SST– EPI 23

SST– EPI 23

அத்தியாயம் 23

மலேசியாவிலிருந்து முதன் முதலாக எவரெஸ்ட் மலையில் கால் பதித்தவர்கள் தமிழர்கள் தான். டத்தோ எனும் உயரிய விருதையும் அதற்காகப் பெற்றார்கள் நமது மகேந்திரன் மற்றும் மோகன்தாஸ் இருவரும். 23 மே 1997ல் மதியம் 2.10க்கு (மலேசிய நேரம்) மகேந்திரன் மலை உச்சியைத் தொட, அவருக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் கடந்து மேகன்தாஸ் எவரெஸ்ட் உச்சியில் கால் பதித்தார்.

 

அதிர்ச்சியில் கன்னத்தில் கைத்தாங்கி மலங்க விழித்தாள் மிரு. அதற்குள் கோபத்துடன் பாய்ந்து வந்திருந்தான் குரு.

“ஹேய்! ஹௌ டேர் யூ ஹிட் மை கேர்ள்?” என உள்ளே வந்த உருவத்தின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அவன்.

அவன் அறைந்ததில் ஆவேசம் அடைந்த அருளும் குருவின் சட்டைக் காலரைப் பற்றி இருந்தான்.

“அவள அடிப்பேன், கொல்லுவேன்! அதுக்கு முழு உரிமையும் எனக்கு இருக்கு! நீ யாருடா அதக் கேட்க?” உஷ்ணம் பறந்தது அருளின் குரலில்.

“மைண்ட் யுவர் வோர்ட் யூ…………..” ஆத்திரம் வந்தால் குருவுக்கு ஆங்கிலம் தானாக வந்து விடும்.

நெஞ்சு இரண்டும் மோதிக்கொள்ள ஒருத்தர் கழுத்தை ஒருத்தர் பிடித்தவாறு இவன் ஆங்கிலத்திலும் அவன் தமிழிலும் சண்டையிட்டுக் கொள்ளுவதைப் பார்த்த மிரு, அவசரமாக வாசல் கதவை அடைத்தாள்.

பின் அவர்கள் இருவரின் நடுவில் வந்து நின்றவள்,

“ரெண்டு பேரும் கத்தறத கொஞ்சம் நிறுத்துறீங்களா? எனக்கு காது கொய்யுன்னு கேக்குது” என இவளும் குரலை உயர்த்தினாள்.

அவள் சத்தத்தைப் புறம் தள்ளியவர்கள், கத்துவதை நிறுத்தி கைக்கலப்பில் இறங்கினார்கள்.

“நீ எப்படிடா என் மிருவ கை நீட்டி அடிக்கலாம்?” என குரு அருளைத் தாக்க அவனோ,

“அவ என்னோட பொண்டாட்டிடா! உன் பொண்டாட்டி இன்னொருத்தன் வீட்டுல போய் உட்கார்ந்திருந்தா நீ சும்மா இருப்பியா? உதடு சிவந்து தடிச்சு, முடிலாம் கலைஞ்சி ஏடாகூடமா வந்து கதவ திறந்தா நீ சும்மா நிப்பியா? சொல்லுடா, நிப்பியா?” என கேட்டுத் திரும்ப தாக்கினான்.

பொண்டாட்டி எனும் பதத்தில் அதிர்ந்து நின்றான் குரு. அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அருள், ஓங்கி அவன் முகத்தில் குத்த ரத்தம் குபுக்கென உதட்டை கிழித்துக் கொண்டுக் கொட்டியது குருவுக்கு.

“ஐயோ ரத்தம்!’ என கத்திய மிரு, அருளின் கைப்பிடித்து ஆவேசமாகத் தடுத்தாள்.

“என்ன பண்ணறீங்க அத்தான்? விடுங்க அவர!” என கத்தியவள் தன் பலம் கொண்ட மட்டும் அருளைத் தள்ளி விட்டாள். இரண்டடி பின்னால் நகர்ந்தவன் மிருவை உறுத்து விழித்தான்.

குருவை நெருங்கியவள், அவசரத்தில் எந்த துணியும் கிடைக்காததால் அவளது டீசர்டை உயர்த்தி அவன் உதட்டு ரத்தத்தைத் துடைக்க முயன்றாள். அவள் கைப்பிடித்து சட்டென தடுத்த குரு,

“அவன் சொல்லறது உண்மையா மிரு? நீ அவன் பொண்டாட்டியா?” என குரலில் கோபம் கொப்பளிக்கக் கேட்டான்.

“இல்ல பாஸ்! முழு பொண்டாட்டி இல்ல!  நான் அருள் அத்தானுக்கு ஹால்ப் பொண்டாட்டித்தான். எங்களுக்கு என்கேஜ் ஆகிருச்சு!  இன்னும் கல்யாணம் ஆகல! எப்படியும் ஓன் மந்த்ல கல்யாணம் வச்சிருவாங்க” என அசராமல் குண்டைத் தூக்கிப் போட்டாள் மிரு.

உதட்டில் வழிந்த ரத்தத்தைத் தன் புறங்கையால் துடைத்தவன்,

“இத என்னை நம்ம சொல்லுறியா மிரு? நீ அவன் பொண்டாட்டின்னா, இவ்வளவு நேரம் என் கையில உருகி கரைஞ்சது யாரு? சொல்லு, யாருடி அது? யூ ஆர் மை ப்ரோபர்ட்டி மிருது! என் வைப்! இந்த குருப்ராசாத்தோட வைப்” என சொல்லியவன் அவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

“விடுடா அவள!” என எகிறினான் அருள்.

“இருங்க அத்தான், நான் பேசறேன்!” என அருளை அடக்க முயன்றாள் மிரு.

“நோ!!! டோண்ட் கால் ஹிம் அத்தான். மிரு ப்ளிஸ், அப்படிலாம் யாரையும் என் முன்னால கூப்பிடாதே!” இன்னும் இறுக்கினான் தன் பிடியை. தோள் இரண்டும் கலண்டு விழும் போல வலித்தது மிருவுக்கு.

“கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருக்கிங்களா ப்ளிஸ்! இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கலாம்!” என்றவள் குருவை சோபாவின் புறம் நகர்த்தினாள். அவன் அசையாத கருங்கல்லாய் நின்றிருந்தான்.

“பாஸ் ப்ளீஸ்!” என மிரு கெஞ்சவும் தான் நகர்ந்துப் போய் சோபாவில் அமர்ந்தான். அவன் விழிகள் அருளையே முறைத்திருந்தது. அவன் அமர்ந்ததும், அருளை நெருங்கி கையைப் பிடித்தாள் மிரு.

“தொடாதே அவன!” என சோபாவில் இருந்து படக்கென எழுந்தான் குரு.

“நீ யார்டா எங்க அத்தைப் பொண்ணு என்னைத் தொடக் கூடாதுன்னு ஆர்டர் போடறது? இன்னும் ஓன் மந்த் டைம்ல தொட்டால் பூ மலரும்னு நான் பாட, தொடாமல் நான் மலர்வேன்னு அவ பாடுவாடா! ஓ சாருக்கு தமிழ் வராதாமே, சரி பீட்டர்ல பாடிக் காட்டறேன் உனக்காக! டச்சு பிளாவரு ப்ளூம், நோ டச்சு ஐஐஐஐ ப்ளூம்” என ஐயை இழுத்துப் பாடிக்காட்டி  குருவை சீண்டினான் அருள்.

மிருவுக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் தலைக்கு ஏற மீண்டும் அருளை நோக்கிப் பாய்ந்தான் குரு. இந்த தடவை குரு காட்டிய காட்டில் அருளின் மூக்கில் ரத்தம் கொட்டியது.

“சபாஷ், சரியான போட்டி! சண்டை முடிஞ்சதும், யாரு உயிரோட இருக்கீங்களோ அவங்க வந்து என்னைக் கூப்பிடுங்க! இப்போ நான் படுக்கப் போறேன்” என ரூமுக்கு நகர்ந்தாள் மிரு.

குருவின் உதட்டில் ரத்தம் வந்ததுக்கு பதறி வயிறு தெரிகிறது எனும் பிரக்ஞை கூட இல்லாமல் டீசர்டைத் தூக்கித் துடைக்க வந்தவள், தன் மூக்கில் ஒழுகும் ரத்தத்தைக் கண்டு கொள்ளாமல் சென்றது ஆத்திரத்தைக் கிளப்பியது அருளுக்கு.

“அங்கயே நில்லுடி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா, தனியா இருக்கற ஒரு ஆம்பளை வீட்டுல இத்தனை நாள் ஸ்டே பண்ணியிருப்ப? எங்கத்தை ஓடிப் போனாலும், கல்யாணம் கட்டிக்கிட்டுத்தான் போனாங்க. எங்க அத்தை வளர்த்த நீயும் தப்புத்தண்டா எதுவும் பண்ணியிருக்க மாட்டேன்னு நம்பறேன். என்ன, நம்பலாம் தானே?” என தெனாவெட்டாகக் கேட்டான் அருள்.

மிருவின் தலை தானாக ஆம்மென ஆடியது.

“அப்போ சரி! இவன் குடுத்த கிஸ்சு கருமாந்திரம் எல்லாம் மறந்து, உன்னை மன்னிச்சு விடறேன். இப்போ போய் கிளம்பு! அஞ்சு நிமிஷத்துல வரனும். போ, போ!” என அதிகாரமாக சொன்னான் அருள்.

அவன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவளாக அமைதியாக ரூமுக்குள் நுழையப் போனாள் மிரு.

“நில்லு மிரு! நீ எங்கயும் போகத் தேவையில்ல! எதுக்குப் போகனும்? இது உன் வீடு, நம்ம வீடு! உன்னையும் உன்னை சார்ந்தவங்களையும் நான் பார்த்துப்பேன். ஸ்டே வித் மீ மிருதும்மா!” என்ற குருவின் குரலுக்கு லேசாகத் தயங்கி நின்றவள், பின் வேகமாக ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

குருவை நக்கல் பார்வைப் பார்த்த அருள்,

“பாஸ், ஊரான் நிலத்துக்கு நீங்க பட்டா போட பார்க்கக் கூடாது பாஸ்! என் வைப்புக்கு பட்டப் பேருலாம் நல்லா வைக்கறீங்க! மிருதுவாம் மிருது! அவ மிருதுவா இல்லையான்னு கண்டுப்பிடிக்கற சான்சை கடவுள் உங்களுக்குத் தரலியே பாஸ்! சோ சேட், சோ சேட்” என உச்சுக் கொட்டினான்.

“டேய்!” ஹை கிளாஸ் குரு அருளின் அட்டகாசத்தால் லோ கிளாசாக மாறி இருந்தான்.

கை நீட்டி ரத்தம் வரும் அளவுக்கு குரு யாரையும் அடித்ததில்லை. சண்டை, சச்சரவு என்றாலே முகம் சுளித்து ஒதுங்கிப் போய் விடுவான். அவன் வளர்ந்த சூழ்நிலையில் இப்படி அடிதடி, தரக் குறைவான வாய் சண்டை எல்லாம் அவன் பார்த்தது கூட கிடையாது. அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை என்பது கூட ஆனந்தியின் பேரமைதியிலும், தன் தந்தை சமைத்து உணவு பரிமாறுவதிலும் தான் தெரிந்துக் கொள்வான். அது கூட மிஞ்சி மிஞ்சி இரண்டு நாட்கள் தான் நீடிக்கும். மறுபடியும் ஆனந்தியின் சிரிப்பு சத்தம் வீட்டை நிறைக்க ஆரம்பித்து விடும்.

குடும்பத்துப் பிரச்சனைகளைப் பேசியோ, அல்லது பேசாமல் சைலண்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்தோ கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வரலாம் என தன் அருமைத் தந்தையால் போதிக்கப்பட்டு வளர்க்கப் பட்ட குரு, அருளின் அட்டகாசத்தால்தான் அந்நியனாக மாறி இருந்தான். பிறப்பிலேயே ஊறி இருந்த பண்பாடு தலைத்தூக்க, சண்டையைக் கைவிட்டவன் அருளை ஏறிட்டுப் பார்த்தான்.

“உட்காருங்க! என் மிரு உங்கள என்னவோ பேர் சொல்லி கூப்பிட்டாளே, ஹ்ம்ம் அருள்! உட்காருங்க மிஸ்டர் அருள்” என்றவன் கிச்சனுக்கு சென்று ஈர டவலில் ஐஸ் கட்டிப் போட்டு எடுத்து வந்தான்.

“மூக்குல வச்சிக்குங்க! ரத்தம் நிக்கும்” என்றவன் தானும் ஒரு துண்டால் உதட்டை அழுத்திக் கொண்டு அவன் எதிரே அமர்ந்தான்.

“இப்போ சொல்லுங்க மிஸ்டர் அருள், இத்தனை நாள் மிரு கஸ்டப்பட்டப்போ எங்கப் போனீங்க? அவ வீட்டுக்குள்ள அந்த தறுதலைங்க நுழைய ட்ரை பண்ணப்போ என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? இப்போ திடீர்னு என்ன அவ மேல அக்கறை?”

“அந்த எருமைங்கள தான் போலீஸ் அடிப்பின்னி எடுத்து அள்ளிப் போட்டுட்டு போயிட்டாங்கல்ல! அப்புறம் அவனுங்கள பத்தி என்னப் பேச்சு?”

“அவங்களா அள்ளிப் போட்டுட்டுப் போகல, நான் போக வச்சேன்!”

அறையில் இருந்து அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மிருவுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அந்தப் படிக்கட்டு கூஜாக்களை கஞ்சா கேசில் போலீஸ் பிடித்ததை கணேவின் மூலம் அறிந்து வைத்திருந்தாள் அவள். ஆனால் அதற்கு குருதான் காரணம் என்பது இப்பொழுதுதான் அவளுக்கேத் தெரியும். குருவின் மேல்தட்டு பழக்க வழக்கங்களையும், அலட்டாத தோரணையும் இத்தனை நாளாக கண் கூடாக கண்டிருந்த மிருவுக்கு, தனக்காக அவன் கஞ்சா, போலீஸ், குடிமகன்கள் என கீழ்மட்டத்துக்கு இறங்கியது மிக வருத்தமாக இருந்தது. பல்லைக் கடித்து அழுகையை அடக்கியவள் பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தாள். அவசரமாக அங்கிங்கே இறைந்துக் கிடந்த கணேவின் உடைகளை சேகரித்தவள், தன் சீப்பு, பவுடர், பிரஸ் எல்லாவற்றையும் எடுத்து பேக்கில் வைத்தாள்.

அருளோ,

“ஓ! நீங்க பண்ண வேலையா அது? ஆனா பாருங்க நான் இங்க இருந்திருந்தா இந்த மாதிரி நடக்க விட்டுருக்க மாட்டேன்! நான் ஆஸ்திரேலியால இருக்கவும் தான் எங்க மிரு உங்க வீட்டுக்கு அடைக்கலம் தேடி வந்தா! பாதுகாப்பு தேடி வந்த பச்ச மண்ணு அவ. நீங்க இப்படி அட்வாண்டேஜ் எடுத்துருக்க கூடாது அவ கிட்ட! குழந்தை பாஸ் அவ. அவள போய் கிஸ் பண்ணிருக்கீங்களே! ஏதோ நானா இருக்கப் போய் மன்னிச்சு விடறேன்! எனிவே, கோபத்துல கை நீட்டிட்டேன்! ஐம் சாரி! இனிமே எங்க வழிய நாங்க பார்த்துக்கறோம். ஒதுங்கிப் போயிருங்க! அதுதான் எல்லோருக்கும் நல்லது”

“முடியாது!”

“என்ன, என்ன முடியாது?”

“ஒதுங்கிப் போகிற ஸ்டேஜ்லாம் நான் தாண்டிட்டேன்! நீங்க ஒதுங்கிப் போயிருங்க மிஸ்டர் அருள்! என் மிருது என்னைத்தான் லவ் பண்ணறா! நடுவுல நீங்க வராதீங்க”

“அந்தப் பரதேசிங்களுக்கு தண்டனை வாங்கிக் குடுத்தீங்கன்ற ஒரே காரணுத்துக்காகத்தான் ஒழுங்கா பேசறேன் பாஸ்! அதுக்குன்னு என் வீட்டு மாங்காய நீங்க ஊறுகாய் போட்டுக்குங்கன்னு விட்டுக் குடுக்கற அளவுக்கு நான் கேணையன் இல்ல” என எள்ளலாக மொழிந்தவன்,

“மிரு சீக்கிரம்டி!” என இங்கிருந்து கத்தினான்.

“வரேன் அத்தான்!” என அவள் பதில் கொடுத்ததில் கொந்தளித்தான் குரு. வேகமாக எழுந்தவன், மிரு இருந்த ரூமுக்குள் நுழைந்து கதவடைத்தான்.

அவன் பின்னால் ஓடிய அருள்,

“டேய், கதவ திறடா” என கதவைப் படபடவென தட்டியப்படியே கத்தினான்.

“பத்து நிமிஷம் குடுங்க ப்ரோ! பேசத்தான் போறேன், உங்கள வெளிய வச்சிக்கிட்டு அவசர ஊறுகாய்லாம் போட மாட்டேன்!”

பேக்கை அணைத்துப்பிடித்தப்படி கட்டிலில் அமர்ந்திருந்த மிருவின் அருகே போய் நின்றான் குரு. மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் மிரு.

“வொய் மிரு?” இரண்டே சொல்லில் தன் மனக்குமுறலை வெளியிட்டான் குரு.

“எங்கம்மாவ எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாஸ்”

“சோ?”

“அவங்களுக்கு அருள் அத்தான ரொம்பப் பிடிச்சிருக்கு”

பொத்தென அவள் அருகில் அமர்ந்தவன்,

“அப்போ நான், நம்ம காதல்?” என கோபமாகக் கேட்டான் குரு.

“என்ன நம்ம காதல்? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல! நீங்கத்தான் காதல், காதல்னு பினாத்தறீங்க! நான் என்னைக்குமே காதல சொன்னது இல்ல பாஸ்”

“சொல்லலைனா என்னால உணர முடியாதா மிரு? ஐ க்னோ தட் யூ லவ் மீ டூ! இப்படி நம்ம வாழ்க்கையில விளையாடாதே மிரு! கடைசியிலே தவிக்கப் போறது நாம ரெண்டு பேர்தான்!” அவளை நெருங்கி அவள் கன்னத்தை வருடியபடியே கண்களால் வசியம் செய்தான் குரு. பட்டென குனிந்துக் கொண்டாள் மிரு.

“என் வாழ்க்கை இனி அருள் அத்தான் கூடத்தான்! நான் போறேன் பாஸ்”

“மிரு!!!” அதட்டினான் குரு. பின் கஸ்டப்பட்டு கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்,

“நான் அம்மா கிட்ட வந்து பேசறேன் மிரு! நம்ம காதல எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க மிரும்மா! டோண்ட் கிவ் அப் விதவுட் அ ஃபைட்” என குழந்தைக்கு சொல்வது போல சொன்னான்.

பட்டென எழுந்தவள்,

“காதலே இல்லைன்னு சொல்லுறேன், அம்மாட்ட பேசறேன் ஆட்டுக்குட்டிட்ட பேசறேன்னு உளறாதீங்க பாஸ்!” என கத்தினாள்.

“காதல் இல்லாமத்தான் என் உதட்டுல கபடி ஆடனியா?” அவள் முத்தமிட தெரியாமல் தடுமாறியதை கிண்டல் அடித்தான் குரு.

பதில் சொல்ல தடுமாறி கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டவள்,

“அது வந்து பாஸ்…தனிமை, இரவின் இனிமை, ஹார்மோன்லாம் சேர்ந்து நாட்டியம் ஆடிருச்சு எனக்குள்ள. அதான் குடுத்துட்டேன்! உடனே அது காதல்னு எப்படி நீங்க நினைச்சுக்கலாம். ப்ராக்டிஸ்னு நினைச்சுக்குங்க”

“ப்ராக்டிஸ்?”

“ஆமா அதுவேத்தான்! நீங்க மட்டும் கல்யாணத்துக்கு முன்ன எத்தனைப் பொண்ணுங்க கூட அப்படி இப்படின்னு ப்ராக்டீஸ் பண்ணிருக்கீங்க! அதே நாங்க பண்ணா மட்டும் தப்பா?” என வேண்டும் என்றே அவனைக் கோபமூட்டினாள் மிரு.

“ஹ்ம்ம் சரி! முத்த ப்ராக்டிஸ் மட்டும் போதுமா மிரு? மத்த ப்ராக்டிசும் என் கிட்டயே முடிச்சுட்டே போ” என அவள் சுதாரிப்பதற்குள் இழுத்து அணைத்திருந்தான் குரு.

“விடுங்க பாஸ்! வேணா விடுங்க!” என அவள் சொல்ல சொல்ல அழுந்த முத்தமிட்டான் அவன்.

அவனைப் பிடித்துத் தள்ளியவள்,

“உங்களுக்கும் நான் கடந்து வந்த மத்த ஆம்பளைங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவனுங்களும் என் கிட்ட இதைத்தான் எதிர்பார்த்தாங்க! நீங்களும் காதல்னு சொல்லி அதையேத்தான் என் கிட்ட இருந்து எதிர்பார்க்கறீங்க பாஸ்! மத்தவங்களுக்கு பல விதத்துல நான் மறுப்பைக் காட்டிருக்கேன்! ஆனா நீங்க எனக்கு நெறைய செஞ்சிருக்கீங்க! உங்க கிட்ட இந்த மிரு நன்றி கடன் பட்டிருக்கா! இப்போ என்ன? உங்களுக்கு 69 கலோரிய இறக்கனும் அவ்வளவுதானே! வாங்க பாஸ், ஐம் ரெடி” என மெல்லிய குரலில் அவன் கண்களை நேராகப் பார்த்து உரைத்தாள் மிரு.

அவள் சொன்னதில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது குருவுக்கு.

“ஓன் ஹவர் கிஸ்சிங்ல இறங்கற கலோரியோட ஓன் டைம் பலான ப்ராக்டிஸ்ல இன்னும் வேகமா கலோரி இறங்கும்னு கண்டுப்பிடிச்சி வச்சிருக்க போலிருக்கு மிரு! குட் கேர்ள்! ஆனா எனக்கு உன்னோட நன்றி உணர்ச்சி வேணா மிருதுளாஸ்ரீ! உன் நன்றிய எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல! எவ்வளவுக்கெவ்வளவு என்னையும் என் காதலையும் கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப் படுத்திட்ட நீ. ஃபைன்! என்னை விட்டுட்டுப் போறதுனா, பை ஆல் மீன்ஸ்!” கதவை சுட்டிக் காட்டியவன் கண்கள் மட்டும் போகாதே என இறைஞ்சியது.

“பாஸ்! என்னை மறந்துட்டு உங்கள மாதிரி சம அந்தஸ்த்துல யாரையாச்சும்..” என அவள் சொல்லி முடிக்கவில்லை, கத்தாமல் கடினமான குரலில்,

“ஜஸ்ட் ஷட் அப் அண்ட் கெட் லோஸ்ட்!” என வார்த்தைகளை கடித்துத் துப்பினான் குரு.

கோபத்தில் சிவந்திருந்த அவன் முகத்தைப் கடைசி முறையாக மனப்பாடம் செய்வது போல பார்த்தவள், விடு விடுவென அவனை விட்டும் அவன் வாழ்க்கையை விட்டும் வெளியேறிவிட்டாள். அவளை தொடர்வதற்கு முன்,

“போதும் பாஸ்! அடுத்தவன் வாங்கன கோக்ல நாம ஸ்ட்ரோ போட்டு உறிஞ்சக் கூடாது பாஸ்” என சொன்னான் அருள்.

“இங்க ஒரு கொலை விழுறதுக்குள்ள ஓடிப்போயிரு!”

“போறோம்! இனிமே திரும்பி வர மாட்டோம்” என வெளியேறினான் அவன்.

மிரு பயன்படுத்திய கட்டிலில் அமர்ந்த குரு, தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“போய்ட்டா! விட்டுட்டுப் போய்ட்டா! மை ஆனந்தம் இஸ் கோன்!” வாய் விட்டுப் புலம்பியவன் கண்ணில் இருந்து அவனையும் அறியாமல் வழிந்தது ஒற்றை நீர் துளி.

ஒரு வாரம் அப்படியே ஓடிப்போனது. மெடிக்கல் லீவ் என குருவின் வீட்டில் இருந்து கிளம்பிய மறுநாள் மோனிக்காவுக்கு இமேயில் அனுப்பி இருந்த மிரு, சரியாக ஒரு வாரத்தில் ராஜினாமா கடித்தையும் அக்ரிமேண்டை ப்ரேக் செய்ததற்கு உரிய பண காசோலையையும் அனுப்பி இருந்தாள். ஐம்பதாயிரத்துக்கு உரிய காசோலையை கையில் வைத்து வெறித்தப்படி இருந்தான் குரு.

மிரு அக்ரிமெண்டில் சைன் வைத்ததும், பின் தான் வம்பிழுத்ததும், அதற்கு அவளின் ரியாக்‌ஷனும் என அன்று நடந்தது எல்லாம் கண் முன் வந்துப் போனது குருவுக்கு. லாப்டாப்பை மூடி வைத்தவன், வீட்டுக்குக் கிளம்பி விட்டான். அமைதியாக வரவேற்ற ஆளில்லாத வீடு அவனை என்னவோ செய்தது. நேராக ப்ரிட்ஜிக்குப் போனவன், அங்கிருந்த பீர் போட்டல் ஒன்றை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். தொப்பென சோபாவில் அமர்ந்தவன் நினைவெல்லாம் தன் மிருதுவையே சுற்றி வந்தது. அவளைப் பார்க்க வேண்டும் போல வெறியே வந்தது அவனுக்கு. தான் அவ்வளவு இறங்கி கெஞ்சியும் ‘இல்லை, வேண்டாம்’ என போனவளை மறக்கவும் முடியவில்லை, வெறுக்கவும் முடியவில்லை அவனால்.

“ஐ மிஸ் யூ மிரும்மா! மஐ மலவ் மயூ மமி மரு!” என புலம்பிக் கொண்டிருந்தவன் கருத்தைக் கவர்ந்தது ஹாலின் ஒரு மூலையில் இன்ஸ்டால் செய்திருந்த சிசிடிவீ கேமரா!

“சே! இத்தனை நாள் இது தோணாமா போச்சே” என தன்னையேத் திட்டிக் கொண்டவன், டிவியில் சிசிடீவி ஆப்ளிகேஷனைத் திறந்தான். அன்று மிருவாக தன்னை முத்தமிட்ட தினத்தை செலேக்ட் செய்து ஓட விட்டான். அவள் வந்தது, அவன் அருகில் அமர்ந்தது, பேசியது, முத்தமிட முயன்றது எல்லாம் திரையில் ஓடியது. மீண்டும் மீண்டும் அதை ஓட விட்டுப் பார்த்தான் குரு. மிருவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது காதல்.

அன்று முத்த சுகத்தில் உணராமல் போனது எல்லாம் திரையில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்து உணர்ந்துக் கொண்டான் குரு. ஆனந்தத்தில் அவள் கண்ணில் வழிந்த கண்ணீர் துளி, கண்கள் காட்டிய பாவம், அவள் கைகள் தடவிய தடவல் எல்லாவற்றிலும் காதலை மட்டும்தான் கண்டான் குரு. எத்தனை தடவை அதையே ஓட விட்டுப் பார்த்தானோ அவனுக்கேத் தெரியாது. இன்னும் இன்னும் தன்னவளைப் பார்க்க வேண்டும் என தோன்ற, அவள் மருத்துவமனையில் இருந்து வரும் நேரத்தைக் கணக்கிட்டு எல்லா நாட்களின் கவரேஜ்ஜையும் பார்த்தான் குரு. அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் ரசித்துக் களித்தான். அவள் கிளம்பிப் போன நாளுக்கு முதல் நாள் வீடியோ கவரேஜைப் பார்த்தவனின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக் குத்தி நின்றன. பவுஸ் பட்டனை அழுத்தியவன், விழிகள் தெறிக்க திரையை வெறித்தான். அவன் உதடுகளோ,

“ஓ மை குட்னஸ்!” என முணுமுணுத்தன.

(தவிப்பார்கள்)

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!