்று கூறியவன், அதற்கும் மேல் அவளிடம் பதில் பேசாமல் காரை கிளப்ப,

“இந்த மாமா என்ன சொல்லுது?” என்று மண்டையை தட்டியபடி யோசித்தாள் மதுவந்தி.

எப்படி யோசித்தாலும் அவளுக்கு விடை தெரியவில்லை.

அதே குழப்பத்தோடு அவனோடு இல்லறத்தில் அடியெடுத்து வைத்தாள் மதுவந்தி, திருமதி மதுவந்தி பார்த்திபனாக!

error: Content is protected !!