SST–EPI 29

அத்தியாயம் 29

மலேசிய எனப்படுவது தீபகற்ப மலேசியாவையும் கிழக்கு மலேசியா என அழைக்கப்படும் சபா சரவாக் மாநிலத்தையும் சேர்ந்தே குறிக்கும். இந்நாட்டில் இன்னும் மன்னராட்சி இருந்தாலும், இது ஜனநாயக நாடாகவே கருதப்படுகிறது.

 

“அம்மா”

“என்னடாம்மா?”

“உன் கிட்ட சொல்லாமலே நான் லவ், கல்யாணம்னு போய்ட்டேன்னு என் மேல கோபமாமா?”

திருமணம் என சொல்லி மிருவை கெடாவில் இருந்து அழைத்து வந்துவிட்டதாக குரு சொல்லியிருந்தான் ரதியிடம். அவர் அண்ணாவின் வீட்டில் இருந்து அழைத்து வந்து ரதியையும் கணேவையும் தன்னுடனே வைத்துக் கொண்டான். ரதி பழைய வீட்டுக்கே போகிறேன் என கேட்க, தனது பேச்சுத் திறமையால் அவரை மடக்கி தன்னுடனே இருக்க செய்து விட்டான் குரு. போனஸ்சாக மிருவும் அவன் கண் எதிரிலேயே இருக்கிறாள். திருமணத்துக்கு முன்னரே லீவிங் டுகேதெர் அதுவும் காதலியின் குடும்பத்துடன் வாழ்பவன் இவன் ஒருவனாகத் தான் இருக்கும்.

“உன் மேல என்னைக்குமா நான் கோபப்பட்டுருக்கேன்! பாலைவனமா இருந்த என் வாழ்க்கையில கடவுள் கொடுத்த பூந்தென்றல் நீ மிரும்மா! உங்கப்பாவப் பிடிச்சுட்டு போனப்போ, அவர நம்ம கூட கூட்டி வரனும்னு அங்கயும் இங்கயும் அலைஞ்சதுல உங்க ரெண்டு பேரயுமே நான் சரியா கவனிக்கல. அந்த சின்ன வயசுலயே என் கஸ்டம் அறிஞ்சு தம்பிய தங்கமாட்டம் பாத்துக்குவ நீ! ஒரு தடவை அவன் பசிக்கு பால் கலக்கிக் கொடுக்கறேன்னு சுடுதண்ணீய கையில கொட்டிக்கிட்டு, அதை என் கிட்ட கூட காட்டாம மறைச்ச பாரு, அப்போத்தான் நான் வெறும் பொண்டாட்டி இல்ல ஒரு அம்மாவும் கூடன்னு மூஞ்சில அறைஞ்ச மாதிரி தெளிவு வந்துச்சு. அம்மாவுக்கே பாடம் சொன்ன புத்திசாலிடி நீ! உன் வாழ்க்கைக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாமலா போயிரும்.  நீ எது செஞ்சாலும் உனக்குத் துணையா நான் இருப்பேன் மிரும்மா”

“அம்மா!”

“என்னம்மா? என்ன ஓடுது உன் மனசுல? மாப்பிள்ளை மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் தேதி சொன்னதுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க!”

“எனக்குப் பயமா இருக்குமா!”

“கல்யாணம்னு வந்துட்டாலே பயம் தானா வந்துரும் மிரும்மா! அதுவும் தன் குடும்பம் விட்டு இன்னொரு குடும்பத்துக்குப் போற பொண்ணுங்களுக்கு அதிகமாவே பயம் இருகும்டி! போக போக சரியாப் போயிரும்”

“சரியா போயிருமாம்மா? பாஸ் இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணல. ஆனாலும் ஒரு பக்கம் பக்கு பக்குன்னு இருக்குமா!”

“மாப்பிள்ளை தம்பி உன் கண்ணப் பார்த்து புரிஞ்சுகிட்டே எல்லாம் செய்யறாரு! நீ என்னடான்னா பயம் பாயாசம்னு சொல்லிட்டு இருக்க”

“கல்யாணம்னா சும்மாவா ரதி? இது வரைக்கும் என்னையும் உங்க ரெண்டு பேரை சுத்தி மட்டும் வாழ்க்கை இருந்துச்சு. இனிமே பாஸ் அவர் பேமிலி, அவர் ப்ரேண்ட்ஸ்னு என் வட்டம் விரியுதுல. என்னால அவர் ஸ்டேட்டஸ்கு ஈடு குடுத்து நடக்க முடியுமான்னு டவுட் வருது. நான் வாயத் திறந்தாலே கச்சடாவ வார்த்தைங்க வந்து விழும் சில சமயம். ஆரம்பத்துல என் மேல உள்ள அன்புல அதெல்லாம் கண்டுக்கலைனாலும் போக போக பாஸ்க்கு வெறுப்பு வந்துட்டா! பயந்து வருதும்மா”

கண்ணில் பயத்தைத் தேக்கி கேட்கும் தன் தைரியசாலி மகளை பாசத்துடன் பார்த்தார் ரதி.

“மிரும்மா நாம ஒரு வாஷிங் மிசின் வாங்குறோம்னு வை. அது ஒரு மூனு வருஷம் உழைக்கும்னு கேரண்டி குடுக்கறாங்க! ஆனா நெஜமா அது மூனு வருஷம் உழைக்குதா? பாதியிலேயே புட்டுக்கறதும் உண்டு, பல சமயம் மூனு வருஷத்துக்கு மேலயும் உழைக்கறதும் உண்டு. அது மாதிரி வாழ்நாள் முழுக்க உனக்கு நான் எனக்கு நீன்னு கேரண்டி குடுத்துதான் அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து கல்யாண வாழ்க்கையில நுழையறாங்க! ஆனா அது வாழ்நாள் முழுக்க நிக்கிதா? பலர் உயிர் போகற வரை சேர்ந்து இருக்காங்க, சிலர் பாதியில பிரிஞ்சிடறாங்க! இதெல்லாம் வாழ போறவங்க கையிலயும் அந்த கடவுள் கையிலயும் தான் இருக்குடா. வாழ்க்கைய அது போக்குல வாழ பாருடா! ஐயோ இவர் விட்டுட்டுப் போயிருவாறோ, பிடிக்காம போயிருமோன்னு பயத்துல வாழ்ந்தா சந்தோஷம் எங்கிருந்து வரும்?”

“ரதி பேபி, என்னம்மா பேசறீங்க நீங்க!”

“வாழ்க்கை கத்துக் குடுத்த பாடம்டி! ஆசைப்பட்டு வீட்ட எதிர்த்துட்டு உங்கப்பாவ கல்யாணம் செஞ்சேன்! அவர் கூட வாழற வரைக்கும் நெஞ்சு நிறைய காதலோட தான் வாழ்ந்தேன். அவர் ஊருக்குப் போயிட்டாலும், தோ இப்ப வரைக்கும் அவர நினைச்சே வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கேன்! மொழி புரியாம, அவர் கலாச்சாரம் தெரியாம, பழக்க வழக்கம் அறியாம காதல மட்டுமே அடிப்படையாக் கொண்டு வாழ்ந்துட்டேன். மனசுல காதல் இருக்கறப்போ ஜாதி, மதம், அந்தஸ்த்து இப்படி மத்த விஷயமெல்லாம் காணாப் போயிரும்டி. மாப்பிள்ளைக்கு உன் மேல அவ்வளவு பாசம்டி. உன்னை கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பாரு மிரு!” என்றவர் தொண்டையை செறுமிக் கொண்டு,

“உனக்கு ஒரு நல்லது நடக்கறப்போ உங்கப்பா பக்கத்துல இல்லையேன்னு நினைக்கறப்போத்தான் எனக்கு கவலையா இருக்குடி” என சொல்லி கண் கலங்கினார் ரதி.

மிரு தாவி தன் அம்மாவை அணைத்துக் கொண்டாள். முன்பு பணபலம் இல்லை, அதனால் தனது தகப்பனை தேட வழியில்லை. திருமணம் எனவும், தந்தை ஸ்தானத்தில் அவர் இருந்தால் நன்றாக இருக்குமே என இவள் ஆசைப்பட உடனே தேட முனைந்தான் குரு. லூவிஸ் தனது ஊருக்குப் போனதுமே இன்னொரு திருமணம் முடித்துக் கொண்டதாகவும், பிள்ளை குட்டிகளுடன் நன்றாகவே வாழ்வதாகவும் தகவல் கிடைத்தது. அழைத்து வரவா என இவன் கேட்க, வேண்டவே வேண்டாம் என இவள் மறுத்துவிட்டாள். ரதியிடம் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என சொல்லிவிட்டாள் மிரு.

பல கஸ்டங்களை அனுபவித்தவர், கணவர் வேறு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார் என கேட்டு ஏன் மனம் வாட வேண்டும்! அப்பாவின் காதல் நிஜமோ இல்லையோ தன் அம்மாவின் காதல் நிஜமல்லவா! வாழும் வரை என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் எனும் எண்ணத்திலாவது இருக்கட்டும் என விட்டு விட்டாள் மகள். ரதியைப் போல இன்னும் பல நூறு பெண்கள் இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

“எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீதான்மா! என் கல்யாணத்துக்கு உன் ஆசிர்வாதம் மட்டும் போதும் எனக்கு! அவர நினைச்சு அழுதுட்டு இருக்காதம்மா! சாப்பிடறப்போ விக்கிக்கப் போகுது எங்கப்பாவுக்கு. உன் சாப்பாட்டுக் கொடுமையில தப்பிச்சு அவர் அங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டுட்டு இருப்பாரு. அதுக் கூட பொறுக்காம இப்படி விக்கிக்க வைக்கறியே, இது நியாயமா ரதி பேபி?” என வம்பிழுத்தாள் தன் அன்னையை.

“அடியே! நான் ருசியா பொங்கிப் போடாமத்தான் இப்படி வஞ்சகமில்லாம வளந்துருக்கியா?” சிலிர்த்துக் கொண்டார் ரதி.

கண்ணீர் போய் சிரிப்பு எட்டிப் பார்க்கும் தன் அன்னையின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள் மிரு. பின்பே யாரோ தன்னைப் பார்ப்பது போல இருக்கவும் ரூம் கதவை நோக்கினாள். அங்கே குரு யோசனையுடன் அவளைப் பார்த்தப்படி நின்றிருந்தான். இவள் கவனிக்கவும் உள்ளே வந்தவன் ரதியிடம்,

“நைட் வெளிய சாப்பிடப் போலாமா ரதிம்மா?” என கேட்டான்.

அவரை வீட்டுக்கு அழைத்து வந்ததும் முதல் வேலையாக ஒரு வீல்சேர் வாங்கிக் கொடுத்தான் குரு. வீட்டில் ஊன்றுகோலை உபயோகித்தாலும், வெளி இடங்கள் செல்ல வீல்சேரே வசதி என சொன்னவன், வெளியே போகும் போது அதில் அமர்த்தி அவரையும் அழைத்து செல்வான். வீல்சேர் கொஞ்சம் விலை அதிகமாக இருக்கவும், தாங்கள் வாழ்ந்த பழைய வாழ்க்கையில், மகளிடம் ஊன்றுகோலே தனக்கு வசதி, வீல்சேர் எல்லாம் எதற்கு என மறுத்துவிட்டார். மிருவிடம் மறுக்க முடிந்தவரால் மருமகனிடம் வாசிக்க முடியவில்லை. இப்பொழுதெல்லாம் சந்தோஷமாகவே அதில் அமர்ந்து வெளியிடங்களுக்கு தன் குடும்பத்துடன் செல்கிறார் ரதி.

“மிருவ கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க தம்பி. நான் ரொட்டி சாப்பிட்டு சீக்கிரம் படுக்கறேன். கொஞ்சம் களைப்பா இருக்கு” என மறுத்துவிட்டார். கணேவும் அடிக்கடி லீவ் போட்டதால் படிக்க பாடங்கள் மலை போல் குவிந்துக் கிடக்கின்றன என சொல்லி வர மறுத்து விட்டான்.

எனவே இவர்கள் இருவர் மட்டும் டின்னருக்கு கிளம்பினார்கள்.

காரை மிருவே ஓட்டினாள்.

“நீங்க சாப்பிடற இலைதலைக்கு எதுக்கு வெளிய போகனும்? வீட்டுல நானே செஞ்சு குடுக்க மாட்டேனா பாஸ்?”

“நானே கூட செஞ்சு சாப்பிட்டுக்குவேன் மிரு! ஆனா எனக்கு உன் கூட டேட்டிங் போகனும் மாதிரி இருக்கே! கல்யாணம் ஆகிப் போனா அதுல என்ன கிக்! நாம ரெண்டு பேரும் இப்படி வெளிய போனதே இல்ல மிருது. எனக்கு மட்டும் என் காதலிய சினிமா, பார்க், பீச், ரெஸ்டாரண்ட்னு கூட்டிட்டு சுத்தனும்னு ஆசை இருக்காதா?”

“டேட்டிங் போறவர் தான் எங்கம்மாவையும் தம்பியையும் கூட கூப்டீங்களா?”

“வீட்டுல அவங்களும் இருக்கறப்போ எப்படி கூப்பிடாம இருக்கறது மிரு! அது மேனர்ஸ் இல்ல. அவங்க ரெண்டு பேரும் வந்திருந்தா டேட்டிங், பேமிலிட்டிங் ஆகிருக்கும். நேரா பார்த்து சைட் அடிக்காம ஓரக்கண்ணால உன்னை சைட் அடிச்சிருப்பேன்! அவ்ளோதான் வித்தியாசம்” என புன்னகைத்தான் குரு.

கியர் பிடிக்கும் இடது கையால் குருவின் கைப்பற்றி தன் இதழில் அழுத்திக் கொண்டவள்,

“மஐ மலவ் மயூ மகு மரு!” என ஆசையாக சொன்னாள்.

அப்படியே அவளின் கையை இழுத்து மீசை உராய முத்தமிட்டவன்,

“மஐ மலவ் மயூ மமி மரு!” என காதலுடன் சொன்னான். அதன் பிறகு அவள் கையைப் பற்றிய படியே வந்தான். ரெஸ்டாரன்ட் இருக்கும் மாலை அடைந்ததும்,

“கையை விடுங்க பாஸ்! ரிவர்ஸ் கியர் போடனும்” என்றாள் மிரு.

“நம்ம லவ்வுக்கு ரிவர்ஸ் கியரே கிடையாது. படிப்படியா கியர் போட்டு என் காதல் வட்டத்துக்குள்ள வந்துட்ட. இனிமே நோ ரிவர்ஸ்! நாலாவது கியர் மட்டும்தான். விடு நான் போடறேன்” என்றவன் அவள் கையை விலக்கி அவனே ரிவர்ஸ் கியர் போட்டான். இருவரும் சிரிப்புடன் பார்க் செய்து விட்டு மாலின் உள்ளே நுழைந்தனர்.

கேபிள் கார் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான் மிருவை. அது ஒரு வெஸ்டர்ன் உணவு கடையாகும். உட்காரும் இடம் கூட கேபிள் கார் போல பெட்டி பெட்டியாக இருக்கும். மிரு கிண்டல் அடித்தது போலவே குரு சாலட்தான் ஆர்டர் செய்தான். அதனோடு மஷ்ரூம் சூப். இவளோ கிரில் சிக்கன் ஆர்டர் செய்தாள். உணவு வரும் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“மிரு”

“யெஸ் பாஸ்”

“இன்னும் என்னை பாஸ்னு தான் கூப்பிடனுமா மிரும்மா?”

“அது என்னமோ பாஸ்னு கூப்பிடத்தான் பிடிக்குது. இந்த மிருவுக்கு பாஸ் நீங்க! மை ஹார்ட், சோல், பாடி எல்லாத்துக்கும். சோ பாஸ்னுதான் கூப்பிடுவேன். இப்பவும் எப்பவும்”

அவள் சொன்னதை கேட்டு புன்னகை முகமாகிப் போனான் குரு. எதிர்புறம் அமர்ந்திருந்தவன், கை நீட்டி அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

“என் மேல எப்போ மிரு காதல் வந்துச்சு?”

“யாருக்குத் தெரியும்!”

“என்னடி பதில் இது?” பட்டென கையை விட்டு விட்டு முறுக்கிக் கொண்டான். இவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இவளாக எட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“இதுக்கு பதில் பாட்டா பாடவா பாஸ்?

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது

விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது

முழு காதல் என்று வந்தது தெரியாதே

அது தெரியாதே!” என மெல்லிய குரலில் பாடியவள் வெட்கப் புன்னகை சிந்தினாள்.

“ஓ மை குட்நஸ்!”

“என்னாச்சு பாஸ்”

“இன்னும் டூ வீக்ஸ் இருக்கு மிரு நம்ம கல்யாணத்துக்கு. நீ இப்படி வெட்கம்லாம் பட்டீனா ஹனிமூன் போய்ட்டு வந்து கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லிருவேன்”

“அதுவா வெக்கம் வருது நான் என்ன செய்ய?”

“ஒன்னும் செய்ய வேணா! நம்ம பர்ஸ்ட் நைட்கு இப்படியே வெட்க வெட்கமாப்படு! சீக்கிரமா மில்க் குடிக்க மினி மிரு வந்துரும்”

“போங்க பாஸ்! அதுவே ஏதோ ஒரு சமயம்தான் வருது. இப்படி நீங்க கிண்டல் அடிச்சா வராமலே போயிரும் வெட்கம்”

“உனக்கு வெட்கம் வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் மிரு. வரலைனா ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என அந்த ரொம்பவை அழுத்தி சொல்லிக் கண் சிமிட்டினான் குரு.

“இப்போ நான் என் காதல பத்தி சொல்லனுமா வேணாமா?”

“சரி, சரி சொல்லு” என சிரித்த முகமாக விட்டுக் கொடுத்தான்.

“ஆரம்பத்துல உங்க மேல செம்ம கடுப்புத்தான்! எதுக்கெடுத்தாலும் மரியாதை பத்தி கிளாஸ் எடுக்கறது, மிரட்டறது, வம்பிழுக்கறது, டபுள் மீனிங்ல பேசறதுன்னு கொலை வெறி வரும் உங்க மேல! போக போக அதை எல்லாம் எதிர்ப்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். உங்களோட மார்னிங் அலாரம் சர்விஸ் வந்தாதான் எனக்கு புத்துணர்ச்சியாகவே இருக்கும். எவ்வளவுதான் என்னை வம்பிழுத்தாலும் முதல் தடவைப் பார்த்த மாதிரி, என்னைக் கழுத்துக்கு கீழ நீங்க பார்த்ததே இல்ல. உங்க கூட இருக்கறப்போ ஷால் எங்கடா, முன்னுக்கு இழுத்து மூடனுமேன்னு தோணனுது இல்ல. உங்க கிட்ட வார்த்தைக்கு வார்த்தை வம்பு பண்ணறப்போ அவ்ளோ நல்லா இருக்கும். நீங்க மூவிக்கு கேர்ள் ப்ரேண்ட் கூட வந்தப்போ கூட நான் சிரிச்ச முகமா இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள்ள சுருக்குன்னு வலிச்சது. உங்கள ட்ரோப் பண்ணிட்டுப் போறப்போ எல்லாம் மனசுல திடீர்னு ஒரு வெறுமை வந்த மாதிரி இருக்கும். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியாமலே சுத்திட்டு இருந்தேன்.”

ஐஸ் வாட்டரை எடுத்து அருந்தியவள்,

“நீங்க லவ் சொன்னப் போதுதான், நானும் உங்கள லவ் பண்ணறேன்னு உணர்ந்தேன்! உணர்ந்த விஷயம் எனக்கு சந்தோஷத்தக் குடுக்கல பாஸ்! மனசுல பாராங்கல்ல வச்ச மாதிரி ரொம்ப பாரமா இருந்துச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என் கேர்ள்பிரண்டா இருக்கனும்னா கூட ஒரு தகுதி வேணும்னு ஆரம்பத்துல சொன்னீங்களே! அந்த தகுதின்ற சொல் அப்போ என்னைத் தாக்கலைனாலும், நீங்க லவ் சொன்னப்போ கண் முன்ன வந்து நின்னுருச்சு! நமக்குள்ள இதெல்லாம் சரி வராதுன்னு மனச கட்டுப்படுத்திக்கிட்டேன் பாஸ். ஆனாலும் ரொம்ப நாள் உங்கள தவிக்க வைக்க முடியலை. நானும் சேர்ந்தல்லவா தவிச்சுக் கிடந்தேன்” குரலில் வலியோடு பேசியவளை பார்க்க முடியாமல், எழுந்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான் குரு.

மிருவின் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் சற்று நேரம் அமைதியாகவே இருந்தான்.

“மிருது! நீ ரதிம்மா கிட்ட பேசிட்டு இருந்தத நான் கேட்டேன்! என் காதல எத்தனையோ விதமா சொல்லியும் ஏன் இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலன்னு மனசு ரொம்ப கவலையா இருந்துச்சு. கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல என் நேசம் காணா போயிருமோன்னு உனக்குள்ள இருக்கற பயம் எதனாலன்னு ஒரே யோசனையா இருந்துச்சு. இப்போ நீ பேசவும் தான், நான் சொன்ன தகுதின்ற ஒரு வார்த்தை உன்னை எந்தளவு பாதிச்சிருக்குன்னுப் புரியுது மிருது” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே உணவு வந்தது.

“முதல்ல சாப்பிடும்மா! அப்புறமா என் சைட் எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லறேன்” என்றவன், உணவை அவள் புறம் நகர்த்தினான். அமைதியாகவே சாப்பிட்டார்கள் இருவரும். இவளது கிரில் சிக்கனை அவனுக்கு கொஞ்சம் வைத்துக் கொடுத்தாள் மிரு.

“கிரில் பண்ணதுதான், பொரிக்கல! சோ கலோரி குறைவுதான். சாப்பிடுங்க பாஸ்” என கொடுத்தாள். பொரித்து எண்ணெயாக இருக்கும் சிக்கான் ச்சோப்பை விரும்பி சாப்பிடுபவள், அவனுக்காக கிரில் சிக்கனுக்கு மாறி இருந்தாள். ஹெல்த்தியாக உண்டு அவனோடு நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் முடிவுக்கு வந்திருந்தாள் குருவின் மிரு. சாப்பாட்டை இவள் குறைத்தால் 69 கலோரியையும் 91 கலோரியையும் குறைப்பதைத் தான் அவன் பார்த்துக் கொள்வானே.

சாப்பிட்டு பில்லை செட்டில் செய்து விட்டு இருவரும் மாலில் இருந்து வெளியே வந்தார்கள். அங்கிருந்த செயற்கை நீறுற்று முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள் இருவரும். மிருவின் கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டவன், மெல்ல பேச ஆரம்பித்தான்.

“கிரேப்ல நீ என்னை முதன் முதலா ஏத்துனப்போ, யாரு எவருன்னு கூட நான் கண்டுக்கல மிரு. நான் பாட்டுக்கு என் ஈமேயில் செக் பண்ணிட்டு வந்தேன். போன் பேச நீ அனுமதி கேட்டப்போ, சரி சொல்லிட்டு நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்தேன். நீ பேசனது எல்லாம் கேட்டுச்சு. வேலைக்கு ட்ரை செய்யற, டீ லேடி வேலையா இருந்தாலும் பரவாயில்லன்னு சொன்னப்போ பாவமா இருந்தது. அதோட கம்ப்யூட்டர் லைன் தான் எடுத்துப் படிச்சிருக்கன்னு தெரிஞ்சப்போ, சரி வேலை போட்டுக் குடுக்கலாம்னு தோணுச்சு. அந்த நினைப்பு வந்தப்பலாம் நான் உன்னைப் பார்க்கவே இல்லை மிரு”

“பார்க்காமலே உதவி செய்ய நினைச்சீங்களா?” ஆச்சரியமாக கேட்டாள் மிரு.

“யெஸ்! இந்த குருவோட மனசுலயும் கொஞ்சமே கொஞ்சம் ஈரம் இருக்கு மிரு” புன்னகைத்தான் அவன்.

“அப்புறம்?”

“காசு குடுக்கறப்போத்தான் உன் முகத்தப் பார்த்தேன். வாவ் வாட் அ எக்ஸோடிக் பியூட்டின்னு திகைச்சுட்டேன்! நீ சார் சார்னு அவசரமா கையை நீட்டவும் கையைப் பார்க்க குனிஞ்சவன் வாவ் வாட் அ டிவைன் பியூட்டின்னு மலைச்சுப் போயிட்டேன்”

அவன் கையிலேயே ஒன்று போட்டாள் மிரு.

“யூ சீ மிரு! அப்படி ஸ்டேர் பண்ணது இண்டீசண்ட் தான். வெரி சாரி! ஒரு பைவ் செகண்ட் பார்த்துருப்பனா? நான் செய்யறது தப்புன்னு நானே பார்வைய விலக்கிருப்பேன்! அதுக்குள்ள நீ கண்டபடி திட்டிட்ட. என்னை யாரும் அப்படிலாம் திட்டனது இல்ல தெரியுமா! கபோதி அப்படி இப்படின்னு. சட்டுன்னு கோபம் வந்திருச்சு எனக்கு. அவ்ளோ கோபத்துலயும் கார்ட் குடுத்துட்டுத்தான் வந்தேன். ஏன் குடுத்தேன்னு எனக்கேத் தெரியல! உன் மேல ஆரம்பத்துல வந்த பரிதாபமா, இல்ல அதுக்கு அப்புறம் வந்த ஒரு மயக்கமா என்னன்னு தெரியல. ரெண்டு மூனு நாளா மனசுக்குள்ள உன்னைத் திட்டிட்டே இருந்தேன். என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்டாளேன்னு”

“உங்களையாச்சும் திட்டிட்டு விட்டேன்! சில பேர செருப்பக் கழட்டி அடிச்சிருக்கேன்! அந்த விஷயத்துல எனக்கு அவ்ளோ கோபம் வரும் பாஸ்”

“நீ வேலைக்கு வந்தப்போ எனக்கு ரொம்ப ஹேப்பியா ஆகிருச்சு மிரு! என்னை கபோதின்னு சொன்ன உன்ன வம்பிழுக்கனும், எதிர்த்துப் பேச முடியாத நிலையில வச்சு வாட்டனும்லாம் நினைச்சேன். ஆனா முடியல மிரு. அப்படியே உன் துறு துறு குணத்துல என்னை கட்டிப் போட்டுட்ட! தகுதி பத்திப் பேசனது கூட என்னை நீ ஒரு பெர்வர்ட் மாதிரியே ட்ரீட் பண்ணதுனாலத்தான் மிரு. என்னமோ உன்னை கையப் பிடிச்சு இழுத்துருவேனோன்ற மாதிரி பார்க்கறதும், மறுபடியும் கபோதி வோர்ட் யூஸ் பண்ணதும் தான் என் கோபத்துக்கு காரணம். அதான் உன் மனச கஸ்டப்படுத்தனும்னு தகுதி பத்திப் பேசனேன். நீ என்னன்னா சிரிச்சுட்டே என்னை முட்டாளாக்கிட்டுப் போயிட்ட!”

“நீங்க சொன்ன மாதிரி எங்க என் கையைப் பிடிச்சு இழுத்துருவீங்களோன்னு பயம்தான் பாஸ் காரணம். நீங்க தகுதி பத்தி பேசவும் அப்பாடான்னு தான் இருந்துச்சு”

“உன் கூட பழக பழக என்னைக் கிறுக்காகிட்ட மிரு. நீ பக்கத்துலயே வேணும்னு என் மனசு முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. நீ சிரிக்கறத கேட்டுட்டே இருக்கனும்னு தோணும். அந்த மன அழுத்தத்த என்னால தாங்கிக்க முடியல. என்னை இப்படி ஆட்டி வைக்கறியேன்னு ஒரு பக்கம் உன் மேல கோபமா வரும். சரி கொஞ்ச நாள் பழகிப் பார்க்கலாம். இந்த பழமும் புளிக்கும்னு தோணிரும்னு தான் ட்ரைவரா கூப்பிட்டேன். ஆனா அது எனக்கே நான் வச்சிக்கிட்ட பெரிய சோதனையா ஆகிருச்சு. உன்னோட நெருக்கம், பேபி பவுடர் வாசம், நீ ரேடியோவோட சேர்ந்து பாடற அழகு, உன்னோட சிரிப்புன்னு அவஸ்தையா நான் கழிச்ச நாட்கள் அவை. அப்போத்தான் சிங்கப்பூர் ட்ரீப் வந்தது. அங்கத்தான் சிந்தியாவ சந்திச்சேன்”

“சிந்தியா?”

“ஆமா சிந்தியா! அம்மா எனக்குப் பார்த்த பொண்ணு! செமினார் முடிஞ்சு போறப்போ என்னை சந்திக்கனும்னே சிங்கப்பூர் வந்தா”

“ஓஹோ!”

“ரெண்டு பேரும் சந்திச்சுப் பேசனோம்! நான் நேராவே சொல்லிட்டேன் எனக்கு இந்தக் கல்யாணத்துல இஸ்டம் இல்ல! ஐ லவ் சம்வான் அப்படின்னு! சிந்தியா வாஸ் சோ அன்டேர்ஸ்டேண்டிங்! பெஸ்ட் அப் லக்னு சொல்லிட்டு போய்ட்டா! எனக்குத்தான் அதுக்கு அப்புறம் உன் மேல சரியான கோபம்”

“இது என்னடா வம்பா போச்சு! நானா சிங்கப்பூர் போக சொன்னேன்? நானா சிந்தியாவ பார்க்க சொன்னேன்? நானா வேணான்னு சொல்ல சொன்னேன்? எல்லாத்தையும் நீங்க செஞ்சுட்டு என் மேல என்ன இதுக்கு கோபம் வரனும்?”

“என்னை, இந்த குருவ ஆட்டி வைக்கறியேன்னுதான் கோபம். நீ எப்படி என்னை கன்ட்ரோல் பண்ணலாம்னு கோபம்! எங்கம்மா பார்த்த பொண்ண உன்னாலதானே ரிஜேக்ட் பண்ணிட்டேன்னு கோபம். சுதந்திரமா இருந்தவன கட்டுக்குள்ள கொண்டு வர பார்க்கறேன்னு கோபம். இதுல எதுலயும் உன் பங்கு இல்ல மிரு! ஆனா எனக்குத்தான் மிரு பைத்தியம் பிடிச்சிருந்துச்சே! பைத்தியக்காரனால எப்படி ஸ்ட்ரேட்டா திங்க் பண்ண முடியும்?” என அவளையே கேட்டான் குரு. இவள் ஆவேன பார்த்திருந்தாள்.

“நீ என் லைப்ப காதல், கல்யாணம் எதுவும் இல்லாத போதே டிக்டேட் பண்ணற ஃபீல். அதான் ஒதுங்கிப் போனேன். கிட்ட இருந்தா உன் ப்ரேசென்ஸ்னால கட்டிப் போட்ட, ஒதுங்கிப் போனா உன் நினைவுகளால கட்டிப் போட்ட! என்னால முடியல மிரு! அதான் ஜாதி, தகுதி, அந்தஸ்த்து எல்லாத்தையும் உதறிட்டு என் மிரு மட்டும் போதும்னு முடிவு எடுத்துட்டேன். அதுக்கு அப்புறம் தான் உடம்பும் மனசும் லைட்டான மாதிரி ஃபீல் ஆச்சு. அப்பா இறந்ததுல இருந்து எனக்குள்ள ஒரு இறுக்கம்! வீட்டுக்கு மூத்தவன்! அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் என் பொறுப்பு! அவங்களுக்காக உழைக்கனும்! அப்படின்னு சின்ன வயசுலயே பொறுப்புணர்ச்சி வந்துருச்சு. உன் கூட பழகனதுக்கு அப்புறம் தான் என்னோட இறுக்கம் தளர்ந்த உணர்வு மிரு. யூ ஆர் மை ஹெப்பி பில்! மை ஏஞ்சல்! என்னோட காதல உன் கிட்ட சொல்லத்தான் மலாக்கா ட்ரீப் அரேஞ் பண்ணேன். தென் தெ ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி”

குருவை நெருங்கி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் மிரு.

“அழக பார்த்து காதலிச்சாத்தான், அது குறையறப்போ காதலும் குறையும் மிரு. ஆரம்பத்துல உன் மேல ஈர்ப்பு இருந்தாலும், காதல்ல விழ வச்சது உன்னோட அழகான குணம்தான் மிருது. பெயருக்கு ஏத்த மாதிரியே மிருதுவான குணம் உனக்கு. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் யூ கிவ் யுவர் ப்ரீசியஸ் ஹார்ட் டூ மீ! அத நான் சாகிற வரைக்கும் போற்றி எனக்குள்ளயே வச்சிப்பேன் மிருதும்மா!” பேசிக் கொண்டே மெல்ல அவள் இடுப்பை அழுத்திக் கொடுத்தான்.

“என்ன பாஸ் பண்ணுறீங்க?”

“ரொம்ப நடந்துட்டல்ல! வலிக்குமே இடுப்பு அதான் பிடிச்சு விடறேன்.”

கண்கள் கலங்கியது அவளுக்கு.

“பிடிச்சு விடறது, அழுத்தி விடறது எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு செய்யலாம் பாஸ்! இப்பக் கைய எடுங்க”

“ஏன் மிரு, நீ இப்போ பேசனதுல எதாச்சும் ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ் இருக்கா? பிடிச்சு, அழுத்தின்னு?” என சிரிக்காமல் கேட்டான் குரு.

“ங்கொய்யால! இனிமே எல்லாமே ஸ்ட்ரேய்ட் பேச்சுதான். ரீடிங் பிட்வீன் தெ லைன் பேசனீங்க, ஸ்லீப்பிங் பிட்வீன் தெ பில்லோவ்ஸ்ன்னு சொல்லிருவேன். பீ கேர்பூல்!” என மிரட்டியவளை சிரிப்புடன் பார்த்திருந்தான் குரு.

(தவிப்பு அடங்கும்)

(நெக்ஸ்ட் எபிலாக்)

error: Content is protected !!