VNE 64 final (3)

VNE 64 final (3)

“உங்க ரெண்டு பேரையும் எந்த கேடகரில சேர்க்கறதுன்னே தெரியல…” என்று சிரித்தவரை பார்த்து,

“ஆமா… அப்படியே உங்க மகன் ஒரு கேடகரில அடங்கிடற ஆள் பாருங்க…” என்று சிரிக்க,

“ஏன்? என் பையனுக்கு என்ன? அவனை மாதிரி ஒரு நல்ல பையனை இந்த ஊர் பாத்து இருக்குமா?” சிரித்தபடி கூறிய ஜோதியை பார்த்து குறும்பாக கையை காட்டி ஹைஃபை கொடுத்தான் ஷ்யாம்.

“பாத்து இருக்குமாவா? சான்ஸே இல்லத்த… உங்க பையனை மாதிரி ஒரு நல்லவன, இந்த ஊர் என்ன உலகமே பாத்து இருக்காது…” கிண்டலாக கூறிய மகாவை ஓரக்கண்ணால் பார்த்தவன், மகளிடம்,

“அவளுக்கு பொறாமைடா குட்டி… நம்ம அளவு அவ இல்லல்ல… அதான்…” என்று சத்தமாக மகளிடம் ரகசியம் பேச, அந்த பூக்குட்டி கிளுகிளுத்து சிரித்தது. அந்த சிரிப்பில் மயங்கியவன், குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டான்.

“ஆஹா… அப்பனையும் பொண்ணையும் பாத்து எனக்கு பொறாமையா? சொல்லுவீங்க சொல்லுவீங்க… ரெண்டு பேருக்கும் ரெண்டு வேளை சாப்பாட்டை கட் பண்ண வேண்டியதுதான்…” என்று சமையலறையிலிருந்து மஹா குரல் கொடுக்க,

“போடீ… நீயென்ன சாப்பாட்டை கட் பண்றது? என் மக இருக்கால்ல… எனக்கு இனிமே அவ சாப்பாடு போடுவா…” என்று குட்டியின் கால் பாதங்களை தன் முகத்தில் வைத்தபடி மனைவியை வம்பிழுத்தான்.

“டேய் மகனே… ஏழு மாச குட்டி உனக்கு சாப்பாடு போடுவாளா? இவளை நம்பி நீ உன் பொண்டாட்டியை பகைச்சுக்கற…” என்று நாதன் சிரிக்க,

“என் மக எனக்கு சாப்பாடு போடுவா நானா… என் மக தான் என்னை பாத்துக்குவா… என் கிட்ட அவ அம்மா சண்டை போட்டான்னா என் செல்லம் அவகிட்ட போய் டிஷ்யூம் டிஷ்யூம்ன்னு சண்டை போட்டு என்னை காப்பாத்துவா…” குட்டியின் தலையில் முட்டிக் கொண்டே அதனிடம் கூறுவதை போலவே சொல்லிக் கொண்டு, அதை செய்முறையிலும் செய்து காட்ட, அந்த வாண்டும், அவனை பின்பற்ற முனைந்து,

“டிசூம்… டிசூம்…” என்று சப்தம் எழுப்பி, அவனை போலவே செய்ய முயல,

“அச்சோ… எங்க பூனைக்குட்டி சூப்பரா சண்ட போடுதே… ஏய் பொண்டாட்டி ஜாக்கிரதைடி… எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்குதாக்கும்…” என்று குட்டியை அள்ளிக்கொள்ள, அதற்கு சிரிப்பு தாளவில்லை.

“ரொம்ப ஓவரா போகாத… வேணா…” என்று அங்கிருந்தே மஹா எச்சரிக்க, ஜோதி நாதன் என்று இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நீ வாடா பூனைக்குட்டி… இங்க நம்மளை பாத்து எல்லாருமே பொறாமைப் படறாங்க… நாம கார்ல ஒரு ரவுன்ட் போயிட்டு வரலாம்… அந்த டர்ட்டி மம்மியும் நமக்கு வேணா… இந்த டர்ட்டி அவ்வாவும் வேணா… டர்ட்டி தாத்தாவும் வேணா…” என்று குட்டியை தூக்கிக் கொண்டு போனான் ஷ்யாம்.

“ஆமா இவுங்க மட்டும் தான் குட் அப்பா…” என்று மஹா சிரிக்க,

“ஆமா… என் பொண்ணுக்கு நான் மட்டும் தான் குட்… மத்த எல்லாரும் பேட், டர்ட்டி…” என்று மகளிடமே கூறிக் கொண்டிருக்க, அந்த சின்னக்குட்டி தகப்பனின் கூற்றை தலையாட்டி ஆமோதித்தது.

உலகத்தையே மறந்து விட்டு மகளிடம் ஆழ்ந்திருந்த மகனை சிரித்தபடி பார்த்திருந்தார் நாதன்.

ஜோதி இப்போது மகனுடனே தங்கியிருந்தார், குழந்தையையும் மருமகளையும் பார்த்துக் கொள்ளவென. நாதன் தான் அவ்வப்போது ஹைதராபாத் போய் அங்குள்ள நிலவரங்களை பார்த்துக் கொண்டிருந்தார். ஷ்யாம் இரண்டு தேவதைகளையும் விட்டு அவ்வளவாக போவதில்லை. எப்போதாவது என்ற நிலைதான்.

மஹா டிஎன்பியும் (கார்டியாலஜி), பிருந்தா டிஜிஓவும் படித்துக் கொண்டிருந்தனர். பிருந்தா கார்த்தியின் குழந்தை வரலக்ஷ்மிக்கு மூன்று மாதங்களே ஆகிருந்ததால் பைரவி பிருந்தாவை பார்த்துக் கொண்டார். முடிந்தளவு ஜோதியிடமே இருப்பாள் மஹா… வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என்று பெசன்ட் நகர் போவது வழக்கமாகி இருந்தது.

பிருந்தாவின் தந்தை கூட, “பொண்ணுக்கு எப்படி லைப் அமையுமோ, அம்மா இல்லாத பொண்ணை நான் எப்படி பார்ப்பேன்னு ரொம்ப கவலைல இருந்தேன் க்கா… பணம் என்னக்கா பணம்… இப்படி மனுஷங்க எங்க கிடைப்பாங்க? உங்களால தான் இப்ப நான் நிம்மதியா இருக்கேன்…” என்று பைரவி ஜோதியின் கையை பிடித்து இருந்தார்.

தந்தையாக அவ்வளவு நிறைவு அவருக்குள்!

காலையில் மகளுக்கான தேவைகளை முடித்து விட்டு ஜோதியிடம் ஒப்படைத்து விட்டு கல்லூரிக்கு கிளம்பிவிடுவாள்.

இப்போதெல்லாம் படிப்பில் சற்று தீவிரம் வந்திருந்தது மஹாவுக்கு. டிஎன்பி முடிந்தவுடன் யூஎஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

மகளை அழைத்துக் கொண்டு போனவன், கொஞ்ச நேரம் மடியில் அமர வைத்து அவனது மகளே காரை ஓட்டியதாக பேர் பண்ணிவிட்டு, தோளில் சுமந்து கொண்டு வந்தான் ஷ்யாம்.

“நாம எப்படி கார் டிரைவ் பண்ணோம்னு அவ்வா கிட்ட சொல்லுங்க செல்லகுட்டி…” என்று டைனிங் டேபிள் மேல் மகளை அமர வைக்க, அவன் சொன்னதை புரிந்து கொண்டதோ இல்லையோ, வாயில் ‘டர்ர்ர்ர்’ என்று ஓட்டி தும்பிளி பறத்தியது!

“டேய்… இந்த குட்டி பொண்ணு கார் ஓட்டினாளா?” என்று அவனது முதுகிலேயே ஒன்று போட்டார் ஜோதி.

“ஏன் மீ… என் மக நாலு வயசுல எல்லாம் ப்ளைட்டே ஓட்டுவாளாக்கும்… என் பொண்ணு ஓட்ற ப்ளைட்ல உக்கார்ந்து தான் நான் போவேன்…” என்று சிரிக்க,

“அத்தை… அது ஒரு மக பைத்தியம்… அந்த பைத்தியம் முத்திப் போய் இப்படித்தான் உளரும்… கண்டுக்காதீங்க…”

இருவரும் அவனை கிண்டல் செய்வார்களே தவிர அவனது மகள் பைத்தியத்தில் அவர்களும் தான் ஆழ்ந்து போயிருந்தனர்.

இந்த மகள் பிறந்த போது அவன் செய்த அழுச்சாட்டியங்களை நினைத்துப் பார்த்தாள் மஹா.

பிரசவ வலியில் அவள் துடித்துக் கொண்டிருக்க, தானும் உடனிருந்தேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான் ஷ்யாம். உள்ளுக்குள் ஏக நடுக்கம் தான். ஆனாலும் அந்த நேரத்தில் மனைவியை தனியாக விட்டுவிட அவனால் முடியவில்லை. தலைவலிக்கே துடித்து போய்விடுவாளே என்று பயந்தவனால், இவள் எப்படி பிள்ளை பெறுவாள் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதோடு அவன் கண்ட பிரசவம் வேறு அவனை பயமுறுத்த, அவளை தனியே விடவே முடியாது என்று பிடிவாதமாக உடனிருந்தான்.

சொல்லிவிட்டானே தவிர, மனைவியின் வேதனையை தாள முடியாமல் அழுது விடுவான் போல, பொறுத்துப் பார்த்தவள், பிரசவம் பார்த்த மருத்துவரிடம்,

“இவரை முதல்ல வெளிய அனுப்புங்க டாக்டர்…” என்று கூறிவிட,

“இல்ல… நான் இமோஷனாக மாட்டேன் மஹா… ப்ளீஸ் இங்கயே இருக்கேன்…” என்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

ஆனால் நேரமாக ஆக அவனது கட்டுப்பாடு குறைந்து, கடைசியில் கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது அவனுக்கு!

ஐயோ அடுத்த குழந்தை வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்தது. பிரசவ வைராக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் கூடத்தான்!

ஆனால் அவை யாவும் அந்த பூக்குவியலை கையிலேந்தும் வரை தான்.

மேனி சிலிர்க்க தன் மகளை கையிலேந்தியவாறு பிரசவ மயக்கத்தோடு புன்னகைத்த மனைவியை பார்த்து காதலாக, ஆசையாக, பெருமிதமாக புன்னகைத்த கணவனின் முகத்தை ஆயுளுக்கும் மறக்க முடியுமா?

முடியாது… முடியவே முடியாது!

தான்யாவை பெற்றதோடு மஹாவின் வேலை முடிந்து விட்டது. ஆனால் அதற்கு பின் ஒவ்வொரு நொடியும் மகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தான் ஷ்யாம். கூடவே மனைவியையும்!

****

மகளை தூங்க செய்து விட்டு படுக்க வந்தாள் மஹா!

“ஷப்பா… எவ்வளவு தாண்டி வந்திருக்கோம்… நினைச்சு பார்க்கும் போது மலைப்பா இருக்கு ஷ்யாம்…” என்றவளை பார்த்து புன்னகைத்தான்!

“தாண்டி வந்து இருக்கோம்னா என்ன குல்பி?”

“புரியலடா…” புரியாத பார்வை பார்த்தாள்!

“வாழ்க்கைல டெஸ்டினேஷன் அதாவது முடிவிடம்ன்னு ஒன்னு கிடையாது மஹா… கண்டினியஸ் ப்ராசஸ்… வந்து இருக்கோம்ன்னு சொல்ல எதுவும் நிரந்தரம் இல்ல… அது ஒரு நாவலும் இல்ல. க்ளைமாக்ஸ் முடியும் போது தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்ன்னு சொல்றதுக்கு… போயிட்டே இருக்கணும்… இல்லையா?” என்று கேட்க, மஹா சிரித்தாள்.

“சுவாமிஜி… ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று இன்னமும் சிரிக்க, தள்ளி அமர்ந்து கொண்டிருந்த அவளை தன்னோடு இழுத்து வைத்துப் பிணைத்துக் கொண்டான்.

“நீ இல்லைன்னா நான் என்னவாகி இருப்பேன் மஹா?” அவளது முகத்தை கையிலேந்தி கண்களை நேராக பார்த்து கேட்க, அவனது கைகளில் முத்தமிட்டாள்.

“அதெல்லாம் ஒன்னுமாகி இருக்காது ஷ்யாம். இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிருப்ப…” என்று சாதரணமாக கூற, அவன் மறுத்து தலையசைத்தான்!

“கண்டிப்பா இருக்காது… என்னோட கேரக்டருக்கு அது செட் ஆகி இருக்காது… ஏதோ ஒன்னு தேடிகிட்டே இருந்தேன்… அது கிடைக்கற வரைக்கும் தேடிக்கிட்டே இருந்து இருக்கேன் மஹா…”

“அது இப்பவாவது கிடைச்சுதா?” என்று குறும்பாக கேட்டவளின் கண்களில் முத்தமிட்டவன்,

“ம்ம்ம்… கொப்பும் கொலையுமா மப்பும் மந்தாரமுமா…” என்றவனின் முகத்தில் அத்தனை சில்மிஷம்!

“அடப்பாவி…” என்றவள், அவனை அடிக்க கையோங்க, அவளது கையை பிடித்து தன்னோடு பிணைத்துக் கொண்டவன்,

“அம்மா மாதிரியே பொண்டாட்டி வேணும்ன்னு விநாயகர் ஆசைப்பட்டாராம்… அது தெரியுமா குல்பி?” என்றவன், அவளை அவனது மார்பின் மேல் சாய்த்துக் கொண்டு காதை மெலிதாக கடித்தான்.

“ம்ம்ம்… தெரியுமே…” என்றாள் மயங்க துவங்கியவாறு!

“நான் யார் கிட்ட என் அம்மா கிடைப்பாங்கன்னு தேடிட்டேன் போல…” என்று அவளது கழுத்து வளைவில் முகத்தை பதித்து முத்தமிட,

“ஆஹான்…” என்றாள், அவனைப் போல!

“விஜி லவ் பண்றான்னு தெரிஞ்சும் உன்னை அவன் கிட்ட இருந்து பிடுங்கியே ஆகணும்ன்னு ஏன் எனக்கு வெறி வரணும் மஹா?” கழுத்திலிருந்து கன்னத்துக்கு தன் பயணத்தை தொடர்ந்திருந்தான் ஷ்யாம்.

“ஆஹான்…” அவளது கண்கள் சொருகியது!

“பொண்ணுங்களை கஸ்டடிக்கு எடுத்ததுன்னு பார்த்தா, பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் நீ தான…” என்றவன், கன்னத்தில் உதட்டால் கோலமிட,

“ஆஹான்…” மயக்கத்தில் இருந்தாள் அவள்!

“அவ்வளவு பிரச்சனை வந்தப்பவும் எனக்கு நீ வேணும்ங்கறதுல பிடிவாதமா இருந்தேன்…”

“ஆஹான்…”

“இதுல இருந்து என்ன தெரியுது?” என்று கேள்வி கேட்க,

“என்ன தெரியுது?” என்று பதில் கேள்வி கேட்டாள்!

“நானாத்தான் ஆப்புல தேடிப் போய் உக்காந்துருக்கேன்னு தெரியுதுடி…” என்று கள்ளத்தனமாக சிரிக்க, அதுவரை மயங்கியிருந்தவள், நறுக்கென்று அவனது கன்னத்தை கடித்து வைத்தாள்!

“இதான்டா ஆப்பு…” என்று சிரிக்க,

“ஸ்ஸ்ஸ்ஆஆ…” என்று கத்த துவங்கியவன், மகள் விழித்துக் கொள்வாளோ என்று பயந்து சப்தத்தை குறைத்து, ‘ஆஆ’ வென, மஹா சிரித்தாள்.

“பூனைக்குட்டியும் இப்படியேதான்டி கடிச்சு வைக்கறா… அவளுக்கும் சொல்லிக் கொடுத்து தான் பெத்தியோ?”

“அதை உன் பூனைக்குட்டியைவே எழுப்பி கேக்கட்டா?” என்று கல்மிஷ புன்னகையோடு எழப் போக,

“ஏய்… விட்டா பண்ணுவ…” என்றவன் அவனது வேலையில் மும்முரமானான்.

“மாமா…” என்று சிணுங்கலாக அழைத்தாள் மகா. அவள் மாமாவென அழைத்தாலே அவனிடமிருந்து ஏதாவது காரியமாக வேண்டியிருக்குமே. இப்போது என்னவென அவளை குறும்பாக பார்த்தான்.

“சேஷா பையனை பாத்தியா?” என்று கேட்டாள். சேஷாவுக்கும் செந்திலுக்கும் அப்போதுதான் மகன் பிறந்து இருந்தான்.

“ஆமா… செம கியூட்டா இருக்கான்…”

“எனக்கும் பையன் வேணும்…” என்று அவன் புறம் திரும்பி ஆவலாக கேட்க, அவளை முறைத்தான்.

“ஏய் பூனைக்குட்டிகே ஒன்னரை வயசுதான்டி ஆகுது…”

“பெத்துக்கறதுன்னா இப்பவே இல்ல மாமா…” இன்னமும் சினுங்கியவளை பார்த்து சிரிக்க,

“எப்பவும் கிடையாது… மூச்… ஒரு தடவை நீ பட்ட வலியே போதுன்டா…” பிடிவாதமாக அவன் கூற, அன்று அவன் கொண்ட தவிப்பை இன்றும் உணர்ந்தாள்.

“நோ… எனக்கு இன்னும் நிறைய வேணும்…” அதே பிடிவாதத்தோடு கூறியவளை பார்த்து சிரித்தான்.

“ஏன்டி ஏதாவது ஸ்கூல் ஆரம்பிக்கற ஐடியா இருக்கா?” என்று கிண்டலாக கேட்க, குறும்பாக முறைத்தாள்.

“எனக்கு வேணும். டாட்…” என்றவள் தள்ளி அமர்ந்து கொள்ள, அவளது சில்மிஷப் பார்வை அவள் மேல் படர்ந்தது.

“வேணும்ன்னு சொல்லிட்டு தள்ளி இருந்துட்டா, கடைல கிடைக்குமாடி குல்பி?” என்று சிரித்தான் ஷ்யாம்.

“ஏய்…” என்றவள், அவனை வெட்கத்தோடு அடிக்க ஆரம்பிக்க, அவளை அணைத்துக் கொண்டு சிரித்தான்!

அடுத்த இரண்டாவது நாள் தான்யாவை ஜோதியிடமும் பைரவியிடமும் விட்டுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தலகுப்பா கிளம்பியிருந்தான். ஓய்வு தேவைப்படும் போதெல்லாம் மனைவியையும் குழந்தையையும், உடன் கார்த்திக் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தலகுப்பா செல்வது வாடிக்கை தான்.

ஆனால் இந்த நாள் மட்டும் விதிவிலக்கு!

அவர்களது தனிமைக்குள் வேறு யாரையும் அன்று அனுமதிப்பதில்லை.

அந்த தனிமை, அந்த நாள் இருவருக்குமே மட்டுமே சொந்தம்!

அதன் காரணம் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம்!

முதன் முதலாக அந்த அருவிக்கரையில் மஹாவை முத்தமிட்டு காதலை அவன் சொன்னது அந்த நாளில் தான்!

இருவருக்குமே அந்த நாளும் அந்த அருவிக்கரையும் மிகவும் ஸ்பெஷல்.

அன்றும் பௌர்ணமி…

முழு நிலவு வானில் காய்ந்து கொண்டிருந்தது!

ஏரிக்கரையில் சிறு குடில் போன்ற அந்த டெண்ட்டுக்கு வெளியே அவனது முழங்கையோடு தன் கையை பிணைத்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தாள் மஹா!

அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர அவன் பேசவில்லை. ஆனால் பார்வை மொத்தமும் அவள் மேல்!

அங்கு இருக்கும் போதெல்லாம் அவன் இப்படிதான். பகலில் அவளை வெகுவாக சீண்டியபடி விளையாடிக் கொண்டிருப்பான். நீந்துவான். ஆனால் மாலையாகும் போதெல்லாம் அனைத்தையும் மறந்து விட்டு அவளை பார்த்தபடி மட்டும் தான் இருப்பான். பார்வையில் தாபம் கொட்டிக் கிடக்கும். இருவருக்குமே வெளியுலகம் மறந்து போயிருக்கும்!

“ஐ வான்ட் டூ கிஸ் யூ டார்லிங்…” அன்று முதன் முதலாக கூறியதை போலவே அவளது கண்களைப் பார்த்து கூற,

அவனது கண்களில் தெரிந்த காதலையும் ஆசையையும் தாபத்தையும் பார்த்து மெளனமாக உறைந்தாள். எப்போதுமே அவனுடையது அதீதக் காதல் என்றாலும் அந்த நாள் மிக மிக ஸ்பெஷல்!

அந்த இடைவெளியில் அவளது இடையைத் தன்னோடு சேர்த்தவன், அவளது இதழ்களை அணைத்திருந்தான்.

அழுத்தமாக… ஆழமாக… வன்மையாக… வன்மையில் மென்மையாக அவளது இதழில் கதை எழுதிக் கொண்டிருந்தான், நிதானமாக!

மஹா, தன்னை மறந்து, சுயம் தொலைத்து, ஏதுமற்ற பரவெளியில் படர்ந்து மீள முடியாமல் வியாபிக்க தொடங்கியிருந்தாள். அந்த முடிவிலா பரவெளியில் அவளோடு ஐக்கியமாகி ஒன்றிக் கலந்து தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான், ஷ்யாம்!

வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம்  நீயெனக்கு, புது வயிர நானுனக்கு;

காணுமிடந்  தோறு நின்றன் கண் னொளி வீசுதடீ

மானுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!

சுபம்

error: Content is protected !!