VNE43(1)

VNE43(1)

43
ஷ்யாமின் அந்த வார்த்தையில் அவள் என்ன மாதிரியாக உணர்ந்தாள் என்று புரியவே இல்லை. ஒரு பக்கம் அத்தனை வலித்தது. இன்னொரு பக்கம் அவனது ஒப்புதல் அவளது மனதை ஏதோ செய்தது. இந்த மனிதனை தான் விட்டுக் கொடுக்க முடியுமா என்று கேட்டது அவளது மனம்.
ஆனால் திருமண வாழ்க்கை என்பது இப்போது போல கிடையாதே! இத்தனை பார்த்த பிறகு அவனது நெருக்கத்தை எந்தளவு தனது மனம் ஒப்புக்கொள்ளக் கூடும்?
முடியாது!
“மஹா… இது இப்ப நடந்த ஒன்னு கிடையாது…” ஒருவாறாக தன்னை மீட்டுக் கொண்டவன், வலியோடு கூற,
“எனக்கும் புரியுது… சொல்லிருக்க…” கண்ணீரை துடைத்துக் கொண்டு அவள் கூற,
“உன்கிட்ட நான் கமிட் ஆகறதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு உனக்கு தெரியும்… ஆனா உன்கிட்ட கமிட்டானதுக்கு அப்புறம் நான் நேர்மை தவறி இருக்கேனா?” என்று நேரடியாக கேட்டான்.  
“இல்ல…” அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அவளுக்கு தெரியும், அவள் மனதுக்கு தெரியும்… அவன் நேர்மையாக இருப்பதை அவள் மட்டுமே உணரவும் முடியும்.
“அந்த நம்பிக்கை உனக்கு இருக்கும் போது இதெல்லாம் பாசிங் க்லௌட்ஸ்டி…” அவளை சமாதானம் செய்ய கூறினாலும், மிகுந்த வேதனையோடு கூறினான் அதை!
“உன்கிட்ட வார்த்தையா கேட்கும் போது இருந்த வலி பெருசா தெரியலடா… இப்ப என்னால இந்த வலியை தாங்க முடியல…” முகத்தை மூடிக் கொண்டு அவள் அழ, எழுந்து வந்தவன், கைகளை கட்டிக் கொண்டு அவள் முன்பு நின்றான்.
“எல்லாருக்குமே ஒரு பாஸ்ட் இருக்கும் மஹா… நீ எப்படி வேண்ணா எடுத்துக்க, சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும் தான் எந்தவொரு ஆம்பிளையும் ராமன்… எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைச்சுது… தானா தேடி வந்தது… யாரையும் தேடிப் போகலை… அதை யூஸ் பண்ணிகிட்டேன்… ஆனா எப்ப உன்கிட்ட நான் கமிட் ஆனேனோ, எப்ப தலகுப்பால நீ இல்லைன்னா நான் இல்லைன்னு முடிவு பண்ணினேனோ, அப்புறம் யாரையும் மனசால கூட நினைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்… அது உனக்கு நான் தர்ற மரியாதை… அப்படி நான் வேற யாரையாவது நினைச்சா தான் அது நான் உனக்கு பண்ற துரோகம்… என்னோட ஹானஸ்டி இவ்வளவுதான்…” என்று நிறுத்த,
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனது கண்களில் அவள் கண்ட உண்மை அவளை நிச்சயமாக சுட்டது. அவளிடம் அவன் அப்படித்தான். நீ என்ன செய்து கொண்டாலும், நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. நான் இப்படித்தான் என்று தான் இருப்பான்.
“இப்ப ஒரு பொண்ணை மனசால நினைச்சா கூட தப்பு… என்னை சட்டைய பிடிச்சு கேக்க உனக்கு ரைட்ஸ் இருக்கு… ஆனா அதுக்கு முன்னாடி நடந்ததுக்கு எல்லாம் எப்படி விளக்கம் சொல்ல முடியும் மஹா?”
அவன் கூறுவதும் நியாயம் தான். ஆனால் காயம் கொண்ட மனது அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறதே. அந்த படங்கள், அது அவனது தனிப்பட்ட அந்தரங்கமல்ல… தன்னுடைய அந்தரங்கம்! தனக்கே உரித்தான அவனது அந்தரங்கம்!
அதை பார்க்கும் போது அத்தனை அசூயையாக இருப்பதை அவளால் எப்படி மறுக்க முடியும். இந்த அசூயையை வைத்துக் கொண்டு அவனோடு வாழ முடியுமா?
அவனது வாழ்க்கையும் பாழ்… தன்னுடைய வாழ்க்கையும் பாழ் அல்லவா!
இங்கு பிரச்சனை ஷ்யாம் அல்ல!
அந்த படங்கள்!
“தயவு செஞ்சு நீ விளக்கம் கொடுக்கவே வேண்டாம்… அந்த கர்மத்தை எல்லாம் கேட்டு கேட்டு எனக்கு காது வலிச்சு போச்சு… என்னவோ உலக சாதனை பண்ண மாதிரி, நான் அப்படி நான் இப்படின்னு… எனக்கு இதை கேட்க கூட பிடிக்கல… விட்டுடு…” என்று நிறுத்த, அவன் கைகளை கட்டியவாறு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அந்த படங்களை பார்த்ததில் உள்ளுக்குள் அவமானமாக இருந்தது. அதிலும் தன்னுடைய மஹா அதை காட்டி கேட்கையில் உயிர் போய்விடும் போல தான் இருந்தது. ஆனாலும் தன்னை தானே சுதாரித்துக் கொண்டு தான் நின்றான்.
“சரி வேறென்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கற மஹா?”
“எதையும் எதிர்பார்க்கல… உன்னோட பாஸ்ட் தெரிஞ்சு தான் நானும் அக்செப்ட் பண்ணிகிட்டேன்… ஆனா…” என்று நிறுத்த,
“ஆனா?”
“அந்த வீடியோவையும் பிக்சர்சையும் பார்த்ததுக்கு அப்புறம் நமக்குள்ள ரிலேஷன்ஷிப் சாத்தியமே இல்லைன்னு தோணுது…”
“வீடியோவா?” அதிர்ந்தான் ஷ்யாம். வெறும் இரண்டு மூன்று படங்கள் மட்டுமே என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் வீடியோ என்றதும் அதிர்வின் விளிம்பிற்கு சென்று விட்டான்.
“ம்ம்ம்…” என்றவள், வாட்ஸ்அப்பை திறந்து, அந்த வீடியோவை அவள் ப்ளே செய்ய, ஒவ்வொரு நொடியும் இறந்து பிறந்தான்.
அவனுக்குள் வால்கனோ வெடித்து விடும் போல இருந்தது.
இந்தளவு தான் ஏமாளியாக இருக்க முடியுமா?
இப்படி தன்னை ஏமாற்ற முடியுமா?
அவ்வளவு முட்டாளாகவா தான் இருந்து இருக்கிறோம்?
இது ஒன்றுதானா? இன்னும் எத்தனையோவா?
யார் செய்திருக்கக் கூடும் இதை?
“போதும் நிறுத்து மஹா…” அதை அவனால் பார்க்க முடியவில்லை. அது நிச்சயமாக அவனது சுயநினைவில் எடுக்கப்பட்ட வீடியோவும் அல்ல!
இப்படி கிறக்கத்தோடு தான் இருப்பதை பார்த்த பின்னும் மஹா தன்னிடம் நின்று பேசிக் கொண்டிருப்பதே பெரிய விஷயமாக தோன்றியது.
“உனக்கே பார்க்க முடியலல்ல?” என்றவளின் கண்களில் அருவி!
“ஆமா… முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… அசிங்கமா இருக்கு… இப்படி நான் ஏமாந்து இருக்கேனேன்னு நினைச்சா…” என்றவன், கண்களை இறுக்கமாக மூடித் திறந்து தன்னை ஆற்றுப் படுத்திக் கொள்ள முயன்றான்.
முடியவில்லை… பல்லைக் கடித்தான்… அப்போதும் அவனது கண்கள் கலங்குவதை கட்டுப்படுத்த முடியவில்லை…
அவன் உடைந்து போவதை அவளால் பார்க்கவே முடியவில்லை.
தோழியாக மட்டுமே இருந்து விடலாம் என்று தான் நினைத்தாள். அது பொய் தான். அந்த பொய்யே போதுமென்று தான் நினைத்தாள். ஆனால் கண் முன் அவன் கலங்குவதை பார்த்த பிறகு அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
“ஷ்யாம்…” அனைத்தையும் ஒதுக்கி விட்டு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு கதறினாள்.
ஹாலிலிருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களது பேச்சு சப்தம் கேட்கவில்லை. கேட்கும் தூரமும் இல்லை. ஆனால் எதுவோ பெரிய பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.
“என்னோட பேரன்ட்சையும் உன்னோட பேரன்ட்சையும் எப்படி ஃபேஸ் பண்ண போறேன் மஹா?” இது போன்றவொரு நிகழ்வை யாரால் எற்றுக் கொள்ள முடியும்? அவள் தான் அவனைக் கட்டிக் கொண்டிருந்தாளே தவிர, அவன் கட்டிக் கொள்ளவில்லை.
அவன் இன்னமும் தன்னுடைய வீடியோவை பார்த்த அதிர்விலிருந்தும், அதை மகாவும் அதை பார்த்த அதிர்விலிருந்தும் வெளி வரவே இல்லை.
இப்போதும் இது கிராபிக்ஸ் என்றோ, மார்பிங் என்றோ சொல்லி அவன் தப்பித்து இருக்க முடியும். ஒரேடியாக மறுத்து இருக்கவும் முடியும். ஆனால் அதை அவன் செய்யவில்லை. செய்யவும் முடியவில்லை. முடியாது. அப்படி பொய் சொல்லி தன்னுடைய காதலை காப்பாற்ற வேண்டும் என்று அவசியமில்லை என்று தோன்றி விட்டிருந்தது.
இந்த நிகழ்வை கடந்தாக வேண்டும். அதற்கு அவளது புரிதல் அவசியம். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இப்படி நடக்க வாய்ப்புள்ள இடம் இது. அப்போதும் இப்படி புரியாமல் நடந்து கொள்வாளா என்று தான் முதலில் தோன்றியது.
ஆனால் காதல் கனிவதற்கான காலத்தை அவளுக்கு தான் கொடுக்கவில்லை என்பதும் எங்கோ ஒரு மூலையில் தோன்றியது. அனைத்தையும் தாண்டி, இரண்டு குடும்பங்கள். அவர்களை தான் பார்த்தாக வேண்டும். இந்த விஷயம் அவர்களுக்கு தெரியாமல் இருக்க போவதில்லை. தெரிந்தால் வாழ்நாள் முழுமைக்குமான அவமானம்!
“எல்லாம் புரியுது ஷ்யாம்… ஆனா உன்னை இன்னொருத்தியோட என்னால பார்க்கவே முடியல… ஏன்னா அந்தளவு…” என்றவள்,  இன்னமும் அவனது மார்போடு ஒன்றிக் கொண்டு, “உன்னை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்… என்ன பண்ணி தொலைக்கறதுடா?” என்று கதற, அவனது தடைகளை தகர்த்துக் கொண்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
கண்களில் கண்ணீர்! துடைத்துக் கொள்ளவும் தோன்றவில்லை. என்ன செய்வது என்று தன்னிடமே கேட்பவளை என்ன செய்வது? கடைசி மூச்சு வரை காதல் செய்ய வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. அவளது கையை பிடித்துக் கொண்டு கடைசி மூச்சை விட வேண்டும் என்றும் தோன்றியது.
“நீ இல்லைன்னா எனக்கு லைப்ஃபே இல்லடி…” என்றவன், அவளை தன்னோடு இன்னமுமே இறுக்கிக் கொள்ள,
“எனக்கு மட்டும் என்னவாம்?” என்றவள், “ஆனா… கல்யாணம் வேண்டாம்…” என்று மீண்டும் ஆரம்பிக்க, அவளை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தவன்,
“பைத்தியம் மாதிரி பேசாத மஹா…” என்றான்.
“பைத்தியம்னே வெச்சுக்க… வேண்டாம் ஷ்யாம்… உன்னோட வாழ்க்கையும் சரி, என்னோட வாழ்க்கையும் சரி, மொத்தமா ஸ்பாயில் ஆகிடும்…” என்று கூற,
“என்னால ரெண்டு பேருக்கும் தனித்தனி வாழ்க்கைய நினைச்சே பார்க்க முடியலடி… ஆனா நீ பிரிச்சு பார்க்கற…” என்றவனுக்கு கசப்பாக இருந்தது.
“நீ இமோஷனலா திங்க் பண்ற…”
“எஸ்… இப்ப நான் இமோஷனல் இடியட் ஆகிட்டேன்…” முன்னர் அவளை இமோஷனல் இடியட் என்று கூறியவன், இப்போது தன்னை கூறிக் கொண்டான்.
“என்னோட உணர்வுகளை புரிஞ்சுக்க ஷ்யாம்… ப்ளீஸ்…” என்று அவள் கெஞ்ச,
“என்னோடதையும் புரிஞ்சுக்க… இப்ப தான் எனக்கு நீ வேணும்… ஃபிசிக்கலான்னு மட்டும் இல்ல… மென்டலா… இமொஷனலா… ஐ நீட் யூ…”
“ஐ ம் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ… ஆனா…” என்றவளை கோபமாக பார்த்தான்.
“ஆனா என்ன? எப்பவுமே ஹிப்போக்ரெட்டாவே இருக்காத மஹா… நாம வாழறது ஒரு தடவை… அதை வெளிப்படையா வாழ்ந்துட்டு போய்டலாம்… இதென்ன வேணும் ஆனா வேணாம்ன்னு… நடிக்கற… ரொம்ப நடிக்கறடி…”
“சரி நடிக்கல… வெளிப்படையா சொல்றேன்… ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா அது நரகமாகிடும்…” என்று கூற, அவளை தள்ளி நிறுத்தியவன்,
“என்னை விட்டுட்டு போக எத்தனையோ காரணத்தை தேடிப் பிடிக்கற மஹா…” என்றவனின் கண்களை நேராக பார்த்தவள்,
“உன்னை விட்டுட்டு நான் மட்டும் நிம்மதியா இருக்க முடியுமா?” என்று கேட்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“இருக்க முடியாதுல்ல… அதே தான் எனக்கும்… நரகமா இருந்தாலும் பரவால்ல இரு… அதே நரகத்துல நானும் இருக்கேன்…” என்றவனை வாயடைத்துப் போய் பார்த்தாள்.
இது எந்த மாதிரியான காதல் என்று அவளுக்கு புரியவில்லை. நடுங்கியது. தலையை பிடித்துக் கொண்டு டைனிங் டேபிள் நாற்காலியில் சரிந்து அமர்ந்தவளை உதவியற்ற பார்வை பார்த்தான். உள்ளுக்குள் தாங்கொணாத்துயரம் அவனை அலைக்கழித்தது. ஆனாலும் வேறு வழியில்லை. அவளை இப்போது விட்டுக் கொடுக்க முடியாது. விட்டு பிடிக்க நினைத்தால் பிடிக்கவும் முடியாது.
தன்னை மொத்தமாக தொகுத்துக் கொண்டவன், அவளது செல்பேசியை எடுத்து அந்த வாட்ஸ் அப் எண்ணை ஆராய்ந்து கொண்டே, 
“மகா… இதே கல்யாணத்துக்கு அப்புறம், யாராவது என்னை பழிவாங்க, இப்படி பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப?” என்று இயல்பாக கேட்பது போல கேட்க, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.
என்ன சொல்வது என்று புரியாத பார்வை பார்க்க,
“இப்ப நீ நம்ம இன்டிமேட் ரிலேஷன்ஷிப்பை நினைச்சு தானே இவ்வளவு போராடிட்டு இருக்க? சப்போஸ் இஃப் வி ஆர் ஆல்ரெடி இன்டூ இட், வாட் வில் பி யுவர் டெசிஷன்?” நேரடியான கேள்வி. இது போன்ற நேரடியான அவனது தாக்குதல்களை மட்டும் தான் அவளால் சமாளிக்கவே முடிவதில்லை. அப்போதும் என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.
அப்போது என்ன செய்திருக்க முடியும்? தெரியவில்லை அவளுக்கு. எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனை பார்த்தாள்.
“விட்டுட்டு போயிடுவியான்னு கேக்கறேன்…” பார்வை மொத்தமும் பேசியிலிருக்க, வார்த்தைகள் மட்டும் வெப்பமாக வந்தது.
லேசாக நிமிர்ந்து அவளைப் பார்க்க, இல்லையென்று இடம் வலமாக தலையாட்டினாள்.
“அப்படீன்னா இப்ப மட்டும் விட்டுட்டு போறேன்னு எப்படி மஹா உன்னால சொல்ல முடிஞ்சது?”
அவனது கேள்விக்கு என்ன பதில் கூறுவது?
“ப்ச்… சரி விடு…” என்றவன், அந்த வாட்ஸ்அப்பை ஆராய்ந்து கொண்டிருந்தான்.  
மௌனியானாள்!
“இது யாரோட நம்பர்?” என்று நெற்றியை சுரண்ட, அவளுக்கு விஜய் பற்றிக் கூற சற்று பயமாக இருந்தது.
இவன் என்ன செய்து வைப்பானோ என்ற பயம்!
“அது…” என்று திணறியவள், எச்சிலை கூட்டி விழுங்கி, “அவன் கால் பண்ணான்…” என்று கூற, சரேலென நிமிர்ந்தான்.
“என்ன சொல்ற?” என்று அதிர்ந்தான். கால் செய்தான் என்றால் ப்ளாக்மெயிலா?
“ம்ம்ம் ஆமா…” என்றவள், தடுமாறினாள், அவனது பார்வையில் ஏறிய வெப்பத்தை கண்டு! “ப்ளீஸ் ஷ்யாம்… அப்படி பார்க்காத…” என்றவளுக்கு நெஞ்சம் தடதடத்தது.
“யாரு?” என்றவன், அவளை கூர்மையாக பார்க்க,
எச்சிலை விழுங்கியபடி, “உன்னோட பிஏ… விஜய்…” என்று கூற, அவன் என்னமாதிரி உணர்ந்தான் என்றே புரியவில்லை.
வெறும் கையாடல் தான் செய்தான் என்று நினைத்திருக்க, தன்னுடைய அந்தரங்கத்தை படமெடுக்கும் அளவுக்கு போயிருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அதிலும் அந்த நேரத்தில் எல்லாம் அவனோடு வெகு சுமூகமாக உறவில் தானே இருந்தான். ஆனாலும் இந்த வேலையை செய்திருக்கிறான் என்றால் இவனெல்லாம் என்ன பிறவி?
இவன் மேலா நம்பிக்கை வைத்தேன்?
இவனையா தன் முகமாக சென்னையில் இருக்க அனுமதித்தேன்?
இவனது செயல்பாடுகள் அனைத்தையும் ஆதரித்தேனே?
இவன் இவ்வளவு கீழிறங்குவானா?
படம் எடுத்ததோடு நிற்காமல், மகாவிடம் காட்டியதும் இல்லாமல், ஊருக்கே அதை வெளிச்சமிட்டு காட்டியதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஆரம்பக்கட்ட அதிர்ச்சி எல்லாம் ஒரு சில நொடிகளுக்கு தான்!
“இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல மஹா?” கூர்மையாக அவளிடம் கேட்க,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!