UKIK – 18

UKIK – 18

18

ஹாலில் நுழைந்த அந்த வாலிபன் மீதே கவனத்தை வைத்த சந்த்ருவிடம், “இன்னும் கொஞ்ச நாளுல கொஞ்ச நேரத்துல..ம்… எனக்குத் தோணும் போது..” என்றான் ப்ளாக்..

“கண்டிப்பா…ஐ அம் வெய்ட்டிங்..” என்றவன் அழைப்பைத் துண்டித்து அவ்வறையில் தனக்குத் தேவையானவற்றை எடுத்து கொண்டு தனது அறைக்கு வந்தான்..

கீழே ஒருவன் தன்னைத் தேடி வந்திருப்பதாய் தனசேகர் போன் செய்ய, இரவு உடையில் கீழறங்கியவன், “யார் நீங்க..?” முன்னால் இருக்கும் இருக்கையில் அமரும்படி செய்கை செய்து கேட்டான்…

“சார், ஆனந்த் சார் அனுப்பி வச்சாரு..” எனவும்,

“ம்…” என ஆமோதிப்பாய் தலையசைத்தவன் ஜார்ஜின் வீட்டு முகவரியைக் கொடுத்தனுப்பினான்…

திரும்பி தனது அறைக்குள் வந்த சந்த்ரு, தானெடுத்த வந்த பைலில் பார்வையை ஓட்ட, எதுவோ புரிவது பிடிபடுவது போல இருக்க,

ஆனந்தின் எண்ணுக்கு அழைத்தவன், “நீங்க ரெண்டு பேரும் அங்கயே இருங்க..நான் கிளம்பி வரேன்..” என்றவன் மீண்டும் அவ்வறைக்கு ஓடினான்..

தான் இதுவரையிலும் திரட்டிய தகவல் மற்றும் ட்ராக் செய்தவற்றை ஒரு பென் ட்ரைவில் ஏற்றியவன், உடை கூட மாற்றத் தோன்றாமல் மாலினி அழைப்பதைக் கூட கணக்கில் கொள்ளாமல் காரை எடுத்து கொண்டு விரைந்தான்..

சாஜிக், சஞ்சீவிடம் ஒவ்வொன்றாய் இதுவரை தான் செய்ததை விளக்கி கூற, அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்த ஆனந்த் இவர்களைக் கவனித்து கொண்டிருந்தான்..

உள்ளே வேகமாய் வந்த சந்த்ரு, “சாஜி, இங்க வா..” என்றழைக்க, அவன் வருவதற்குள் அங்கிருந்த கணினியில் தான் கொண்டு வந்திருக்கும் பென் ட்ரைவரை மாட்டி, பைலை ஓபன் செய்தான்..

சாஜிக்குடன் சஞ்சீவ் ஆனந்த் என இருவருமே வந்துவிட, “எல்லோரும் இங்க பாருங்க..” என்றான் மேப்பையும் அவன் குறித்து வைத்துள்ள சிவப்பு நிற இடங்களையும் காட்டி..

“என்ன சார்..?” சாஜிக் கேட்க,

“சாஜி, நாம இதுவரைக்கும் அவன் கால் பண்ணுன சில லொக்கேஷன் ட்ராக் பண்ணுனோம் இல்லையா..அதெல்லாம் வச்சி ஏரியா கண்டுபிடிச்சா இந்தக் கன்ட்ரில வேற வேற இடம் காட்டுது…”

“சார், அவன் ஐபி அட்ரெஸ் மார்பிங் பண்ணிருப்பான் சோ எக்ஸாக்ட் லொக்கேஷன் காட்டாது..” சாஜிக் கூற,

“எக்ஸாக்ட் லொக்கேஷன் தான் காட்டாது பட் கன்ட்ரி காட்டும்..” சஞ்சீவ் முந்திக் கொண்டு பதிலளிக்க, “

“எஸ்..யூ ஆர் கரெக்ட் சஞ்சீவ்..” என்றவன் தொடரும் முன்பே,

“கன்ட்ரி வச்சி ஒண்ணும் பண்ண முடியாது..” என்ற சாஜிக், ‘இன்னைக்கு வந்துட்டு என்னை முந்தப் பார்க்குறீயா..’ என சஞ்சீவை முறைத்தான்…

அதைக் கவனியாத சஞ்சீவ், “இல்ல, அந்த அந்த கன்ட்ரிக்குன்னு ஒரு சர்வர் இருக்கும்…இப்போ அண்ணா சொல்ற கன்ட்ரி ஹைலி செக்யூர்டு கண்டிப்பா அவனால கன்ட்ரி அவுட் பான்ட் மார்பிங் தான் பண்ண முடியும்…”

“அதுக்கு சான்ஸ் இருக்கா..?” சந்த்ரு கேட்க

“அந்த சான்ஸ் ரொம்ப கம்மி தான்..” எனப் பதிலளித்த சஞ்சீவ் யோசிக்கத் துவங்க,

“சார், நாம இப்போ நம்ம ஐபி அட்ரெஸ் மார்பிங் பண்ணுனா அதர் என்ட்டுக்கு தான் மார்பிங் ஆகி போகுமே தவிர்த்து நம்ம கன்ட்ரி சர்வர்ல நம்ம நம்பர் தான ஸ்டோர் ஆகும்..” என்ற சாஜிக்கின் பதிலுக்கு ஆமென சஞ்சீவ் சொல்ல,

“அப்போ அவன் ஐபி லொக்கேஷன் மார்பிங் பண்ணுனாலும் அவனோட ஒரிஜினல் ஐடி தான அந்த சர்வர்ல ஸ்டோர் ஆகும்…அப்போ அந்தக் கன்ட்ரி சர்வர்ல அவன் யாருன்னு தெரிஞ்சுக்கலாமே..” என்றான்.

“கன்ட்ரி சர்வர் ஹேக் பண்ணுறது அவ்வளவு ஈஸி இல்லையே..” என்ற சந்த்ரு தாடியில் ஆள்காட்டி விரல் வைத்து சிந்திக்க,

“கன்ட்ரி சர்வர் தான கஷ்டம் ஆனா அவன் கால் பண்ண அப்ளிக்கேஷன் எதுன்னு கண்டுபிடிச்சா அதை ஹேக் பண்ணிடலாம் தான..” என்றான் சஞ்சீவ்..

“எஸ்…யூ ஆர் கரெக்ட் மேன்…எனக்குத் தெரிஞ்சு இப்போதைக்கு ரொம்ப அதிகமா நெட் கால் பண்ற ஆப் ஹேக் பண்ணி பார்க்கலாம்…லைக் வைபர், டியோ அந்த மாதிரி..”

“அவன் பெரிய ஹேக்கர்னு நீ சொல்ற அப்போ எப்படி அவன் எல்லோரும் யூஸ் பண்ற ஆப் யூஸ் பண்ணிருப்பான்..ஏன் அவனால அதை ஹேக் பண்ணி சேன்ச் பண்ண முடியாதா..?” சாஜிக் கேட்க,

“சாஜி, அவன் அந்த சர்வரை ஹேக் பண்ணி ஏதாச்சும் மாடிபிக்கேஷன் ட்ரை பண்ணுனா அது அந்த கன்ட்ரி செக்யூரிட்டி ப்ராளம் இஷ்யூ கிரியேட் பண்ணும் அவனும் ஈஸியா மாட்டிக்குவான்..சோ கண்டிப்பா அவன் ட்ரை பண்ண மாட்டான்…”என்றான்

“சரி, இப்போ என்ன பண்ணலாம்..?” என சந்த்ரு இறுதியாய் கேட்க,

“ம்…ஃபர்ஸ்ட் அவன் கால் பண்ணுன ட்ராக்கிங் ஐடிலாம் கொடுங்க நான் ட்ரை பண்ணுறேன்..” என்றவன் அங்கிருந்த கணினியில் அமர்ந்து கொண்டு,

“சாஜிக் உங்களுக்கு கமென்ட் கோட் தெரியும் தான..அப்போ வாங்க..” என்றவன் அவனையும் அழைத்துக் கொண்டு மூழ்கி விட்டான்…

சந்த்ரு அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்க, இடையில் ஜார்ஜின் குடும்பத்தை அழைத்துக் கொண்டதாய் அந்த வாலிபன் போன் செய்து ஆனந்துக்கு தகவல் கொடுத்திருந்தான்..

“பாஸ்,ஜார்ஜ் சார் பேமிலியை கெஸ்ட் ஹவுஸ் கூட்டி வந்தாச்சு..” என்ற ஆன்ந்த் கொடுத்த தகவலுக்கு தலையாட்டி கணினியின் திரையிலே பார்வை பதித்தான்..

***

இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்த கனிக்கு முன்பே அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்..

“மம்மி..” என அரசி எழுந்து குதிக்க, அப்போது தான் அனைவரும் திரும்பி பார்த்தனர்..

அரசியிடம் சிரித்தவள், கை கழுவி சாப்பிட அமர்ந்துவிட்டாள்..

சாப்பிடும் போது யாரும் பேசவில்லை, அனைவரும் திருப்தியாய் சாப்பிட்டு முடித்ததும், இதற்காகவே காத்திருந்தது போல,
“பேபி, நாம உன் அம்மா ரூம்க்கு போகலாமா..?” என பரத் கேட்டான்…

பரத் கேட்டதும், கனியின் முகத்தைப் பார்த்தவள், “மம்மி, அங்க போகக் கூடாது சொல்லிருக்காங்க..” என்க,
இப்போது கனி இறுக்கமாய் அமர்ந்திருந்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை…

“வா கனி..” என்ற பரத்திடம்,

“நீ போய் அவா போட்டோ எடுத்துட்டு வா…நான் அங்க வரல ப்ளீஸ்..” என்றாள் மேஜையில் தலை வைத்து…

நான்கு வருடமாய் வேலை செய்யும் அந்த அம்மா சுவர் ஓரமாய் நிற்க, “வந்து உட்காருங்க ஆன்ட்டி..” என தேவி அழைத்து உட்கார வைத்தது அனுஷிற்கு பிடிக்கவில்லை..

“குடும்ப விஷயம் பேசும் போது..இவங்க எதுக்கு..?” என ஆங்கிலத்தில் அனுஷ் சிடுசிடுக்க,

“அங்களும் நம்ம குடும்பம் தான்..” எனத் திருப்பி பதிலளித்தது தேவி தான்…

இந்த ஒரு வருடத்தில் தேவிக்கு ஆங்கிலத்தை பேசக் கற்று கொடுத்திருந்தான்..

‘நீயே எங்க குடும்பம் இல்ல’ அவள் கொடுத்த பதிலுக்கு திருப்பி கொடுக்க வாய் பரபரத்தாலும் அமைதி காத்தான்..

மேலே இருந்து ஆல்பத்தை எடுத்து வந்த பரத்திற்கு தேவியின் பதில் சின்ன முறுவலைக் கொடுத்தது..இது நாள் வரையிலும் பரத்தும் கனியும் பேசினாலே அவர்கள் குடும்ப விஷயம் என ஒதுங்குபவள் இன்று இப்படி பேசுவதால் எழுந்த சிரிப்பு தான் அது..

ஆல்பத்துடன் கீழே வந்தவன், கனிக்கு அருகே இருந்த சேரில் அமர்ந்து கொண்டு அரசியைத் தூக்கி மடியில் வைத்து கொண்டு ஒவ்வொரு பக்கமாய் திறந்தான்…

“பேபி…இது தான் உன் அம்மா..” என ஒருப்புகைப்படத்தைக் காட்ட,

“மம்மி, நீங்களா என் அம்மா..” எனக் கனியிடம் கேட்டாள் அரசி..

“இது உன் மம்மி…இந்த போட்டோல இருக்காங்களே அவங்க தான் உன் அம்மா கனி மொழி…”
கனிமொழி…

ஹானஸ்ட் க்ரைம் போலீஸ் ஆபிசர் சரவணின் இரட்டை பெண்களில் மூத்தவள்… பரத் பிறந்து ஐந்து வயதில் கடும் காய்ச்சலில் மனைவி மறைந்த பின்னும் ஒற்றை ஆளாய் ஆளாக்கி வளர்த்த தாயுமாணவன் சரவணன்..

கனிஷ்காவிற்கு நேரெதிர் சுபாவம்..பல்லி இருந்தால் அந்த அறைக்கு அன்று முழுவதும் போகவே மாட்டாள்…பிஏ முடித்தவள் சமையல், வீட்டு நிர்வாகம் என அதிலே மனம் செல்ல, மேலே படிக்கமாட்டேன் என்றவளுக்கு வெப்சைட் மூலம் பார்த்த வரன் தான் அனுஷ்…

பிறப்பு வளர்ப்பு அனைத்தும் கனடா தான்..கனடாவில் வாழும் தமிழ் குடும்பம்… ஒற்றை மகன், பார்க்கவும் லட்சணம், பணம் வசதியிலும் ஒரு குறையும் இல்லை எனப் பார்த்து பார்த்து பேசி முடித்து கட்டிக் கொடுத்தார் சரவணன்..

திருமணத்திற்கு முன் வெளிநாட்டிற்கு போகவே பயந்த கனிமொழி திருமணத்திற்கு பின் அனுஷுடன் இருந்த இரண்டே நாளில் கணவனே கண் கண்ட தெய்வம் எனப் பெட்டியைக் கட்டி அவனுடன் சென்றுவிட, கனிஷ்காவும் பரத்தும் அவளைக் கிண்டல் செய்தே ஒரு வழி ஆக்கினர்..

அனுஷிற்கு கனிஷ்காவும் கனிமொழியும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி இருந்த போதிலும் அவனுக்கு கனிமொழி என்றால் மட்டுமே உயிர்.. அவனுக்கு அவளிடம் பிடித்ததே வெட்கமும், பயந்த சுபாவமும் தான்…

கனிமொழியைக் காதல் சொட்டும் விழிகளால் திணறடிப்பவன், ஒரு நாள் ஒரு பொழுது கூட கனிஷ்காவை தவறான வார்த்தையோ பார்வையோ பார்த்ததில்லை…

அவ்வளவு விரும்பினான்… அவர்களது இனிமையான கூடலுக்கு விடையாய் கனிமொழி கர்ப்பம் தரித்திருக்க, ஒன்பது மாதத்தில் அவளை இந்தியா அழைத்து வருவதாய் திட்டமிட்டிருந்தனர்..

முதலில் வரமாட்டேன் எனச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த கனிமொழி, பின் வருகிறேன் என சரவணனுக்கு அழைத்து சொல்லி விட,
அவளுடனே அனுஷின் பெற்றோரும் இந்தியா வருவதாய் இருந்தது..

அவர்கள் அனைவரும் அனுஷின் வீட்டில் இருந்து கிளம்பி ஏர்போர்ட் வரும் வழியில் தான் அந்த விபத்து…

முன் சீட்டில் இருந்ததால் அனுஷையும் கனிமொழியையும் தவிர அனைவரும் இறந்து போயினர்..

விஷயம் இந்தியாவில் கனிஷ்காவிற்கு மட்டுமே தெரியப்படுத்தியிருந்தார்கள்… அவளும் தந்தையுடன் கனடா செல்ல வேண்டுமென எடுத்த விசா கடைசி நேர வேலையில் அவளை விடுத்து சரவணன் மட்டுமே கிளம்பியிருக்க, தகவலை பரத்திடம் சொன்னவள் அடுத்த ப்ளைட்டில் கனடாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தாள்…

பரத்திடன் கனிமொழிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை மட்டுமே சொல்லி கனடா வந்திருந்தாள் கனிஷ்கா..

அவள் கனடா வந்திறங்கிய அன்றே, கனிமொழியின் உடல் மேலும் மோசமடைய, குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு அரசியை வெளியெடுத்துவிட்டனர்..

அரசியை முதலில் கைகளில் வாங்கியது கனிஷ்கா தான்…அனுஷ் அபாயக்கட்டத்தை தாண்டி மயக்க நிலையில் இருந்தான்…

அவனது நண்பர்கள் விஷயம் கேள்விப்பட்டு உதவிக்கு வர, இறக்கும் தருணம் தெரிந்தோ என்னவோ கண்விழித்தாள் கனிமொழி..

அங்கிருந்த செவிலியரின் அழைப்புக்கு கனிஷ்கா, பிறந்து ஐந்து நாட்கள் இன்குபேட்டரில் இருந்து வந்த அவளது குழந்தையுடன் உள் நுழைந்தாள்..

வலியில் முகம் கசங்கினாலும் பக்கவாட்டில் கனிஷ்கா படுக்க வைத்த தனது குழந்தையில் தலையை தொட்டு வருடி, ஏதோ சொல்ல வாயெடுத்தவள் சிரித்த முகமாய் குழந்தையின் தலையில் கையிருக்கும் போதே இவ்வுலகைவிட்டு பிரிந்தாள்…

கண் முன்னே தனது சரிபாதி பிரிந்தது…துக்கம் துயரம் நெஞ்சை அடைத்து அழுகை கண்ணை நிறைக்கும் போதே, அனுஷ் கண் விழித்துவிட்டதாய் தகவல் வர, அவனது பெற்றோரின் நல்லடக்க ஊர்வலம் விபத்து நடந்த பதினைந்து நாட்களுக்குப் பின் நடத்தி முடித்தாள் கனிஷ்கா…

அனுஷிடம் முறையாக கையெழுத்து வாங்கி, சரவணன்,கனிமொழியின் பூத உடலுடன் மார்பில் தூங்கி வழியும் அரசியுடனும் இந்தியா வந்திறங்கினாள் கனிஷ்கா..

சொந்தம் பந்தம் அறிந்தோர் தெரிந்தோரென சுற்றம் சூழ வந்தவர்கள் கதறி அழ, சொட்டுக் கண்ணீர் விடாமல் பரத்தும் கனிஷ்காவும் இறுதி சடங்கினை முடித்தனர்..

யாரிடமும் எதுவும் அவர்கள் பேசவில்லை…நடுசாமத்தில் அழும் குழந்தைக்கு உள்ளூர் செவிலியரைத் துணைக்கு வைத்து கனிஷ்கா பார்த்து கொள்ள, அனைத்தும் முடிந்து பல மாதம் கடந்து சிபிஐ ட்ரைனிங் போக நேரும் போது கனிஷ்காவின் மடியில் படுத்து கதறி அழுதான் பரத்…

அவனாவது சோகத்தை பகீர்ந்துவிட்டான்..ஆனால் இன்று இந்த நிமிடம் வரையிலும் திடமாய் நின்று சோகத்தை முழுங்கி நின்ற கனியின் கவனம்,
“இப்போ அம்மா எங்க மாமா..?” என்ற அரசியின் கேள்வியில் நடப்புக்கு வந்தது..

“அம்மா சாமி கிட்ட இருக்காங்க பேபி..” என்ற பரத்திடம்

“அவங்க எதுக்கு மாமா அங்க போனாங்க..”

“அது சாமிக்கு அம்மாவ ரொம்ப பிடிச்சிடுச்சா அதான் சாமி கிட்ட போய்ட்டாங்க..” என தேவி சொல்ல,

“அப்போ அவங்க எப்போ வருவாங்க..?” எனக் கேட்டாள் அடுத்ததாக,

“அது நீ நல்ல புள்ளையா டெய்லி சாமி கும்பிட்டா சாமி உன்கிட்ட அம்மாவ அனுப்பி வச்சிடுவாங்க..” என்றார் அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி,

“ஓஹ் ஆயா..அப்போ அதுவரைக்கும் அம்மா வரமாட்டாங்களா..?” எனவும் அவர் அமோதிப்பாய் தலையசைக்க, பரத்தின் மடியில் இருந்து கீழிறங்கி சாமி அறைக்கு ஓடினாள் அரசி…

அவள் ஓடிப் போகவும், திரும்பி அனுஷ் இருந்த இருக்கையைப் பார்க்க, அது காலியாக இருந்தது..

ஆட்டம் தொடரும்…

error: Content is protected !!